ETV Bharat / sports

சர்வதேச குத்துச்சண்டை: தங்கம் வென்ற இந்திய வீரர்களுக்கு பாராட்டு மழை!

டெல்லி: போலாந்தில் நடைபெற்ற சர்வதேச குத்துச்சண்டை தொடரில் தங்க வென்ற இந்தியா வீரர்களான கவுரவ் சோலங்கி, மனிஷ் கௌஷிக் ஆகியோருக்கு பாராட்டு மழை பொழிந்து வருகின்றது.

தங்கம் வென்ற இந்திய வீரர்கள்
author img

By

Published : May 6, 2019, 9:50 AM IST

போலாந்தின் வர்சா நகரில் ஃபெலிக்ஸ் ஸ்டாம் சர்வதேச குத்துச்சண்டை தொடர் நடைபெற்றது. இதில், 52 கிலோ எடைப்பிரிவு இறுதிப் போட்டியில் இந்திய வீரர் கவுரவ் சோலங்கி இங்கிலாந்தின் வில்லியம் காலேவை எதிர்கொண்டார். இதில், தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சோலங்கி 5-0 என்ற கணக்கில் வெற்றிபெற்று தங்கம் வென்றார்.

இதேபோன்று, 69 கிலோ எடைப்பிரிவு இறுதிப் போட்டியில் மனிஷ் கௌஷிக், மொராக்கோ நாட்டின் முகமது ஹமவுட்டை 4 -1 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றிபெற்று தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார்.

இதற்கிடையே, இந்தியாவின் மற்ற வீரர்களான ஹுசாமுதீன் வெள்ளிப் பதக்கத்துடனும், மந்தீப் ஜங்ரா, சன்ஜீத், அன்கீத் காடானா ஆகியோர் வெண்கலப் பதக்கத்துடனும் தாயகம் திரும்பினர்.

போலாந்தின் வர்சா நகரில் ஃபெலிக்ஸ் ஸ்டாம் சர்வதேச குத்துச்சண்டை தொடர் நடைபெற்றது. இதில், 52 கிலோ எடைப்பிரிவு இறுதிப் போட்டியில் இந்திய வீரர் கவுரவ் சோலங்கி இங்கிலாந்தின் வில்லியம் காலேவை எதிர்கொண்டார். இதில், தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சோலங்கி 5-0 என்ற கணக்கில் வெற்றிபெற்று தங்கம் வென்றார்.

இதேபோன்று, 69 கிலோ எடைப்பிரிவு இறுதிப் போட்டியில் மனிஷ் கௌஷிக், மொராக்கோ நாட்டின் முகமது ஹமவுட்டை 4 -1 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றிபெற்று தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார்.

இதற்கிடையே, இந்தியாவின் மற்ற வீரர்களான ஹுசாமுதீன் வெள்ளிப் பதக்கத்துடனும், மந்தீப் ஜங்ரா, சன்ஜீத், அன்கீத் காடானா ஆகியோர் வெண்கலப் பதக்கத்துடனும் தாயகம் திரும்பினர்.

Intro:Body:

boxing


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.