ETV Bharat / state

'கல்வியை காவிமயமாக்க பாஜக நினைக்கிறது..!' - கே.எஸ்.அழகிரி சாடல்

சென்னை: "கல்வியை அறிவுமயமாக்குவதை விட்டுவிட்டு, காவிமயமாக்க நினைக்கிறார்கள்" என்று, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.

author img

By

Published : Jul 6, 2019, 9:03 PM IST

கல்வியை காவிமயமாக்க நினைக்கிறார்கள் பாஜக -கே.எஸ்.அழகிரி!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பிற்படுத்தப்பட்டோர் பிரிவு மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட தலைவர்கள் ஆலோசனை கூட்டம் மாநில காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் இன்று நடைபெற்றது. மாநில தலைவர் கே.எஸ். அழகிரி, பிற்படுத்தப்பட்டோர் பிரிவின் தலைவர் நவின் ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

பின்னர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களிடம் கூறுகையில், "மோடி அரசு வரவு செலவு திட்டத்தை அறிவித்து உள்ளது. இதில் விளிம்பு நிலை மக்களுக்கு எந்த திட்டமும் இல்லை. இந்த பட்ஜெட்டில் கிராமப்புற வேலை வாய்ப்பான நூறு நாள் வேலை திட்டத்தின் நிதி குறைக்கப்பட்டுள்ளது. கல்வியை அறிவுமயமாக்குவதை விட்டுவிட்டு, காவிமயமாக்க பாஜக நினைக்கிறது" என்றார்.

கல்வியை காவிமயமாக்க நினைக்கிறார்கள் பாஜக -கே.எஸ்.அழகிரி!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பிற்படுத்தப்பட்டோர் பிரிவு மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட தலைவர்கள் ஆலோசனை கூட்டம் மாநில காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் இன்று நடைபெற்றது. மாநில தலைவர் கே.எஸ். அழகிரி, பிற்படுத்தப்பட்டோர் பிரிவின் தலைவர் நவின் ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

பின்னர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களிடம் கூறுகையில், "மோடி அரசு வரவு செலவு திட்டத்தை அறிவித்து உள்ளது. இதில் விளிம்பு நிலை மக்களுக்கு எந்த திட்டமும் இல்லை. இந்த பட்ஜெட்டில் கிராமப்புற வேலை வாய்ப்பான நூறு நாள் வேலை திட்டத்தின் நிதி குறைக்கப்பட்டுள்ளது. கல்வியை அறிவுமயமாக்குவதை விட்டுவிட்டு, காவிமயமாக்க பாஜக நினைக்கிறது" என்றார்.

கல்வியை காவிமயமாக்க நினைக்கிறார்கள் பாஜக -கே.எஸ்.அழகிரி!
Intro:Body:தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பிற்படுத்தப்பட்டோர் பிரிவு மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட தலைவர்கள் ஆலோசனை கூட்டம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று நடைபெற்றது. இதற்கு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பிற்படுத்தப்பட்டோர் பிரிவின் தலைவர் டி.ஏ.நவின் தலைமை தாங்கினார்.இந்த கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி, காங்கிரஸ் கமிட்டி செயலாளர்கள் சிரிவல்ல பிரசாத், சஜ்சய் தத், திருவள்ளூர் மாவட்டம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய கே.எஸ்.அழகிரி, “ மோடி அரசு வரவு செலவு திட்டத்தை அறிவித்து உள்ளது. விளிம்பு நிலை மக்களுக்கு எந்த திட்டமும் இல்லை,தமிழகத்திற்கு என்று எந்த திட்டமும் இல்லை,மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஹைட்ரோ கார்பன்,மீத்தேன் போன்ற திட்டம் மட்டுமே இங்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டில் கிராமப்புற வேலை வாய்ப்பான நூறு நாள் வேலை திட்டத்தின் நிதி குறைக்கப்பட்டுள்ளது. விளைப்பொருட்களுக்கு தகுந்த விலை கொடுப்பதே பிரதானம், அடிப்படை விஷயத்திலேயே இந்த அரசு தவறு இழைத்துள்ளது. பட்ஜெட்டில் புதிய பாசன வசதி குறித்து எந்த புதிய அறிவிப்பும் இல்லை, எனவே விவசாயம் அழிவை நோக்கி சென்று கொண்டுள்ளது. அந்நிய மூலதனம் வந்தால் மட்டுமே புதிய தொழிற்சாலை மற்றும் வேலை வாய்ப்பு கிடைக்கும்,ஆனால் அப்படி ஒரு நிலையே இல்லை. ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கொள்கை தான் இந்த பட்ஜெட். இதை தமிழக காங்கிரஸ் கமிட்டி வன்மையாக கண்டிக்கிறது.

புதிய கல்வி கொள்கை என்று கூறுகிறார்கள். இதில் அமெரிக்கா போன்ற நாடுகளில் இருந்து யாரும் வர போவதில்லை, ஆப்ரிக்கா,வளைகுடா நாடுகளில் இருந்து தான் நம் ஊருக்கு படிக்க வருவார்கள் அதனால் அதில் பெரிய வரவு கிடைக்க போவதில்லை. கல்வியில் காவி மயத்தை கொண்டு வர பார்க்கிறார்கள், கல்வியை அறிவுமயம் ஆக்க வேண்டும்.

நாட்டிற்காக,காங்கிரஸ் கட்சியை செம்மைப் படுத்துவதற்காக ராகுல் காந்தியை தன்னுடைய பதவியை இழந்து மற்றவருக்கு கொடுத்து உள்ளார். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவிக்கு புதிய தலைவர் நியமிப்பது குறித்து செயற்குழு கூட்டம் வரும் வாரத்தில் நடைபெற உள்ளது. கூட்டத்தின் முடிவை அனைவரும் ஏற்றுக்கொள்வோம்” என்று கூறினார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.