ETV Bharat / sports

ஐபிஎல் 2020: ஏபிடி அதிரடியில் தப்பித்த ஆர்சிபி..! கேகேஆருக்கு 195 ரன்கள் இலக்கு..!

author img

By

Published : Oct 12, 2020, 9:15 PM IST

பெங்களூரு - கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 194 ரன்களை குவித்தது.

IPL 13 - RCB vs KKR innings break
IPL 13 - RCB vs KKR innings break

ஐபிஎல் தொடரில் இன்று(அக்.12) நடைபெற்று வரும் 28ஆவது லீக் ஆட்டத்தில் விராட் கோலி தலைமையின்லான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்தியது.

இப்போட்டியில் முதலில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய பெங்களூரு அணிக்கு தேவ்தத் படிகல் - ஆரோன் ஃபிஞ்ச் அதிரடியான தொடக்கத்தைத் தந்தனர்.

தொடர்ந்து சிறப்பாக விளையாடி வந்த படிகல் 32 ரன்களில் ஆட்ட்மிழந்து வெளியேற, அரைசதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஆரோன் ஃபிஞ்சும் 47 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார்.

பின்னர் ஜோடி சேர்ந்த விராட் கோலி - ஏபிடி வில்லியர்ஸ் இணை, அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோர் கணக்கை உயர்த்தியது. தொடர்ந்து மைதானத்தில் சிக்சர் மழை பொழிந்த டி வில்லியர்ஸ் 23 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார்.

இதன் மூலம் ஆர்சிபி அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 194 ரன்களை குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஏபிடி வில்லியர்ஸ் 72 ரன்களையும், ஆரோன் ஃபிஞ்ச் 47 ரன்களை எடுத்தார்.

இதையும் படிங்க:ரஷித் கானின் மனைவி அனுஷ்கா சர்மாவா? குழப்பத்தில் கூகுள்!

ஐபிஎல் தொடரில் இன்று(அக்.12) நடைபெற்று வரும் 28ஆவது லீக் ஆட்டத்தில் விராட் கோலி தலைமையின்லான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்தியது.

இப்போட்டியில் முதலில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய பெங்களூரு அணிக்கு தேவ்தத் படிகல் - ஆரோன் ஃபிஞ்ச் அதிரடியான தொடக்கத்தைத் தந்தனர்.

தொடர்ந்து சிறப்பாக விளையாடி வந்த படிகல் 32 ரன்களில் ஆட்ட்மிழந்து வெளியேற, அரைசதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஆரோன் ஃபிஞ்சும் 47 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார்.

பின்னர் ஜோடி சேர்ந்த விராட் கோலி - ஏபிடி வில்லியர்ஸ் இணை, அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோர் கணக்கை உயர்த்தியது. தொடர்ந்து மைதானத்தில் சிக்சர் மழை பொழிந்த டி வில்லியர்ஸ் 23 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார்.

இதன் மூலம் ஆர்சிபி அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 194 ரன்களை குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஏபிடி வில்லியர்ஸ் 72 ரன்களையும், ஆரோன் ஃபிஞ்ச் 47 ரன்களை எடுத்தார்.

இதையும் படிங்க:ரஷித் கானின் மனைவி அனுஷ்கா சர்மாவா? குழப்பத்தில் கூகுள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.