ETV Bharat / sports

அஸ்வினை தூக்கினால், விராட் கோலியையும் தூக்குங்கள் - கபில் தேவ் அதிரடி

author img

By

Published : Jul 9, 2022, 5:15 PM IST

டெஸ்ட் அணியில் அஸ்வினுக்கு இடமில்லை எனும்போது, உங்களால் யாரை வேண்டுமானாலும் அணியில் இருந்து வெளியே அமரவைக்க முடியும் என்று டி20-யில் விராட் கோலியின் இடம் குறித்து கபில் தேவ் கருத்து தெரிவித்துள்ளார்.

If Ashwin can be dropped from Test side Kapil Dev
If Ashwin can be dropped from Test side Kapil Dev

டெல்லி: இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. முதல் டி20 போட்டியில் இந்திய அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து, இன்று நடைபெறும் இரண்டாவது போட்டியிலும் வெற்றிபெற்று தொடரை வெல்லும் முனைப்பில் இந்திய அணி உள்ளது.

சமீபத்தில், நடந்த முடிந்த இங்கிலாந்து உடனான டெஸ்ட் போட்டியில் விளையாடிய விராட் கோலி, ஷ்ரேயஸ் ஐயர், ரிஷப் பந்த், ஜடேஜா, பும்ரா ஆகியோருக்கு முதல் டி20 போட்டியில் ஓய்வளிக்கப்பட்டது. இவர்கள் அடுத்த இரு டி20 போட்டிகளில் விளையாடுவார்கள் என முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது.

கோலி vs பந்த்: எனவே, இன்றைய போட்டியின் பிளேயிங் லெவனில் என்னென்ன மாற்றங்கள் இருக்கப்போகிறது என்பது தான் ஹாட் -டாப்பிக். கடந்த போட்டியில், இஷான் கிஷனை தவிர அனைத்து பேட்டர்கள் சிறப்பாக விளையாடினர். இஷானின் இடம் மட்டும் கேள்விக்குறி என்றாலும், அந்த இடத்திற்கு விராட் கோலி, ரிஷப் பந்த் ஆகிய இருவருக்கும் கடும் போட்டி நிலவும் என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

இல்லையெனில், தினேஷ் கார்த்திக், இஷான் கிஷன் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டு விராட், ரிஷப் இருவருக்கும் அணி நிர்வாகம் வாய்ப்பளிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

விராட்டை அப்படியே விட்டுவிட முடியாது: இந்நிலையில், இந்திய முன்னாள் கேப்டன் கபில் தேவ் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அணி தேர்வு குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில்,"விராட் கோலி திறமையுள்ளவர். அவர் மீண்டும் ஃபார்மிற்கு வருவார் என்ற நம்பிக்கை உள்ளது. அவர் தற்போது ஃபார்மில் இல்லை என்பதால் அவரை அப்படியே விட்டுவிட முடியாது.

இளைஞர்கள் சிறப்பாக விளையாடிக்கொண்டிருக்கிறார்கள். விராட் நன்றாக விளையாடவில்லை எனும்போது அவரை பெவிலியனில் அமரவைப்பதில் எந்த தவறுமில்லை.

யாரை வேண்டுமானாலும் தூக்கலாமே: டெஸ்ட்டில் அஸ்வினை உங்களால் பெவிலியனில் அமரவைக்க முடியும் போது, யாரை வேண்டுமானாலும் உங்களால் அமரவைக்க முடியும் அல்லவா" என்றார். டெஸ்ட் தரவரிசையில் 2ஆம் நிலையில் உள்ள அஸ்வினை சமீபத்தில், நடந்த டெஸ்ட் போட்டியில் சேர்க்காததை குறிப்பிட்டு கபில் தேவ் இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும் கூறிய அவர்,'தான் ஒரு காலத்தில் பெரிய வீரராக இருந்தேன், தற்போது மீண்டும் அதேபோன்று விளையாட வேண்டும்' என்பதை விராட் கோலியும் உணர வேண்டும்" என்றார்.

வீரர்களுக்கு அடிக்கடி ஓய்வளிப்பது குறித்து பேசிய கபில் தேவ்,"அதை ஒரு சிலர் ஓய்வு என்பார்கள், பிறர் அதை நீக்கம் என்பார்கள். அது ஒருவரின் எண்ணங்களை பொறுத்தது. அனைவரின் பார்வையும் ஒன்றுபோல் இருக்காது. ஆம், வெளிப்படையாகவே கூறுகிறேன், தேர்வாளர்கள் விராட் கோலியை அணியில் எடுக்கவில்லை என்றால், இளைஞர்களை விட அவர் சிறப்பாக விளையாடவில்லை என்றுதான் அர்த்தம்" என்றார்.

