ETV Bharat / state

"இறந்து மிதக்கும் மீன்களால் நோய் ஏற்படும் அபாயம்"

அரியலூர்: திருக்குளம் ஏரியில் மீன்கள் இறந்து மிதப்பதால் துர்நாற்றம் வீசுவதுடன், நோய் பரவும் அபாயம் உள்ளதாக, அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இறந்து மிதக்கும் மீன்கள்
author img

By

Published : Jul 17, 2019, 10:57 AM IST

அரியலூர் மாவட்டம் விளாங்குடி கிராமத்தில் திருச்சி - சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள பகுதியில் அமைந்துள்ளது திருக்குளம் ஏரி. இதன் அருகே உள்ள வீடுகள், கடைகளின் கழிவு நீர் ஏரியில் விடப்படுவதால் மாசடைந்து காணப்படுகிறது.

சில நாட்களாக இந்த ஏரியில் உள்ள மீன்கள் அனைத்தும் இறந்து கரையோரத்தில் மிதக்கின்றன. இதனால் ஏரியில் துர்நாற்றம் வீசுவதால், சாலைகளில் செல்வோர் பாதிக்கப்படுகின்றனர். இதன் காரணமாக அப்பகுதி மக்களுக்கு பல்வேறு நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, ஊராட்சி நிர்வாகமும், மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொண்டு ஏரியை சுத்தப்படுத்த வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இறந்து மிதக்கும் மீன்கள்

அரியலூர் மாவட்டம் விளாங்குடி கிராமத்தில் திருச்சி - சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள பகுதியில் அமைந்துள்ளது திருக்குளம் ஏரி. இதன் அருகே உள்ள வீடுகள், கடைகளின் கழிவு நீர் ஏரியில் விடப்படுவதால் மாசடைந்து காணப்படுகிறது.

சில நாட்களாக இந்த ஏரியில் உள்ள மீன்கள் அனைத்தும் இறந்து கரையோரத்தில் மிதக்கின்றன. இதனால் ஏரியில் துர்நாற்றம் வீசுவதால், சாலைகளில் செல்வோர் பாதிக்கப்படுகின்றனர். இதன் காரணமாக அப்பகுதி மக்களுக்கு பல்வேறு நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, ஊராட்சி நிர்வாகமும், மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொண்டு ஏரியை சுத்தப்படுத்த வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இறந்து மிதக்கும் மீன்கள்
Intro:அரியலூர் - ஏரியில் இறந்து மிதக்கும் மீன்களால் அதிகளவில் துர்நாற்றம் வீசுவதால் நோய் ஏற்படும் அபாயம் & ஏரியை சுத்தப்படுத்தி தர பொதுமக்க்ள் கோரிக்கைBody:அரியலூர் மாவட்டம் விளாங்குடி கிராமத்தில் திருச்சி சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி திருக்குளம் என்ற ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியில் சிறிய அளவில் தண்ணீர் இருந்ததால் அதிகளவில் மீன்கள் இருந்தன. அருகில் உள்ள வீடுகள் மற்றும் கடைகளின் கழிவு நீரும் இந்த ஏரியில் விடப்பட்டன. இந்நிலையில் இந்த ஏரியில் உள்ள மீன்கள் அனைத்தும் மர்மமான முறையில் இறந்து கரையோரத்தில் மிதக்கின்றன. இதனால் ஏரியில் அதிகவில் துர்நாற்றம் வீசுகின்றது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் சாலைகளில் செல்வோர் துர்நாற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பல்வேறு நோய்கள் பரவும் அபாயம் உள்ளது பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுகிறது Conclusion:இதனால் ஊராட்சி நிர்வாகமும் மாவட்ட நிர்வாகம் உடனே நடவடிக்கை எடுத்து ஏரியை சுத்தப்படுத்தி தரவேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமுக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.