பிரேசில் ரியோ டி ஜெனிராவில் உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் தொடர் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் இளவேனில் வாலறிவன், அபிஷேக் வர்மா, யசஷ்வினி சிங் தேஸ்வால் ஆகியோர் தங்கப்பதக்கம் வென்றனர்.
இந்நிலையில், இன்று 10 மீ ஏர் ரைபிள் கலப்பு இரட்டையர் பிரிவுக்கான போட்டிகள் நடைபெற்றன. இந்தப் போட்டியில், அபூர்வி சன்டிலா - தீபக் குமார் இணை தங்கப்பதக்கம் வென்றுள்ளது.
மற்றொரு இணையான அஞ்சும் மவுட்கில் - திவ்யான்ஸ் சிங் வெண்கல பதக்கம் வென்றது. இதன்மூலம், இந்திய அணிக்கு 4 தங்கம், 1 வெண்கல பதக்கம் கிடைத்துள்ளது.