பாகிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முன்னணி வீரராக வலம் வருபவர் யாஷிர் ஷா. 2014 ஆம் ஆண்டு அறிமுகமான இவர் குறைந்த சமயத்தில் சுமார் 235 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். யாஷிர் ஷா மீது 14 வயது சிறுமி, இஸ்லாமாபாத்தில் உள்ள ஷாலிமார் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அதில், "யாஷிர் ஷாவின் நண்பர் ஃபர்ஹான் என்னை துப்பாக்கி முனையில் கடத்தி சென்று பாலியல் வன்புணர்வு செய்தார். மேலும் நடந்த சம்பவத்தை வீடியோவாக எடுத்து வைத்து கொண்டு என்னை மிரட்டி வருகிறார்.
இந்த சம்பவம் குறித்து யாஷிர் ஷாவை தொடர்பு கொண்டு கூறினேன். ஆனால் அதற்கு அவர் என்னை ஏளனம் செய்து, நடந்த சம்பவம் குறித்து யாரிடமும் சொல்ல கூடாது என மிரட்டினார்.
தனக்கு செல்வாக்கான நபர்களை தெரியும் என்றும், இதனை வெளியே சொன்னால் ஆபாச படத்தை வெளியிட்டு விடுவேன் என என்னை மிரட்டினார். அதனால் இருவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என குறிப்பிட்டுள்ளார்.
இதன் அடிப்படையில் யாஷிர் ஷா மீது இஸ்லாமாபாத் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு கூறுகையில், "இதுகுறித்த தகவல்களை சேகரித்து வருகிறோம். முழுமையான உண்மை தெரிந்த பிறகே இதுகுறித்து கருத்து வெளியிட முடியும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் கைது