ETV Bharat / sports

150 ஆவது போட்டியில் கோல் அடித்த மெஸ்ஸி!

author img

By

Published : Nov 5, 2020, 6:36 PM IST

பார்சிலோனா: 150ஆவது ஐரோப்பிய போட்டியில் விளையாடிய மெஸ்ஸி கோல் அடித்து சாதனை படைத்துள்ளார்.

பார்சிலோனா
பார்சிலோனா

சாம்பியன்ஸ் லீக் போட்டியில் பார்சிலோனா, டைனமோ கைவ் அணிகள் நேற்று மோதின. இதில், தனது 150ஆவது ஐரோப்பிய போட்டியில் கோல் அடித்து அர்ஜென்டினா வீரர் மெஸ்ஸி சாதனை படைத்துள்ளார்.

இதுவரை, 146 சாம்பியன்ஸ் லீக் போட்டிகளில் 121 கோல் அடித்து அசத்தியுள்ளார். போட்டியின் ஐந்தாவது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை அவர் கோலாக மாற்றினார்.

இதையடுத்து, போட்டியின் 65ஆவது நிமிடத்தில் ஜெரார்டு பிக் மற்றொரு கோலை அடித்து இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் பார்சிலோனா அணியை வெற்றி பெறவைத்தார்.

குரூப் ஜியில் இடம்பெற்றுள்ள பார்சிலோனா அணி, மூன்று வெற்றிகளுடன் 9 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தில் உள்ளது.

சாம்பியன்ஸ் லீக் போட்டியில் பார்சிலோனா, டைனமோ கைவ் அணிகள் நேற்று மோதின. இதில், தனது 150ஆவது ஐரோப்பிய போட்டியில் கோல் அடித்து அர்ஜென்டினா வீரர் மெஸ்ஸி சாதனை படைத்துள்ளார்.

இதுவரை, 146 சாம்பியன்ஸ் லீக் போட்டிகளில் 121 கோல் அடித்து அசத்தியுள்ளார். போட்டியின் ஐந்தாவது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை அவர் கோலாக மாற்றினார்.

இதையடுத்து, போட்டியின் 65ஆவது நிமிடத்தில் ஜெரார்டு பிக் மற்றொரு கோலை அடித்து இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் பார்சிலோனா அணியை வெற்றி பெறவைத்தார்.

குரூப் ஜியில் இடம்பெற்றுள்ள பார்சிலோனா அணி, மூன்று வெற்றிகளுடன் 9 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தில் உள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.