ETV Bharat / state

பேனர் தடை எதிரொலி: தேர்தலுக்காக அச்சகங்களில் குவியும் வேட்பாளர்கள்!

author img

By

Published : Dec 22, 2019, 1:18 PM IST

அரியலூர்: உள்ளாட்சித் தேர்தலுக்காகத் துண்டுப் பிரசுரங்கள், சுவரொட்டிகளை தயார் செய்ய வேட்பாளர்கள் அச்சகங்களில் குவிந்துள்ளனர். ’பிளக்ஸ் பேனர்’ தடையால் அச்சகங்களுக்கு அதிகப்படியான ஆர்டர்கள் வரத் தொடங்கியுள்ளன.

election
election

சுவரொட்டிகளுக்கு மவுசு!

தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெறுகிறது. அரியலூர் மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டுள்ளது.

வேட்பாளர்கள் தங்களுடைய சின்னம் - புகைப்படங்கள் இடம்பெற்ற துண்டுப் பிரசுரங்கள், சுவரொட்டிகளைத் தயார் செய்ய வேட்பாளர்கள் அச்சகங்களில் குவிந்துள்ளனர். தேர்தலுக்கு இன்னும் சில நாள்கள் மட்டுமே இருப்பதால் வேட்பாளர்கள் தங்களுடைய சின்னம், புகைப்படம் இடம்பெற்ற துண்டுப் பிரசுரங்களை மக்களிடம் கொண்டசேர்க்க முனைப்பு காட்டிவருகின்றனர்.

குவியும் 'ஆர்டர்கள்'

அனைத்து மின் அச்சகங்களிலும் துண்டுப் பிரசுரங்களை கணினியில் வடிவமைத்தல், வடிவமைத்தவற்றை பிரசுரங்களாக அச்சடிப்பது என்று அச்சகங்களில் இரவு பகலாக பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன.

அச்சகங்களில் வேட்பாளர்கள் குவிந்துள்ளதால், அச்சகப் பணியாளர்கள் கூடுதல் பணியினை மேற்கொண்டுள்ளனர். உள்ளாட்சித் தேர்தல் நேரத்தில் அதிகப்படியான ஆர்டர்கள் வந்துள்ளதால் பணியாளர்களும் மகிழ்ச்சியுடன் பணியாற்றுகின்றனர்.

வாக்காளப் பெருமக்களே!

கிராமங்களின் சுவர்களில் வேட்பாளர்களின் சின்னம், பிரசுரங்கள், சுவரொட்டிகள் ஆகியவற்றில், 'எனதருமை வாக்காளப் பெருமக்களே!' உள்ளிட்ட வாசகங்கள் கண்ணைக் கவர தொடங்கியுள்ளன.

விறுவிறுப்பாக நடைபெறும் அச்சகப் பணிகள்

பிளக்ஸ் பேனரால் பாதிக்கப்பட்டு பின்நோக்கிச் சென்றுகொண்டிருந்த அச்சகத் தொழிலுக்கு தற்போது நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக அதன் உரிமையாளர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க: அரியலூர் உள்ளாட்சித் தேர்தல் - வாக்குப்பெட்டிகள் சீரமைப்பு..!

சுவரொட்டிகளுக்கு மவுசு!

தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெறுகிறது. அரியலூர் மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டுள்ளது.

வேட்பாளர்கள் தங்களுடைய சின்னம் - புகைப்படங்கள் இடம்பெற்ற துண்டுப் பிரசுரங்கள், சுவரொட்டிகளைத் தயார் செய்ய வேட்பாளர்கள் அச்சகங்களில் குவிந்துள்ளனர். தேர்தலுக்கு இன்னும் சில நாள்கள் மட்டுமே இருப்பதால் வேட்பாளர்கள் தங்களுடைய சின்னம், புகைப்படம் இடம்பெற்ற துண்டுப் பிரசுரங்களை மக்களிடம் கொண்டசேர்க்க முனைப்பு காட்டிவருகின்றனர்.

குவியும் 'ஆர்டர்கள்'

அனைத்து மின் அச்சகங்களிலும் துண்டுப் பிரசுரங்களை கணினியில் வடிவமைத்தல், வடிவமைத்தவற்றை பிரசுரங்களாக அச்சடிப்பது என்று அச்சகங்களில் இரவு பகலாக பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன.

அச்சகங்களில் வேட்பாளர்கள் குவிந்துள்ளதால், அச்சகப் பணியாளர்கள் கூடுதல் பணியினை மேற்கொண்டுள்ளனர். உள்ளாட்சித் தேர்தல் நேரத்தில் அதிகப்படியான ஆர்டர்கள் வந்துள்ளதால் பணியாளர்களும் மகிழ்ச்சியுடன் பணியாற்றுகின்றனர்.

வாக்காளப் பெருமக்களே!

