ETV Bharat / sports

கரோனா வைரஸால் அடுத்தாண்டுக்கு ஒத்திவைக்கப்பட்ட யூரோ கால்பந்து கோப்பை!

author img

By

Published : Mar 17, 2020, 9:01 PM IST

கரோனா வைரஸ் காரணமாக வரும் ஜூன் மாதம் நடைபெறவிருந்த யூரோ கோப்பை கால்பந்து தொடர் அடுத்தாண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Euros postponed by a year amid coronavirus pandemic
Euros postponed by a year amid coronavirus pandemic

ஐரோப்பிய நாடுகளுக்கான யூரோ கோப்பை கால்பந்து தொடர் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டுவருகிறது. ஃபிபா உலகக்கோப்பை கால்பந்து தொடருக்கு அடுத்தப்படியாக இந்தத் தொடர் மிக முக்கியத் தொடராகப் பார்க்கப்படுகிறது. அந்த வகையில், இதன் 16ஆவது யூரோ கோப்பை தொடர் வரும் ஜூன் 12 முதல் தொடங்கி ஜூலை 12 வரை லண்டன், முனிச், ரோம் உள்ளிட்ட ஐரோப்பாவின் 12 நகரங்களில் நடைபெறவிருந்தது.

இதனிடையே, சீனாவில் பரவத் தொடங்கிய கரோனா வைரஸால் ஐரோப்பிய நாடுகளான இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, கோவிட்-19 வைரஸால் இத்தாலியில் 2,158 பேரும், ஸ்பெயினில் 491 பேரும் உயிரிழந்துள்ளனர். இதனால், யூரோ கோப்பை கால்பந்து தொடர் திட்டமிட்டப்படி நடைபெறுமா என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.

இந்நிலையில், கோவிட்-19 வைரஸ் தொற்றால் இந்தத் தொடர் அடுத்தாண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக யூரோ கால்பந்து சம்மேளனம் தெரிவித்துள்ளது. அதன்படி இந்தத் தொடர் அடுத்தாண்டு ஜூன் 11 முதல் ஜூலை 12வரை நடைபெறவுள்ளது.

இந்தத் தொடரில் நடப்பு சாம்பியன் போர்ச்சுகல், பிரான்ஸ், ஸ்பெயின், ஜெர்மனி உள்ளிட்ட 24 அணிகள் பங்கேற்கவுள்ளன. ஏற்கனவே கோவிட்-19 வைரஸால் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், தற்போது யூரோ கோப்பை தொடரும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது கால்பந்து ரசிகர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: கரோனா வைரஸால் 21 வயது கால்பந்து வீரர் உயிரிழப்பு

ஐரோப்பிய நாடுகளுக்கான யூரோ கோப்பை கால்பந்து தொடர் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டுவருகிறது. ஃபிபா உலகக்கோப்பை கால்பந்து தொடருக்கு அடுத்தப்படியாக இந்தத் தொடர் மிக முக்கியத் தொடராகப் பார்க்கப்படுகிறது. அந்த வகையில், இதன் 16ஆவது யூரோ கோப்பை தொடர் வரும் ஜூன் 12 முதல் தொடங்கி ஜூலை 12 வரை லண்டன், முனிச், ரோம் உள்ளிட்ட ஐரோப்பாவின் 12 நகரங்களில் நடைபெறவிருந்தது.

இதனிடையே, சீனாவில் பரவத் தொடங்கிய கரோனா வைரஸால் ஐரோப்பிய நாடுகளான இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, கோவிட்-19 வைரஸால் இத்தாலியில் 2,158 பேரும், ஸ்பெயினில் 491 பேரும் உயிரிழந்துள்ளனர். இதனால், யூரோ கோப்பை கால்பந்து தொடர் திட்டமிட்டப்படி நடைபெறுமா என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.

இந்நிலையில், கோவிட்-19 வைரஸ் தொற்றால் இந்தத் தொடர் அடுத்தாண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக யூரோ கால்பந்து சம்மேளனம் தெரிவித்துள்ளது. அதன்படி இந்தத் தொடர் அடுத்தாண்டு ஜூன் 11 முதல் ஜூலை 12வரை நடைபெறவுள்ளது.

இந்தத் தொடரில் நடப்பு சாம்பியன் போர்ச்சுகல், பிரான்ஸ், ஸ்பெயின், ஜெர்மனி உள்ளிட்ட 24 அணிகள் பங்கேற்கவுள்ளன. ஏற்கனவே கோவிட்-19 வைரஸால் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், தற்போது யூரோ கோப்பை தொடரும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது கால்பந்து ரசிகர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: கரோனா வைரஸால் 21 வயது கால்பந்து வீரர் உயிரிழப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.