அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் லோன் கேட்டுச் சென்ற ஓய்வுபெற்ற மருத்துவரிடம் அக்கிளையின் மேலாளர் விஷால் நாராயணன் காம்ளே, இந்தி தெரிந்தால்தான் லோன் கொடுப்போம்; இந்தி தெரியவில்லையென்றால் லோன் கிடையாது என தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து மருத்துவ அலுவலர், கிளை மேலாளருக்கு மான நஷ்ட வழக்கு நோட்டீஸை அனுப்பியுள்ளார். வங்கிக்கிளை மேலாளரின் இச்செயலுக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மண்டல அலுவலர், விஷால் நாராயணன் காம்ளேவை திருச்சிக்கு பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார். இருப்பினும், இவரை இந்தி பேசும் மண்டலத்திற்கு பணியிட மாற்றம் செய்யவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: இந்தி தெரியாததால் கடன் வழங்க மறுத்த வங்கி மேலாளர் - மருத்துவருக்கு நேர்ந்த அவலம்