அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் கோடாலிகருப்பூர் வக்ரமாரி வன்னியர் தெருவில் 750 மீட்டர் தூரம் தார்சாலை அமைக்கும் பணி 3 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் பணி நடைபெற்றுவருகிறது. அப்படி அமைக்கப்படும் சாலை தரமற்றுள்ளதாக அப்பகுதி மக்கள் சாலை அமைக்கும் ஊழியர்களிடம் தெரிவித்தனர்.
இருந்தும் சாலை தொடர்ந்து தரமற்று போடப்பட்டுவந்ததால், சாலை அமைக்க பயன்படுத்தும் வாகனங்களை அப்பகுதி மக்கள் சிறை பிடித்தனர். தகவலறிந்த தா.பழூர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி முறையாக சாலை அமைக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டதை அடுத்து வாகனங்கள் விடுவிக்கப்பட்டன.
இதையும் படிங்க: 30 வருடங்களுக்கு முன்பு போடப்பட்ட தார்ச் சாலை, தவிக்கும் ’சிக்கல்’ கிராம மக்கள் - செவி சாய்க்குமா அரசு?