அரியலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்காக சாய்தளத்துடன் கூடிய படிக்கட்டுகள் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் அமைக்கப்பட்டுள்ளதா, மாற்றுத் திறனாளிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு பார்வையாளர் சந்திர மோகன் ஆய்வு செய்தார். அவருடன் மாவட்ட ஆட்சியர் விஜய லட்சுமியும் ஆய்வை மேற்கொண்டார்.
அரியலூர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் அமைந்துள்ள சாய்தளம் சரிவர அமைக்கப்படாததால் அதனை சரி செய்யவும் அவர் உத்தரவிட்டார். மேலும் மாற்றுத்திறனாளிகள் தேவையான உதவிகளைப் பெறுவதற்காக பிடபிள்யூடி(pwd) என்னும் செயலி அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.