ETV Bharat / state

குளிர்பதனப் பெட்டி வெடித்து பலியான சம்பவம்: மூச்சுத் திணறலில் இறந்ததாக முதற்கட்ட அறிக்கையில் தகவல்! - தனியார் தொலைக்காட்சி செய்தியாளர்

சென்னை: கிழக்கு தாம்பரம் பகுதியில் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் பிரசன்னா, அவரது மனைவி அர்ச்சனா, தாய் ரேவதி ஆகியோர் குளிர்பதனப் பெட்டி வெடித்து பலியான சம்பவத்தின் முதற்கட்ட பிரேத பரிசோதனையில் அவர்கள் மூச்சுத் திணறலில் உயிரிழந்ததாக தகவல் தெரியவந்துள்ளது.

சென்னை
author img

By

Published : Jun 30, 2019, 9:27 AM IST

சென்னை கிழக்கு தாம்பரம் பகுதியில் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் பிரசன்னா, அவரது மனைவி அர்ச்சனா, தாய் ரேவதி ஆகியோர் குளிர்பதனப் பெட்டி வெடித்து உயிரிழந்தனர். இந்த சம்பவம் பல்வேறு தரப்பினருக்கும் அதிர்ச்சியை அளித்தது. இந்நிலையில் விபத்து தொடர்பாக தடயவியல் நிபுணர் சோபியா தலைமையில் சோதனை செய்யப்பட்டது.

அதேபோல், முதற்கட்ட பிரேத பரிசோதனை அறிக்கையில் அதிகளவு புகையை சுவாசித்ததால் உயிரிழந்ததாகவும், சுவாச குழாய்கள், நுரையீரல் பகுதிகளில் அதிகளவு புகை உட்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிய வந்துள்ளது. மேலும் காவல்துறையினர் சார்பாகவும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை கிழக்கு தாம்பரம் பகுதியில் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் பிரசன்னா, அவரது மனைவி அர்ச்சனா, தாய் ரேவதி ஆகியோர் குளிர்பதனப் பெட்டி வெடித்து உயிரிழந்தனர். இந்த சம்பவம் பல்வேறு தரப்பினருக்கும் அதிர்ச்சியை அளித்தது. இந்நிலையில் விபத்து தொடர்பாக தடயவியல் நிபுணர் சோபியா தலைமையில் சோதனை செய்யப்பட்டது.

அதேபோல், முதற்கட்ட பிரேத பரிசோதனை அறிக்கையில் அதிகளவு புகையை சுவாசித்ததால் உயிரிழந்ததாகவும், சுவாச குழாய்கள், நுரையீரல் பகுதிகளில் அதிகளவு புகை உட்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிய வந்துள்ளது. மேலும் காவல்துறையினர் சார்பாகவும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Intro:Body:குளிர்பதனப் பெட்டி வெடித்து மூன்று பேர் பலியான சம்பவம்..

முதற்கட்ட பிரேத பரிசோதனை அறிக்கையில் மூச்சு திணறல் காரணமாக இறந்ததாக தகவல்..,

சென்னை கிழக்கு தாம்பரம் திருமங்கை மன்னன் தெருவை சேர்ந்தவர் பிரசன்னா(35).இவர் தனியார் தொலைக்காட்சியில் செய்தியாளராக பணிப்புரிந்து வந்தார்.இவரது அர்ச்சனா (31) மற்றும் பிரசன்னாவின் தாய் ரேவதி (52) இவர்களுடன் வசித்து வந்தனர்.

கடந்த 26ஆம் தேதி நள்ளிரவு பெய்த மழையால் அடிக்கடி மின் இணைப்பில் தொடர்ச்சியாக கோளாறு ஏற்பட்டுள்ளது..இதனால் மின்கசிவு ஏற்பட்டு இவர்களது வீட்டில் இருந்த குளிர் பதனப்பெட்டி வெடித்து சிதறியுள்ளது.மேலும் குளிர் பதன பெட்டியிலிருந்து வெளிவந்த கருமையான விஷவாயு புகையால் உறங்கி கொண்டிருந்த மூன்று பேரும் மூச்சு திணறி பலியாகினர்.

இதனை தொடர்ந்து காலை இவரது வீட்டில் பணிப்புரியும் பணிப்பெண் பல மணி நேரம் கதவை தட்டியும் திறக்காததால்,ஜன்னல் வழியாக எட்டி பார்க்கும் போது இறந்து உள்ளது தெரியவந்துள்ளது..

இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த சேலையூர் காவல் துறையினர் பிரேதத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக குரோம்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்..பின்னர் பிரேத பரிசோதனைக்கு பிறகு அடையாரில் உள்ள அவரது சகோதரி வீட்டில் உடல்களை அஞ்சலிக்காக வைத்தனர்..

பின்னர் பிரசன்னாவின் மறைவிற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, எதிர்க்கட்சி தலைவர் மு.க ஸ்டாலின் உட்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்களை தெரிவித்தனர் மேலும் தமிழக அரசு சார்பாக மூன்று லட்ச ரூபாய் ரூபாய் காசோலையை பிரசன்னாவின் குடும்பத்திற்கு நிதி உதவியாக முதலமைச்சர் வழங்கினார்..

பின்னர் விபத்து தொடர்பாக தடவியல் நிபுணர் சோபியா தலைமையில் உள்ள அதிகாரிகள் விபத்து நடைப்பெற்ற வீட்டை தீவிரமாக சோதனை செய்தனர்.மேலும் முதற்கட்ட பிரேத பரிசோதனை அறிக்கையில் முதற்கட்டமாக அதிகளவு புகையை சுவாசித்ததால் பலியாகி உள்ளதாக தெரிய வந்துள்ளது. மேலும் சுவாச குழாய்களிலும்,நுரையீரலிலும் அதிகளவு புகை உட்கொண்டு உள்ளதாக தெரியவந்துள்ளது..

மேலும் விபத்து ஏற்பட்ட போது பிரசன்னா செல்போனில் உதவிக்கு யாரையாவது அழைத்தாரா அல்லது டார்ச்லைட் வைத்து கொண்டு கதவை திறக்க முயற்சித்தாரா என்பது குறித்து போலிசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்..Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.