ETV Bharat / state

காவனூர் பாலத்தை உயர் மட்ட பாலமாக கட்டித்தர பொதுமக்கள் கோரிக்கை! - Request to build Valangudi - Kavanoor Bridge in Ariyalur

அரியலூர்: பதினைந்து கிராம மக்கள் பயன்படுத்தும் ஓடை தரைப்பாலத்தை உயர்மட்ட பாலமாக அமைத்துத் தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரியலூரில் பாலம் கட்டிதர பொதுமக்கள் கோரிக்கை அரியாலூரில் விளாங்குடி- காவனூா் பாலத்தை கட்டித்தர கோரிக்கை காவனூா் ஓடைத்தரை பாலத்தை கட்டித்தர பொது மக்கள் கோரிக்கை Public demand for bridge construction in Ariyalur Request to build Valangudi - Kavanoor Bridge in Ariyalur Public demand for the construction of the Kavanoor Outer Bridge
Request to build Valangudi - Kavanoor Bridge in Ariyalu
author img

By

Published : Dec 1, 2019, 12:11 PM IST

Updated : Dec 1, 2019, 3:27 PM IST

அரியலூர் மாவட்டம் விளாங்குடி- காவனூா் அம்பாப்பூா் பகுதியை இணைக்கும் வகையில் சுத்தமல்லி ஓடை தரைப்பாலம் உள்ளது. இந்தப் பாலத்தின் வழியே காவனூர், அம்பாப்பூா், காத்தான்குடிகாடு, கிளிமங்கலம் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் நாள்தோறும் அரியலூர் செல்ல பயன்படுத்தி வந்தனர்.

இந்நிலையில், தற்போது அரியலூர் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக சுத்தமல்லி ஓடை தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியுள்ளது. இதனால், அரியலூருக்கு வந்த பொதுமக்கள் மீண்டும் பாலத்தைக் கடந்து அக்கரைக்குச் செல்ல முடியாமல் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இதன் காரணமாக பத்து இளைஞர்கள் ஒன்று சேர்ந்து பாலத்தைக் கடக்க முடியாமல் தவிக்கும் பொதுமக்களை இருசக்கர வாகனத்தில், ஒரு கரையிலிருந்து மறு கரைக்குக் கொண்டு சென்று விடுகின்றனர். இதுவும் பகல் நேரத்தில் மட்டுமே முடியும் எனவும்; மழைக் காலங்களில் இதுபோன்ற போக்குவரத்துத் தடை ஏற்பட்டுள்ளது என கிராம மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

காவனூர் பாலத்தை உயர்மட்ட பாலமாக கட்டிதர பொதுமக்கள் கோரிக்கை
மேலும், அவசரமான காலங்களில் ஆபத்தான பயணத்தை மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலையுள்ளது எனவும் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

இதனிடையே, தங்களுக்கு உயர் மட்ட பாலம் அமைத்துத் தர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:

மயானத்திற்குச் செல்ல பாலம் கேட்டு கிராம மக்கள் மனு!

அரியலூர் மாவட்டம் விளாங்குடி- காவனூா் அம்பாப்பூா் பகுதியை இணைக்கும் வகையில் சுத்தமல்லி ஓடை தரைப்பாலம் உள்ளது. இந்தப் பாலத்தின் வழியே காவனூர், அம்பாப்பூா், காத்தான்குடிகாடு, கிளிமங்கலம் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் நாள்தோறும் அரியலூர் செல்ல பயன்படுத்தி வந்தனர்.

