தேசிய விளையாட்டு விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று (ஆகஸ்ட் 29) நடைபெறவுள்ளது. கரோனா காரணமாக வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் நடைபெறவுள்ள இந்நிகழ்ச்சியில், பயிற்சியாளர் புருஷோத்தம் ராய்க்கு துரோணாச்சாரியார் விருது வழங்கப்படயிருந்தது.
ஆனால், மாரடைப்பு காரணமாக அவர் நேற்று (ஆகஸ்ட் 28) உயிரிழந்தார். வந்தனா ராவ், பிரமிளா அய்யப்பா, அஸ்வினி நச்சப்பா உள்ளிட்ட தடகள வீரர்களுக்கு ராய் பயிற்சி அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.