ETV Bharat / sports

'ஐபிஎல் கோப்பையை பெங்களூரு அணி வெல்லும்' -  வாஹன் நம்பிக்கை!

author img

By

Published : Mar 23, 2019, 11:21 PM IST

"12-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுர் அணி நிச்சயமாக வெல்லும்" என்று, இங்கிலாந்து முன்னாள் வீரர் வாஹன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து முன்னாள் வீரர் வாஹன்

12-வது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா, இன்று தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், ஐபிஎல் தொடரில் ஆரஞ்சு கேப், பர்பிள் கேப் உள்ளிட்டவைகளை வெல்லும் வீரர்கள் மற்றும் தொடரைக் கைப்பற்றும் அணி எது என்பது குறித்து வாஹன், தனது கருத்தை ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அதில் அவர், ஐபிஎல் தொடரில் அதிக ரன்களை அடுக்கும் வீரர்களுக்கு ஆரஞ்சு கேப் வழங்கப்படும். அதனை இந்த வருடம் டெல்லி இளம் வீரர் ரிஷப் பந்த் வெல்வார். அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றும் வீரர்களுக்கு வழங்கும் பர்பிள் கேப்பை குல்திப் யாதவ் வெல்வார். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, இந்த முறை கோப்பையை கைப்பற்றும். கேப்டன் கோலி மீதான நம்பிக்கையால்தான் ஆர்சிபி அணி கோப்பையை வெல்லும் என்றும் தெரிவித்துள்ளார்.

12-வது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா, இன்று தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், ஐபிஎல் தொடரில் ஆரஞ்சு கேப், பர்பிள் கேப் உள்ளிட்டவைகளை வெல்லும் வீரர்கள் மற்றும் தொடரைக் கைப்பற்றும் அணி எது என்பது குறித்து வாஹன், தனது கருத்தை ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அதில் அவர், ஐபிஎல் தொடரில் அதிக ரன்களை அடுக்கும் வீரர்களுக்கு ஆரஞ்சு கேப் வழங்கப்படும். அதனை இந்த வருடம் டெல்லி இளம் வீரர் ரிஷப் பந்த் வெல்வார். அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றும் வீரர்களுக்கு வழங்கும் பர்பிள் கேப்பை குல்திப் யாதவ் வெல்வார். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, இந்த முறை கோப்பையை கைப்பற்றும். கேப்டன் கோலி மீதான நம்பிக்கையால்தான் ஆர்சிபி அணி கோப்பையை வெல்லும் என்றும் தெரிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.