இந்நிலையில், தற்போது அரியலூர் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக சுத்தமல்லி ஓடை தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியுள்ளது. இதனால், அரியலூருக்கு வந்த பொதுமக்கள் மீண்டும் பாலத்தைக் கடந்து அக்கரைக்குச் செல்ல முடியாமல் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இதன் காரணமாக பத்து இளைஞர்கள் ஒன்று சேர்ந்து பாலத்தைக் கடக்க முடியாமல் தவிக்கும் பொதுமக்களை இருசக்கர வாகனத்தில், ஒரு கரையிலிருந்து மறு கரைக்குக் கொண்டு சென்று விடுகின்றனர். இதுவும் பகல் நேரத்தில் மட்டுமே முடியும் எனவும்; மழைக் காலங்களில் இதுபோன்ற போக்குவரத்துத் தடை ஏற்பட்டுள்ளது என கிராம மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

காவனூர் பாலத்தை உயர்மட்ட பாலமாக கட்டிதர பொதுமக்கள் கோரிக்கை
மேலும், அவசரமான காலங்களில் ஆபத்தான பயணத்தை மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலையுள்ளது எனவும் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

இதனிடையே, தங்களுக்கு உயர் மட்ட பாலம் அமைத்துத் தர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:

மயானத்திற்குச் செல்ல பாலம் கேட்டு கிராம மக்கள் மனு!

Intro:அரியலூர் - தொடர்மழை காரணமாக ஓடை தரை பாலம் மூழ்கியது 15 கிராம மக்கள் போக்குவரத்து துண்டிப்பு - பொது மக்கள் ஓடையை கடக்க உதவி செய்து வரும் கிராமத்து இளைஞா்கள் - மேம் பாலம் கட்டி தர வேண்டும் என பொது மக்கள் கோரிக்கைBody:அரியலூர் மாவட்டம் விளாங்குடியையும் - காவனூா் அம்பாப்பூா் பகுதியை இணைக்கும் வகையில் சுத்தமல்லி ஓடை தரைப்பாலம் உள்ளது. இந்த பாலத்தின் வழியே தான் காவனூர், அம்பாப்பூா் காவனூர்,காத்தான்குடிகாடு, கிளிமங்கலம் உள்ளிட்ட 15 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அரியலூருக்கு வந்து செல்ல இந்த இந்த தரை பாலத்தை தான் பயன்படுத்துகின்றனர்.

இங்குள்ள அண்ணா பொறியியல் கல்லூரிக்கு நாள்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் இந்த பாலத்தின் வழியாக தான் கல்லூரிக்கு செல்ல வேண்டும்.


இந்நிலையில் தற்போது அரியலூர் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக சுத்தமல்லி ஓடை தரைப்பாலத்தை தண்ணீரில் மூழ்கி செல்கின்றது.

ஆனால் வெளியூருக்கு வந்து மீண்டும் கிராமத்திற்கு செல்லும் மக்கள் தரை பாலத்தை கடக்க முடியாமல் தவித்தனர்.
இதனைத் தொடர்ந்து கிராம இளைஞர்கள் 10 பேர் இருசக்கர வாகனத்தில் வரும் பொதுமக்களை இந்த கரையிலிருந்து அந்த கரைக்கு சென்று பத்திரமாக விட்டுவந்தனா். இதுவும் பகல் நேரத்தில் மட்டுமே முடியும் இரவு நேரத்தில் செய்ய முடியாது எனவே மழைக் காலங்களில் இதுபோன்ற வெள்ள நீரால் தங்களுக்கு போக்குவரத்து தடை ஏற்படுகின்றது என்று கிராம மக்கள் மிகுந்த வேதனையுடன் தெரிவித்தனர்.

மழைக்காலங்களில் ஒரு அவசரத்திற்க்கு கூட செல்ல வெளியில் வர முடியாது 108 ஆம்புலைன்ஸ் கூட வர முடியாத நிலையில் தண்ணீர் வருவதாகவும் இது மேலே செல்லும் பொழுது மிகுந்த பயத்துடன் ஆபத்தான பயணத்தை மேற்கொள்ள வேண்டியுள்ளது எனவும் அவர்கள் கூறினர். Conclusion:எனவே தங்களுக்கு உயர்மட்ட பாலம் அமைத்து தர வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்தனர்.
Last Updated : Dec 1, 2019, 3:27 PM IST

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.