கிராமங்களின் சுவர்களில் வேட்பாளர்களின் சின்னம், பிரசுரங்கள், சுவரொட்டிகள் ஆகியவற்றில், 'எனதருமை வாக்காளப் பெருமக்களே!' உள்ளிட்ட வாசகங்கள் கண்ணைக் கவர தொடங்கியுள்ளன.

விறுவிறுப்பாக நடைபெறும் அச்சகப் பணிகள்

பிளக்ஸ் பேனரால் பாதிக்கப்பட்டு பின்நோக்கிச் சென்றுகொண்டிருந்த அச்சகத் தொழிலுக்கு தற்போது நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக அதன் உரிமையாளர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க: அரியலூர் உள்ளாட்சித் தேர்தல் - வாக்குப்பெட்டிகள் சீரமைப்பு..!

Intro:அரியலூர் - இரவு -பகல் பாராது இயங்கும் அச்சகங்கள் : சின்னங்களை பொதுமக்களிடம் சேர்க்க துடிக்கும் வேட்பாளர்கள்
உள்ளாட்சி திருவிழாவாக அமைந்துள்ளதாக பணியாளர்கள் மற்றும் முதலாளிகள் மகிழ்ச்சிBody:அரியலூர் ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு சின்னங்களை ஒதுக்கியுள்ள நிலையில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அச்சகங்களிலும் வேட்பாளர்கள் தங்களது புகைப்படங்களுடன் கூடிய விளம்பர பதாகைகளை தயார்செய்யும் பணியில் உள்ளனர். இதனால் அச்சகங்கள் இரவு பகல் முழுவதும் இயங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வரும் 27 மற்றும் 30ம்தேதி இருகட்டங்களாக நடைபெறுகிறது. அரியலூர் மாவட்டத்தில் 1988 பதவிகளில் மூன்று கிராம ஊராட்சி தலைவர்கள் போட்டியின்றி தேர்வுசெய்யப்பட்டுள்ளனர். தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு சின்னங்கள் இன்று ஒதிக்கீடு செய்யப்பட்டு இறுதி செய்யப்பட்டதால் வேட்பாளர்கள் அனைவரும் அச்சகங்களில் குவிந்துள்ளனர். தங்களுக்கு ஒதுக்கப்பட்ட சின்னம் மற்றும் தங்களுடைய புகைப்படங்களை போட்டு துண்டு பிரசுரங்களும், சுவரொட்டிகளும் தயார் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தேர்தலுக்கு இன்னும் ஏழுதினங்களே உள்ளதால் பொதுமக்களை சந்திக்கும் போது தங்களுடைய சின்னங்களை அறிமுகப்படுத்த துன்டு பிரசுரங்கள் தயார் செய்து வருகின்றனர்.

அனைத்து மின்அச்சங்களிலும் மாலை ஆறுமணி முதல் கம்யூட்டரில் டிசைன் செய்வது, செய்யப்பட்ட டிசைனை சிங்கில் கலர் மற்றும் மல்டிகலர் பிரசுரங்களாக அச்சடிப்பது என்று அச்சகங்களில் இரவுபகல் பாராது பணிகள் நடைபெறத் தொடங்கியுள்ளது.

இதனால் அனைத்து அச்சகங்களிலும் வேட்பாளர்கள் குவிந்து வருவதால் அச்சக பணியாளர்கள் கூடுதல் பணியினை மேற்கொண்டுள்ளனர். இதனால் அச்சகத்தில் வேலை செய்யும் பணியாளர்கள், டிசைனர்கள் இவர்கள் அனைவரும் உள்ளாட்சி திருவிழா என்ற அர்த்தத்தில் மகிழ்ச்சியுடன் பணியாற்றி வருகின்றனர்.

மேலும் பிளக்ஸ் தடையால் பாதிக்கப்பட்ட தங்களுடைய தொழில் உள்ளாட்சித் தேர்தலில் விரிவடைந்துள்ளது எனவும்.

கடந்த மூன்று நாட்களாக இரவு பகல் பாராமல் பணி மேற்கொண்டு வருவதாகவும் இன்னும் பத்து நாட்களுக்கு தங்களது பணி இருக்கும் எனவும் நம்பிக்கையுடன் தெரிவித்தனர்.


இந்த உள்ளாட்சித் தேர்தலில் பரபரப்பான வேலை வருகின்ற பொங்கல் தங்களுக்கு தித்திக்கும் பொங்கலாக அமையும் எனவும் சக பணியாளர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

Conclusion:இன்று கிராமங்களின் சுவர்களில் வேட்பாளர்களின் சின்னம் மற்றும் புகைப்படம் தாங்கிய பதாகைகள் இடம் பெற்று பட்டிதொட்டியெல்லாம் எனதருமை வாக்காளப்பெருமக்களே என்ற குரல் ஒலிக்க தொடங்கியுள்ளது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.