மத்திய அரசு சார்பாக முதல்முறையாக ஜம்மு - காஷ்மீரில், மழைக்காலத்திற்கான கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் நடந்து வருகிறது. இதில் ஸ்கையிங், ஸ்னோ போர்டிங் உள்ளிட்ட விளையாட்டுகளில் பலரும் ஆர்வத்துடன் பங்கேற்றுள்ளனர்.
இதனிடையே ஸ்கையிங் மற்றும் ஸ்னோ போர்டிங் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகளுக்கான அடிப்படை வசதிகள் எவ்வாறு செய்யப்பட்டுள்ளன என்பது குறித்து வீரர்களிடம் பேசப்பட்டது. அதில், '' நான் வெற்றிபெறுகிறேனா என்பது பற்றி எனக்கு கவலையில்லை. எனது ஆட்டத்தில் முன்னேறியிருந்தால் மகிழ்ச்சியே. கேலோ இந்தியப்போட்டிகள் நடத்தப்படுவதால் அதிகமாக குதூகலத்துடன் இருக்கிறோம். பனிச்சறுக்கில் ஈடுபடுவது நல்ல அனுபவமாக உள்ளது. நான் கலந்துகொண்டதில் மகிழ்ச்சி'' என்றார்.
மற்றொரு ஸ்னோபோர்டிங் வீரரான குவாஸி இர்ஷாத்துடன் பேசுகையில், '' இந்த விளையாட்டில் முன்னேறுவதற்கு என்ன செய்ய வேண்டுமோ அதனை செய்து வருகிறோம். இந்த விளையாட்டினால் அதிகமான பொருட்செலவு ஏற்படும். ஸ்னோ போர்டிங் ரேஸில் கலந்துகொள்வது அனைவராலும் முடியாத ஒன்று.
கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளுக்கான ஏற்பாடுகளை, மிகவும் சிறப்பாக செய்துள்ளது. இதுபோன்ற முன்னெடுப்புகளால் விளையாட்டு மேம்படுவதுடன் வெளிநாட்டு வீரர்களும் காஷ்மீருக்கு வருகை தருவார்கள்'' என்றார்.
இதையும் படிங்க: சீறிப்பாய்ந்த படகுகள்; உள்ளூர் மீனவர்கள் கடலில் நிகழ்த்திய விளையாட்டுப் போட்டி