ETV Bharat / state

'பொய் சொல்லி மக்களை ஏமாற்றுகிறது திமுக' - தமிழ்நாடு தலைமை கொறடா ராஜேந்திரன்

அரியலூர்: பொய் சொல்லும் ஆயுதத்தை வைத்து திமுக மக்களை ஏமாற்றுவதாக சட்டப்பேரவை ஆளுங்கட்சி கொறடா ராஜேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.

TN chief whip
author img

By

Published : Sep 16, 2019, 7:51 AM IST


அரியலூர் அண்ணா சிலை அருகே பேரறிஞர் அண்ணாவின் 111ஆவது பிறந்த நாளையொட்டி அதிமுக சார்பில் நேற்று பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு மாவட்டச் செயலாளரும், சட்டப்பேரவை ஆளுங்கட்சி கொறடாவுமான தாமரை ராஜேந்திரன் தலைமை தாங்கினார்.

அப்போது பேசிய அவர், "பேரறிஞர் அண்ணாவின் எண்ண ஓட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் தொடங்கப்பட்டதுதான் அதிமுக. எனவே, அண்ணாவின் பிறந்தநாளை கொண்டாடத் தகுதியான ஒரே கட்சி அதிமுக மட்டுமே.

திமுக தலைவர் கருணாநிதியிடம் அண்ணாவின் கொள்கைக்கு முரணாக நடக்கிறீர்கள் என்று கேட்ட எம்.ஜி.ஆரை கட்சியிலிருந்து நீக்கியவர் கருணாநிதி.

ராஜேந்திரன் பேச்சு

தேர்தல் என்று வந்துவிட்டால் திமுகவிற்கு ஆயுதம் ஒன்று உள்ளது. அதுதான் பொய் சொல்லும் ஆயுதம். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் நாட்டு மக்களை எவ்வாறு ஏமாற்ற வேண்டும் என்று ஆராய்ச்சி நடத்தி ஒரு பிஎச்டி பட்டம் பெற்றது போல் திமுக மக்களை ஏமாற்றியது.

வெற்றிபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களால் தமிழ்நாட்டுக்கு எந்தவித பயனும் இல்லை என ஆணித்தரமாகக் கூறுகிறேன். அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கலாமே தவிர நாட்டு மக்களுக்காக எந்த பயனும் தரமுடியாது. நடந்து முடிந்த சட்டப்பேரவை இடைத் தேர்தலுக்குப் பிறகு ஆட்சிக்கு வருவோம் என திமுக கனவு கண்டது. ஆனால், அதிமுக ஆட்சிதான் தொடர வேண்டும் என எண்ணிய மக்கள் அதிமுகவிற்கு ஆதரவு அளித்தார்கள்" என்றார்.


அரியலூர் அண்ணா சிலை அருகே பேரறிஞர் அண்ணாவின் 111ஆவது பிறந்த நாளையொட்டி அதிமுக சார்பில் நேற்று பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு மாவட்டச் செயலாளரும், சட்டப்பேரவை ஆளுங்கட்சி கொறடாவுமான தாமரை ராஜேந்திரன் தலைமை தாங்கினார்.

அப்போது பேசிய அவர், "பேரறிஞர் அண்ணாவின் எண்ண ஓட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் தொடங்கப்பட்டதுதான் அதிமுக. எனவே, அண்ணாவின் பிறந்தநாளை கொண்டாடத் தகுதியான ஒரே கட்சி அதிமுக மட்டுமே.

திமுக தலைவர் கருணாநிதியிடம் அண்ணாவின் கொள்கைக்கு முரணாக நடக்கிறீர்கள் என்று கேட்ட எம்.ஜி.ஆரை கட்சியிலிருந்து நீக்கியவர் கருணாநிதி.

ராஜேந்திரன் பேச்சு

தேர்தல் என்று வந்துவிட்டால் திமுகவிற்கு ஆயுதம் ஒன்று உள்ளது. அதுதான் பொய் சொல்லும் ஆயுதம். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் நாட்டு மக்களை எவ்வாறு ஏமாற்ற வேண்டும் என்று ஆராய்ச்சி நடத்தி ஒரு பிஎச்டி பட்டம் பெற்றது போல் திமுக மக்களை ஏமாற்றியது.

