ETV Bharat / sports

கரோனாவில் இருந்து குணமடைந்த சுரேந்தர் சிங் - மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!

author img

By

Published : Aug 21, 2020, 5:28 PM IST

டெல்லி: கரோனா தொற்றிலிருந்து குணமடைந்த சுரேந்தர் சிங்கிற்கு வலது கைப் பகுதியில் ஏற்பட்ட வீக்கம் காரணமாக மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Hockey player Surender Kumar
Hockey player Surender Kumar

டோக்கியோ ஒலிம்பிக் 2020க்கு தகுதி பெற்ற இந்திய ஹாக்கி அணி வீரர்கள் பெங்களூருவில் உள்ள தேசிய பயிற்சி முகாமில் பயிற்சி மேற்கொண்டு வந்தனர். கரோனா பரவல் காரணமாக கடந்த ஜூன் மாதம் இறுதியில் வீரர், வீராங்கனைகள் முகாமிலிருந்து தங்கள் சொந்த ஊருக்குத் திரும்ப அனுமதிக்கப்பட்டனர்.

ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இம்மாதத்தின் இரண்டாவது வாரத்தில் ஹாக்கி வீரர்கள் பயிற்சிக்காக மீண்டும் பெங்களூருக்கு திரும்பினர். அப்போது நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் மன்பிரீத் சிங், சுரேந்தர் குமார், ஜஸ்கரன் சிங், வருண்குமார், கோல் கீப்பர் கிரிஷன் பகதூர் பதக் ஆகியோருக்கு கோவிட்-19 இருப்பது உறுதி செய்யப்பட்டது.

அதைத்தொடர்ந்து அவர்கள் சிகிச்சைக்காக பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சிகிச்சைக்குப் பின், அவர்கள் குணமடைந்ததைத் தொடர்ந்து கடந்ச வாரம் மருத்துவமனையில் இருந்து பயிற்சி முகாமிற்கு திரும்பினர்.

Hockey player Surender Kumar
சுரேந்தர் சிங்

இந்நிலையில், பயிற்சி முகாமல் இருந்து சுரேந்தர் குமாருக்கு திடீரென்று கையில் வீக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நேற்று (ஆகஸ்ட் 20) மாலை அவர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இது குறித்து இந்திய விளையாட்டு ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அவரது வலது மேல் மூட்டு பகுதியில் ரத்தம் உறைந்து வீக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு இரண்டு முதல் மூன்று நாள்களுக்கு சிகிச்சையளிக்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஐபிஎல் 2020: துபாய் புறப்பட்ட சென்னை சிங்கங்கள்!

டோக்கியோ ஒலிம்பிக் 2020க்கு தகுதி பெற்ற இந்திய ஹாக்கி அணி வீரர்கள் பெங்களூருவில் உள்ள தேசிய பயிற்சி முகாமில் பயிற்சி மேற்கொண்டு வந்தனர். கரோனா பரவல் காரணமாக கடந்த ஜூன் மாதம் இறுதியில் வீரர், வீராங்கனைகள் முகாமிலிருந்து தங்கள் சொந்த ஊருக்குத் திரும்ப அனுமதிக்கப்பட்டனர்.

ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இம்மாதத்தின் இரண்டாவது வாரத்தில் ஹாக்கி வீரர்கள் பயிற்சிக்காக மீண்டும் பெங்களூருக்கு திரும்பினர். அப்போது நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் மன்பிரீத் சிங், சுரேந்தர் குமார், ஜஸ்கரன் சிங், வருண்குமார், கோல் கீப்பர் கிரிஷன் பகதூர் பதக் ஆகியோருக்கு கோவிட்-19 இருப்பது உறுதி செய்யப்பட்டது.

அதைத்தொடர்ந்து அவர்கள் சிகிச்சைக்காக பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சிகிச்சைக்குப் பின், அவர்கள் குணமடைந்ததைத் தொடர்ந்து கடந்ச வாரம் மருத்துவமனையில் இருந்து பயிற்சி முகாமிற்கு திரும்பினர்.

Hockey player Surender Kumar
சுரேந்தர் சிங்

இந்நிலையில், பயிற்சி முகாமல் இருந்து சுரேந்தர் குமாருக்கு திடீரென்று கையில் வீக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நேற்று (ஆகஸ்ட் 20) மாலை அவர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இது குறித்து இந்திய விளையாட்டு ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அவரது வலது மேல் மூட்டு பகுதியில் ரத்தம் உறைந்து வீக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு இரண்டு முதல் மூன்று நாள்களுக்கு சிகிச்சையளிக்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஐபிஎல் 2020: துபாய் புறப்பட்ட சென்னை சிங்கங்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.