ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் தமிழ்நாடு அரசு சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. அத்திட்டங்களில் ஒன்றான, விலையில்லா வெள்ளாடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் இன்று அரியலூர் மாவட்டத்தில் இரண்டாயிரத்து 486 பயனாளிகளுக்கு தலா 4 வீதம் ஒன்பதாயிரத்து 944 வெள்ளாடுகள் வழங்கப்பட்டன.
அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரத்னா கலந்துகொண்டு தொடங்கி வைத்த இவ்விழாவில் கூடுதலாக ஆடுகளுக்கு இரண்டு நாள் குடற்புழு நீக்க முகாம் நடைபெறவுள்ளது. இந்த முகாமில் சுமார் 5 லட்சம் ஆடுகளுக்கான குடற்புழு நீக்க மருந்துகள் வழங்கப்படவுள்ளன. இந்த முகாமை பயன்படுத்திக்கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆடுகள் வளர்ப்பவர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பொங்கலை முன்னிட்டு ரூ. 10 கோடி அளவில் ஆடுகள் விற்பனை!