ETV Bharat / state

பொள்ளாச்சி வழக்கில் சிபிஐ இயக்குநர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு - CBI

சென்னை: பொள்ளாச்சி பாலியல் வழக்கை சிபிஐ விசாரிக்கும்போது அவை நீதிமன்ற மேற்பார்வையில் நடத்தப்படுவது தொடர்பான வழக்கில் தமிழக அரசு, டிஜிபி, சிபிஐ இயக்குநர் ஆகியோர் பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம்
author img

By

Published : Mar 19, 2019, 1:57 PM IST

பொள்ளாச்சி பாலியல் சம்பவ வழக்கின் சிபிஐ விசாரணையை நீதிமன்ற மேற்பார்வையில் நடத்த வேண்டும் என வழக்குரைஞர் ஒருவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுவை தாக்கல் செய்திருந்தார்.

சென்னை உயர் நீதிமன்ற வழக்குரைஞர் புகழேந்தி தாக்கல் செய்த மனுவில், பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்லும் பெண்களை ஒரு கும்பல் பாலியல் கொடுமை செய்துள்ளது.

இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவி கொடுத்த புகார் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும், மாணவியின் சகோதரரை, பாலியல் கொடுமை செய்த கும்பல் தாக்கியதாகவும், மிரட்டியதாகவும் மற்றொரு குற்ற வழக்கும் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றி தமிழ்நாடு அரசு மார்ச் 13ஆம் தேதி அரசாணை வெளியிட்டுள்ளது. ஆனால், அரசாணையில் புகாரளித்த மாணவியின் பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளது. நிபுன் சக்சேனா வழக்கில் பாலியல் கொடுமையில் சிக்கிய பெண்ணின் பெயர் உள்ளிட்ட எந்த அடையாளத்தையும் வெளியிடக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

ஆனால், உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரையும் அரசாணையில் வெளியிட்டுள்ளது. அதனால், வழக்கு நேர்மையாக நடைபெற உயர் நீதிமன்ற மேற்பார்வையில் சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் தலைமை நீதிபதி தஹிலரமானி, துரைசாமி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இந்த வழக்கு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது, பொள்ளாச்சி விவகாரம் குறித்து சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட்டிருக்கும்போது நீதிமன்றம் ஏன் தலையிட வேண்டும் என நீதிபதி கேள்வி எழுப்பினர்.

இதற்கு, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் ராதாகிருஷ்ணன், நீதிமன்ற மேற்பார்வையில் சிபிஐ விசாரணை நடைபெற்றால் வழக்கு மீதான விசாரணை தீவிரப்படுத்தப்படும் எனத் தெரிவித்தார்.

இதையடுத்து இவ்வழக்கு தொடர்பாக தமிழக அரசு, டிஜிபி, சிபிஐ இயக்குநர் பதிலளிக்க வேண்டும் எனக்கூறிய நீதிபதிகள் அமர்வு, வழக்கை ஏப்ரல் 10ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

பொள்ளாச்சி பாலியல் சம்பவ வழக்கின் சிபிஐ விசாரணையை நீதிமன்ற மேற்பார்வையில் நடத்த வேண்டும் என வழக்குரைஞர் ஒருவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுவை தாக்கல் செய்திருந்தார்.

சென்னை உயர் நீதிமன்ற வழக்குரைஞர் புகழேந்தி தாக்கல் செய்த மனுவில், பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்லும் பெண்களை ஒரு கும்பல் பாலியல் கொடுமை செய்துள்ளது.

இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவி கொடுத்த புகார் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும், மாணவியின் சகோதரரை, பாலியல் கொடுமை செய்த கும்பல் தாக்கியதாகவும், மிரட்டியதாகவும் மற்றொரு குற்ற வழக்கும் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றி தமிழ்நாடு அரசு மார்ச் 13ஆம் தேதி அரசாணை வெளியிட்டுள்ளது. ஆனால், அரசாணையில் புகாரளித்த மாணவியின் பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளது. நிபுன் சக்சேனா வழக்கில் பாலியல் கொடுமையில் சிக்கிய பெண்ணின் பெயர் உள்ளிட்ட எந்த அடையாளத்தையும் வெளியிடக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

ஆனால், உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரையும் அரசாணையில் வெளியிட்டுள்ளது. அதனால், வழக்கு நேர்மையாக நடைபெற உயர் நீதிமன்ற மேற்பார்வையில் சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் தலைமை நீதிபதி தஹிலரமானி, துரைசாமி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இந்த வழக்கு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது, பொள்ளாச்சி விவகாரம் குறித்து சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட்டிருக்கும்போது நீதிமன்றம் ஏன் தலையிட வேண்டும் என நீதிபதி கேள்வி எழுப்பினர்.

இதற்கு, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் ராதாகிருஷ்ணன், நீதிமன்ற மேற்பார்வையில் சிபிஐ விசாரணை நடைபெற்றால் வழக்கு மீதான விசாரணை தீவிரப்படுத்தப்படும் எனத் தெரிவித்தார்.

இதையடுத்து இவ்வழக்கு தொடர்பாக தமிழக அரசு, டிஜிபி, சிபிஐ இயக்குநர் பதிலளிக்க வேண்டும் எனக்கூறிய நீதிபதிகள் அமர்வு, வழக்கை ஏப்ரல் 10ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.