ETV Bharat / state

வாட்ஸ்அப்பில் இனவெறியைத் தூண்டிய நபர் கைது!

அரியலூர்: இனவெறியைத் தூண்டும் வகையில் வாட்ஸ்அப்பில் காணொளி வெளியிட்ட நபரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

author img

By

Published : Apr 30, 2019, 8:10 AM IST

காணொளி மூலம் இனவெறி தூண்டிய நபர் கைது

அரியலூர் மாவட்டம், உதயநத்தம் காலணி தெருவைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணனின் மகன் ஆனந்த் (25).

இவர், மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் ஜெ.குரு பேசியதுபோன்று ஆடியோவுடன் பாமக கொடியுடன் சிலர் நடந்துபோவது போன்ற டிக்டாக் செயலி மூலம் காணொளி பதிவிட்டு, வாட்ஸ்அப்பில் பகிர்ந்துள்ளார்.

வாட்ஸ்ஆப்பில் வெளிவந்த காணொளி
வாட்ஸ்அப்பில் வெளிவந்த காணொளி

இதனை அறிந்த உதய நத்தம் கிராம நிர்வாக அலுவலர் சண்முக கார்த்திகேயன், அந்த காணொளி இனவெறியைத் தூண்டும் வகையிலும், பொது அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் வகையிலும் இருப்பதாகக் கூறி ஆனந்த் மீது காவல் துறையில் புகார் அளித்தார். இதன்பேரில், ஆனந்தை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அரியலூர் மாவட்டம், உதயநத்தம் காலணி தெருவைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணனின் மகன் ஆனந்த் (25).

இவர், மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் ஜெ.குரு பேசியதுபோன்று ஆடியோவுடன் பாமக கொடியுடன் சிலர் நடந்துபோவது போன்ற டிக்டாக் செயலி மூலம் காணொளி பதிவிட்டு, வாட்ஸ்அப்பில் பகிர்ந்துள்ளார்.

வாட்ஸ்ஆப்பில் வெளிவந்த காணொளி
வாட்ஸ்அப்பில் வெளிவந்த காணொளி

இதனை அறிந்த உதய நத்தம் கிராம நிர்வாக அலுவலர் சண்முக கார்த்திகேயன், அந்த காணொளி இனவெறியைத் தூண்டும் வகையிலும், பொது அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் வகையிலும் இருப்பதாகக் கூறி ஆனந்த் மீது காவல் துறையில் புகார் அளித்தார். இதன்பேரில், ஆனந்தை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

*அரியலூர் - டிக் டாக்கில்  காடுவெட்டி குரு பேசும் அடியோவை பயன்படுத்தி மிரட்டுவது போல வாட்சப்பில் வெளியிட்ட ஒருவர் கைது*


அரியலூர் மாவட்டம் உதயநத்தம் காலனி தெருவைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் மகன் ஆனந்த் 25 என்பவர் மறைந்த மாநில வன்னியர் சங்கத் தலைவர் ஜெ குரு பேசியது போன்ற ஆடியோவுடன் பாமக கொடியுடன் சிலர் நடந்து போவது போன்ற  வீடியோவை ஆனந்த் என்பவர் வாட்ஸ் அப்பில் மீசையை முறுக்கி கட்டையை காட்டி மிரட்டுவது போன்ற வீடியோவை வெளியிட்டுள்ளார்.

இதனை அறிந்த உதய நத்தம் கிராம நிர்வாக அலுவலர் சண்முக கார்த்திகேயன் இனவெறியை தூண்டும் வகையில் வாட்ஸ் அப் வெளியிட்டுள்ளதாக இரு சமூகத்திற்கும் இடையே பகை உணர்வை தூண்டும் மற்றும் விரோதத்தை தூண்டும் வகையிலும் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலும் அனைவரும் பார்க்குமாறு வாட்ஸ் அப்பில் வீடியோ பரப்புரை செய்ததாக தற்போது காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.



 இதனையடுத்து உதயநத்தத்தை சேர்ந்த ஆனந்த் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.