இதையும் படிங்க: தோனி பிறந்தநாள் சிறப்புத் தொகுப்பு

டெல்லி: இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. முதல் டி20 போட்டியில் இந்திய அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து, இன்று நடைபெறும் இரண்டாவது போட்டியிலும் வெற்றிபெற்று தொடரை வெல்லும் முனைப்பில் இந்திய அணி உள்ளது.

சமீபத்தில், நடந்த முடிந்த இங்கிலாந்து உடனான டெஸ்ட் போட்டியில் விளையாடிய விராட் கோலி, ஷ்ரேயஸ் ஐயர், ரிஷப் பந்த், ஜடேஜா, பும்ரா ஆகியோருக்கு முதல் டி20 போட்டியில் ஓய்வளிக்கப்பட்டது. இவர்கள் அடுத்த இரு டி20 போட்டிகளில் விளையாடுவார்கள் என முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது.

கோலி vs பந்த்: எனவே, இன்றைய போட்டியின் பிளேயிங் லெவனில் என்னென்ன மாற்றங்கள் இருக்கப்போகிறது என்பது தான் ஹாட் -டாப்பிக். கடந்த போட்டியில், இஷான் கிஷனை தவிர அனைத்து பேட்டர்கள் சிறப்பாக விளையாடினர். இஷானின் இடம் மட்டும் கேள்விக்குறி என்றாலும், அந்த இடத்திற்கு விராட் கோலி, ரிஷப் பந்த் ஆகிய இருவருக்கும் கடும் போட்டி நிலவும் என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

இல்லையெனில், தினேஷ் கார்த்திக், இஷான் கிஷன் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டு விராட், ரிஷப் இருவருக்கும் அணி நிர்வாகம் வாய்ப்பளிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

விராட்டை அப்படியே விட்டுவிட முடியாது: இந்நிலையில், இந்திய முன்னாள் கேப்டன் கபில் தேவ் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அணி தேர்வு குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில்,"விராட் கோலி திறமையுள்ளவர். அவர் மீண்டும் ஃபார்மிற்கு வருவார் என்ற நம்பிக்கை உள்ளது. அவர் தற்போது ஃபார்மில் இல்லை என்பதால் அவரை அப்படியே விட்டுவிட முடியாது.

இளைஞர்கள் சிறப்பாக விளையாடிக்கொண்டிருக்கிறார்கள். விராட் நன்றாக விளையாடவில்லை எனும்போது அவரை பெவிலியனில் அமரவைப்பதில் எந்த தவறுமில்லை.

யாரை வேண்டுமானாலும் தூக்கலாமே: டெஸ்ட்டில் அஸ்வினை உங்களால் பெவிலியனில் அமரவைக்க முடியும் போது, யாரை வேண்டுமானாலும் உங்களால் அமரவைக்க முடியும் அல்லவா" என்றார். டெஸ்ட் தரவரிசையில் 2ஆம் நிலையில் உள்ள அஸ்வினை சமீபத்தில், நடந்த டெஸ்ட் போட்டியில் சேர்க்காததை குறிப்பிட்டு கபில் தேவ் இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும் கூறிய அவர்,'தான் ஒரு காலத்தில் பெரிய வீரராக இருந்தேன், தற்போது மீண்டும் அதேபோன்று விளையாட வேண்டும்' என்பதை விராட் கோலியும் உணர வேண்டும்" என்றார்.

வீரர்களுக்கு அடிக்கடி ஓய்வளிப்பது குறித்து பேசிய கபில் தேவ்,"அதை ஒரு சிலர் ஓய்வு என்பார்கள், பிறர் அதை நீக்கம் என்பார்கள். அது ஒருவரின் எண்ணங்களை பொறுத்தது. அனைவரின் பார்வையும் ஒன்றுபோல் இருக்காது. ஆம், வெளிப்படையாகவே கூறுகிறேன், தேர்வாளர்கள் விராட் கோலியை அணியில் எடுக்கவில்லை என்றால், இளைஞர்களை விட அவர் சிறப்பாக விளையாடவில்லை என்றுதான் அர்த்தம்" என்றார்.

இதையும் படிங்க: தோனி பிறந்தநாள் சிறப்புத் தொகுப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.