ETV Bharat / state

விவி பேட் இயந்தரத்தால் நம்பகத்தன்மை அதிகரிப்பு - நடிகர் கார்த்திக் - Actor Karthick

சென்னை: விவி பேட் மூலம் வாக்குப்பதிவு அறியப்படுவதால் மின்னணு வாக்குப்பதிவின் மீதான நம்பகத்தன்மை அதிகரித்துள்ளது என்று நடிகர் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

நடிகர் கார்த்திக்
author img

By

Published : Apr 18, 2019, 3:39 PM IST

Updated : Apr 18, 2019, 5:56 PM IST

சென்னை லயோலா கல்லூரியில் உள்ள வாக்குப்பதிவு மையம் 229-ல் நடிகர் கார்த்திக் தனது வாக்கை பதிவு செய்தார். அவருடை மகனும், நடிகருமான கெளதம் கார்த்திக்கும் உடன் வந்திருந்தார். அவர்கள் இருவரும் வரிசையில் நின்று மக்களோடு வாக்கை பதிவு செய்தனர்.


இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், காலையிலேயே வாக்கை பதிவு செய்தது மகிழ்ச்சியாக உள்ளது. அனைவரும் வாக்குப் பதிவு செய்ய வேண்டும். மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளை வாக்காளர்கள் பார்ப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள விவி பேட் வசதியானது பயனுள்ளதாக இருக்கிறது. இதன் மூலம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மீது இருந்த சந்தேகங்கள் குறையும்.

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மீண்டும் வாக்குச்சீட்டு முறை வேண்டும் என கூறியுள்ளது குறித்து கேட்டதற்கு, ஒவ்வொருவருக்கும் ஒரு மாதிரியான கருத்து இருக்கும். சில சமயம் நாம் கூட பழைய முறை வேண்டும் எனக் கருதுவோம். மின்னணு பொருட்களை பொறுத்த வரை எவ்வளவுதான் சரியாக செய்தாலும், சில சமயம் தவறு நடக்கலாம். இதுபோன்ற செயல்களுக்கு இரண்டு முறை என்பது மேலும் உறுதிப்படுத்துவதாக அமையும்.

விவி பேட் இயந்தரத்தால் நம்பகத்தன்மை அதிகரிப்பு - நடிகர் கார்த்திக்

தீவிர அரசியலில் இருந்து நீங்கள் ஒதுங்கி விட்டீர்களா? என கேட்டதற்கு, ஆமாம் ரொம்ப வெயில் என சிரித்துக்கொண்டே பதில் அளித்தார். பின்னர் இந்த முறை பிரச்சாரத்துக்கு சென்றேன். பொறுத்திருந்து பார்ப்போம் எனக் கூறினார்.

சென்னை லயோலா கல்லூரியில் உள்ள வாக்குப்பதிவு மையம் 229-ல் நடிகர் கார்த்திக் தனது வாக்கை பதிவு செய்தார். அவருடை மகனும், நடிகருமான கெளதம் கார்த்திக்கும் உடன் வந்திருந்தார். அவர்கள் இருவரும் வரிசையில் நின்று மக்களோடு வாக்கை பதிவு செய்தனர்.


இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், காலையிலேயே வாக்கை பதிவு செய்தது மகிழ்ச்சியாக உள்ளது. அனைவரும் வாக்குப் பதிவு செய்ய வேண்டும். மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளை வாக்காளர்கள் பார்ப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள விவி பேட் வசதியானது பயனுள்ளதாக இருக்கிறது. இதன் மூலம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மீது இருந்த சந்தேகங்கள் குறையும்.

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மீண்டும் வாக்குச்சீட்டு முறை வேண்டும் என கூறியுள்ளது குறித்து கேட்டதற்கு, ஒவ்வொருவருக்கும் ஒரு மாதிரியான கருத்து இருக்கும். சில சமயம் நாம் கூட பழைய முறை வேண்டும் எனக் கருதுவோம். மின்னணு பொருட்களை பொறுத்த வரை எவ்வளவுதான் சரியாக செய்தாலும், சில சமயம் தவறு நடக்கலாம். இதுபோன்ற செயல்களுக்கு இரண்டு முறை என்பது மேலும் உறுதிப்படுத்துவதாக அமையும்.

விவி பேட் இயந்தரத்தால் நம்பகத்தன்மை அதிகரிப்பு - நடிகர் கார்த்திக்

தீவிர அரசியலில் இருந்து நீங்கள் ஒதுங்கி விட்டீர்களா? என கேட்டதற்கு, ஆமாம் ரொம்ப வெயில் என சிரித்துக்கொண்டே பதில் அளித்தார். பின்னர் இந்த முறை பிரச்சாரத்துக்கு சென்றேன். பொறுத்திருந்து பார்ப்போம் எனக் கூறினார்.

Intro:விவி பேட் மூலம் வாக்கு பதிவு அறிவதால்
மின்னனு வாக்கு பதிவு நம்பகத்தன்மை அதிகரிப்பு
நடிகர் கார்த்தி பேட்டி


Body:சென்னை, சென்னை லயோலா கல்லூரியில் உள்ள வாக்குப்பதிவு மையம் 229 நடிகர் கார்த்தி தனது வாக்கினை பதிவு செய்தார். மேலும் அவர் வாக்கு பதிவு செய்ய வந்தபோது வரிசையில் நின்று ஓட்டு போட்டார்.
வாக்குப்பதிவு மையத்திற்குள் இருந்த அலுவலர்கள் மற்றும் முகவர்களுக்கு கைகுலுக்கி வாக்குப் பதிவு செய்ததற்கான நன்றியை தெரிவித்துக் கொண்டார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், காலையில் தனது வாக்கினை பதிவு செய்தது மகிழ்ச்சியாக உள்ளது. நீங்களும் வாக்குப் பதிவு செய்ய வேண்டும்.
மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகள் வாக்காளர் பார்ப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள விவி பேட் வசதியானது பயனுள்ளதாக இருக்கிறது. அந்த இயந்திரத்தில் பதிவு செய்த வாக்கிற்கான புகைப்படம் வருகிறது. அது பின்னர் அந்த இயந்திரத்திற்குள் விழுந்து விடுகிறது. இதனால் கூடுதலாக வாக்குப் பதிவு செய்து அதை உறுதிசெய்ய முடியும். இதனால் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் மீது இருந்த சந்தேகங்கள் குறையும்.
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மீண்டும் வாக்குச்சீட்டு முறை வேண்டும் என கூறியுள்ளது குறித்து கேட்டதற்கு, ஒவ்வொருவருக்கும் ஒரு மாதிரியான கருத்து இருக்கும். சில சமயம் நாம் கூட பழைய முறை வேண்டும் எனக் கருதுவோம். எலக்ட்ரானிக் பொருளைப் பொருத்த வரை எவ்வளவுதான் சரியாக செய்தாலும் சில சமயம் தவறு நடக்கலாம். இதுபோன்ற செயல்களுக்கு இரண்டு முறை என்பது மேலும் உறுதிப்படுத்துவதாக அமையும்.
தீவிர அரசியலில் இருந்து நீங்கள் ஒதுங்கி விட்டீர்களா ?என கேட்டதற்கு, ஆமாம் ரொம்ப வெயில் என சிரித்துக்கொண்டே பதில் அளித்தார். பின்னர் இந்த முறை பிரச்சாரத்திற்கு சென்றேன் புதிய கட்சி இருக்கு செய்துள்ளேன் பொருத்திருந்து பார்ப்போம் என கூறினார்.


Conclusion:
Last Updated : Apr 18, 2019, 5:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.