அரியலூர் மாவட்டம் பெரிய கிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் (32). இவர் அதே பகுதியைச் சேர்ந்த நான்கு வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதனையடுத்து இது குறித்து சிறுமியின் தாயார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அப்புகாரின் பேரில் ஆண்டிமடம் காவல் துறையினர் வழக்குப்பதிந்து மணிகண்டனை கைதுசெய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
தொடர்ந்து சிறுமி சிகிச்சைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சைப் பெற்றுவருகிறார்.
இதையும் படிங்க: சாலைப் பணிகளை ஆய்வுசெய்த அரியலூர் ஆட்சியர்