வெற்றிபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களால் தமிழ்நாட்டுக்கு எந்தவித பயனும் இல்லை என ஆணித்தரமாகக் கூறுகிறேன். அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கலாமே தவிர நாட்டு மக்களுக்காக எந்த பயனும் தரமுடியாது. நடந்து முடிந்த சட்டப்பேரவை இடைத் தேர்தலுக்குப் பிறகு ஆட்சிக்கு வருவோம் என திமுக கனவு கண்டது. ஆனால், அதிமுக ஆட்சிதான் தொடர வேண்டும் என எண்ணிய மக்கள் அதிமுகவிற்கு ஆதரவு அளித்தார்கள்" என்றார்.

Intro:அரியலூர் & வெற்றி பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களால் தமிழகத்திற்கு எந்தவித பயனும் இல்லை என்றும் தேர்தல் வந்துவிட்டால் பொய் செல்லும் ஆயுதத்தை வைத்து மக்களை திமுக ஏமாற்றுவதாகவும் அரசு தலைமைக்கொறடா ராஜேந்திரன் குற்றச்சாட்டுBody: அரியலூர் அண்ணா சிலை அருகில் தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் பேரறிஞருமான அண்ணாவின் 111வது பிறந்த நாளை ஒட்டி அதிமுக சார்பில் பிறந்த நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளரும் அரசு தலைமை கொறடாவுமான தாமரை.ராஜேந்திரன் தலைமை தாங்கினார்.

அப்போது அண்ணாவின் பிறந்த நாளை கொண்டாட தகுதியான ஒரே கட்சி அதிமுக மட்டுமே. பேரறிஞர் அண்ணாவின் என்ன ஓட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் தொடங்கப்பட்டதுதான் அதிமுக. திமுக தலைவர் கருணாநிதியிடம் அண்ணாவின் கொள்கைக்கு முரணாக நடக்கிறீர்கள் என்று கேட்ட எம்ஜிஆரை கட்சியிலிருந்து நீக்கியவர் கருணாநிதி. ஏழைகளிடத்தில் பரிவு காட்டவேண்டும் ஏழைகளின் எண்ணங்களை திட்டங்களை கொண்டு வர வேண்டும் அதுதான் அண்ணாவின் கொள்கை. அதனையொட்டி அதிமுக ஆட்சி நடத்துகிறது. தேர்தல் என்று வந்துவிட்டால் திமுகவிற்கு ஆயுதம் ஒன்று உள்ளது. அதுதான் பொய் சொல்லும் ஆயுதம். திராவிட முன்னேற்ற கழகம் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் நாட்டு மக்களை எவ்வாறு ஏமாற்ற வேண்டும் என்று ஆராய்ச்சி நடத்தி ஒரு பிஎச்டி பட்டம் பெற்றது போல் நாட்டு மக்களை ஏமாற்றி வாக்குகளை பெற்றுள்ளார்கள். வெற்றி பெற்றவர்கள் நாடாளுமன்றம் சென்றுள்ளார்கள். அவர்கள் நாட்டு மக்களுக்கு என்ன திட்டத்தை தரப் போகிறார்கள் என்று தெரியாது. ஏனென்றால் மத்தியில் பாஜக மிருக பலத்துடன் ஆட்சி செய்கிறது. இவர்கள் பேச்சு அவர்களின் செவிக்கு எட்டாது. இவர்கள் பேசியது போல் பத்திரிக்கைகளில் விளம்பரம் வேண்டுமென்றால் தரலாம். வெற்றி பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களால் தமிழகத்திற்கு எந்தவித பயனும் இல்லை என ஆணித்தரமாக கூறுகிறேன். அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கலாமே தவிர நாட்டு மக்களுக்காக எந்த பயனும் தரமுடியாது. நடந்து முடிந்த சட்டமன்ற இடைத் தேர்தலுக்குப் பிறகு நாங்கள் ஆட்சிக்கு வருவோம் என திமுக கனவு கண்டது ஆனால் நாட்டு மக்கள் அதிமுக ஆட்சிதான் தொடர வேண்டும் என எண்ணி அதிமுகவிற்கு ஆதரவு அளித்தார்கள். மேலும் தமிழக மக்கள் எப்போதும் அதிமுக ஆட்சியை தொடர வேண்டும் என விரும்புகின்றனர் என பேசினார் Conclusion:கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயபால் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் ராமஜெயம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.