ETV Bharat / sports

கோவிட் -19 எதிரொலி: விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் தொடர் ரத்து?

author img

By

Published : Mar 30, 2020, 7:30 PM IST

உலக நாடுகளை அச்சுறுத்திவரும் கோவிட் -19 தொற்றால் லண்டனில் நடைபெறவுள்ள விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் ரத்தாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Wimbledon 2020 to be 'cancelled' amid COVID-19 pandemic
Wimbledon 2020 to be 'cancelled' amid COVID-19 pandemic

கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர்களில் மிகவும் உயரிய தொடராக கருதப்படுவது விம்பிள்டன் தொடராகும். 1877இல் இருந்து லண்டனில் பாரம்பரிமாக இந்தத் தொடர் ஆண்டுதோறும் ஜூன் முதல் ஜூலை வரை நடைபெற்றுவருகிறது. கிட்டத்தட்ட டெனிஸ் போட்டிகளில் இது உலகக்கோப்பை தொடராகத்தான் பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், நடப்பு ஆண்டுக்கான விம்பிள்டன் தொடர் ஜூன் 29 முதல் ஜூலை 12வரை நடைபெறவுள்ளது. ஆனால், உலக நாடுகளை அச்சுறுத்திவரும் கோவிட் -19 தொற்றால் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், விம்பிள்டன் தொடர் ரத்தாக வாய்ப்பு அதிகம் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து ஜெர்மனி டென்னிஸ் சம்மேளனத்தின் துணைத் தலைவர் டிர்க் ஹோர்டோர்ஃப் கூறுகையில், "இந்தத் தொடர் நடத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் அடுத்த வாரம் புதன்கிழமை நடைபெறவுள்ளது. அதில், விம்பிள்டன் தொடர் நடைபெறுமா அல்லது ரத்து செய்யப்படுமா என்பது குறித்த இறுதி முடிவு எடுக்கப்படும். என்னை பொறுத்தவரையில் தற்போதைய சூழலில் இந்தத் தொடர் ரத்து செய்வதற்கான வாய்ப்புகளே அதிகம்" என்றார்.

முன்னதாக, பார்வையாளர்களின்றி விம்பிள்டன் டென்னிஸ் தொடரை நடத்த ஆல் இங்கிலாந்து லான் டென்னிஸ் சங்கத்தின் அலுவலர்கள் மறுப்பு தெரிவித்தனர். மேலும், கோவிட் -19 தொற்றால் இந்தத் தொடர் தள்ளிவைக்கப்படும் அல்லது ரத்து செய்யப்படும் எனவும் அவர்கள் கூறியிருந்தனர். கோவிட் -19 தொற்றால் மே மாதம் பாரிஸில் நடைபெறயிருந்த பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் செப்டம்பர் மாதத்திற்கு தள்ளிவைக்கப்பட்டது கவனத்துகுரியது.

கோவிட் -19 தொற்றால் இதுவரை உலகளவில் 34 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். குறிப்பாக, பிரிட்டனில் மட்டும் இதுவரை 19,522 பேருக்கு கோவிட் -19 தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்ட நிலையில், 1,228 பேர் உயிரிழந்தனர்.

இதையும் படிங்க: ஒரேநாளில் ரசிகர்களுக்கு ஹார்ட் அட்டாக் தந்த இரண்டு ஃபைனல்கள்

கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர்களில் மிகவும் உயரிய தொடராக கருதப்படுவது விம்பிள்டன் தொடராகும். 1877இல் இருந்து லண்டனில் பாரம்பரிமாக இந்தத் தொடர் ஆண்டுதோறும் ஜூன் முதல் ஜூலை வரை நடைபெற்றுவருகிறது. கிட்டத்தட்ட டெனிஸ் போட்டிகளில் இது உலகக்கோப்பை தொடராகத்தான் பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், நடப்பு ஆண்டுக்கான விம்பிள்டன் தொடர் ஜூன் 29 முதல் ஜூலை 12வரை நடைபெறவுள்ளது. ஆனால், உலக நாடுகளை அச்சுறுத்திவரும் கோவிட் -19 தொற்றால் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், விம்பிள்டன் தொடர் ரத்தாக வாய்ப்பு அதிகம் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து ஜெர்மனி டென்னிஸ் சம்மேளனத்தின் துணைத் தலைவர் டிர்க் ஹோர்டோர்ஃப் கூறுகையில், "இந்தத் தொடர் நடத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் அடுத்த வாரம் புதன்கிழமை நடைபெறவுள்ளது. அதில், விம்பிள்டன் தொடர் நடைபெறுமா அல்லது ரத்து செய்யப்படுமா என்பது குறித்த இறுதி முடிவு எடுக்கப்படும். என்னை பொறுத்தவரையில் தற்போதைய சூழலில் இந்தத் தொடர் ரத்து செய்வதற்கான வாய்ப்புகளே அதிகம்" என்றார்.

முன்னதாக, பார்வையாளர்களின்றி விம்பிள்டன் டென்னிஸ் தொடரை நடத்த ஆல் இங்கிலாந்து லான் டென்னிஸ் சங்கத்தின் அலுவலர்கள் மறுப்பு தெரிவித்தனர். மேலும், கோவிட் -19 தொற்றால் இந்தத் தொடர் தள்ளிவைக்கப்படும் அல்லது ரத்து செய்யப்படும் எனவும் அவர்கள் கூறியிருந்தனர். கோவிட் -19 தொற்றால் மே மாதம் பாரிஸில் நடைபெறயிருந்த பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் செப்டம்பர் மாதத்திற்கு தள்ளிவைக்கப்பட்டது கவனத்துகுரியது.

கோவிட் -19 தொற்றால் இதுவரை உலகளவில் 34 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். குறிப்பாக, பிரிட்டனில் மட்டும் இதுவரை 19,522 பேருக்கு கோவிட் -19 தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்ட நிலையில், 1,228 பேர் உயிரிழந்தனர்.

இதையும் படிங்க: ஒரேநாளில் ரசிகர்களுக்கு ஹார்ட் அட்டாக் தந்த இரண்டு ஃபைனல்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.