ETV Bharat / state

தொடர் மணல் திருட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம்

author img

By

Published : Nov 6, 2020, 4:49 PM IST

அரியலூர்: தொடர் மணல் திருட்டைக் கண்டித்து திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

protest
protest

அரியலூர் மாவட்டம் மருதயாற்றில் தொடர் மணல் திருட்டு நடைபெற்றுவருகிறது. இது குறித்து மாவட்ட நிர்வாகம், காவல் துறைக்கு புகார் செய்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனைக் கண்டித்து திமுக மாவட்ட செயலாளர் சிவசங்கர் தலைமையில் அக்கட்சியினர் சுண்டக்குடி மருதயாற்றில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது நீராதாரத்தை பாதுகாக்கும் வகையில் மணல் திருட்டில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் கொள்ளையர்களை கைது செய்ய வேண்டும், மணல் திருட்டை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.

அரியலூர் மாவட்டம் மருதயாற்றில் தொடர் மணல் திருட்டு நடைபெற்றுவருகிறது. இது குறித்து மாவட்ட நிர்வாகம், காவல் துறைக்கு புகார் செய்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனைக் கண்டித்து திமுக மாவட்ட செயலாளர் சிவசங்கர் தலைமையில் அக்கட்சியினர் சுண்டக்குடி மருதயாற்றில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது நீராதாரத்தை பாதுகாக்கும் வகையில் மணல் திருட்டில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் கொள்ளையர்களை கைது செய்ய வேண்டும், மணல் திருட்டை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.