ETV Bharat / sports

"1970களில் இருந்த வெஸ்ட் இண்டீசை காட்டிலும் இந்திய அணி வலிமை" - முன்னாள் வீரர் சுனில் வால்சன் பிரத்யேக பேட்டி!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 14, 2023, 4:43 PM IST

World Cup Cricket: 1975 மற்றும் 1979 உலக கோப்பையை வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியை காட்டிலும் தற்போதைய ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி வலிமையாக உள்ளதாகவும், இந்திய அணி நிச்சயம் உலக கோப்பையை வெல்லும் என்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில வால்சன் ஈடிவி பாரத் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பிரத்யேக பேட்டியில் தெரிவித்தார்.

Sunil Valson
Sunil Valson

ஐதராபாத் : உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடி வரும் தற்போதைய இந்திய அணி 1970களில் இருந்த வெஸ்ட் இண்டீஸ் அணியை காட்டிலும் வலிமை மிக்கதாக உள்ளது என முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் வால்சன் தெரிவித்தார்.

13வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கி நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, இந்தியா, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இலங்கை, நெதர்லாந்து உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றன.

லீக் சுற்று ஆட்டங்கள் நிறைவு பெற்ற நிலையில், அதில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, அஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் வெற்றி பெற்று அரைஇறுதி சுற்றுக்கு தகுதி பெற்றன. முதலாவது அரைஇறுதி ஆட்டத்தில் இந்திய அணி, வரும் 15ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது.

இந்திய அணி உலக கோப்பை வெல்ல வேண்டும் என்பது பல கோடிக்கணக்கான மக்களின் கனவாக உள்ளது. இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரரும், 1983 ஆம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடிய இந்திய அணியில் அங்கம் வகித்தவருமான சுனில் வால்சன் ஈ.டிவி பாரத் செய்தி நிறுவனத்திற்கு பிரத்யேக பேட்டி அளித்து உள்ளார்.

அவர், 1970களில் இருந்த வெஸ்ட் இண்டீஸ் அணிகளை காட்டிலும் தற்போதைய இந்திய அணி வலிமைமிக்கதாக உள்ளது என்று தெரிவித்தார். மேலும், இந்தியாவைப் பற்றி யார் சொல்ல வேண்டும் என்றும் வீரர்கள் அருமையாக செய்ல்பட்டு வருவதாகவும் ஆட்டம் மற்றும் செயல்திறன் அபாரமாக உள்ளது என்றும் தெரிவித்தார்.

1975 மற்றும் 1979 உலக கோப்பை கிரிக்கெட் தொடரை வென்ற சர் கிளைவ் லாயிட் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியை காட்டிலும் தற்போதையை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி வலிமைமிக்கதாக உள்ளது என்று தெரிவித்தார். இந்திய வீரர்களின் ஆட்டத்திறன் மற்ற வீரர்களுடன் ஒப்பிடுகையில் அவர்களை வேறுபடுத்தி காட்டுவதாகவும், பலம் வாய்ந்த ஆஸ்திரேலியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் அவர்களது உச்சகட்ட காலகட்டத்தில் கூட போராடித் தான் வெற்றிகளை பெற்ற நிலையில், இந்திய வீரர்கள் சிறப்பாக விளையாடி வருகிறார்கள் என்று தெரிவித்தார்.

உச்சகட்டத்தில் இருந்த போதும் கூட வெஸ்ட் இண்டீஸ் அணி பல ஆட்டங்களில் நூலிழையில் வெற்றியை சந்தித்த நிலையில், தற்போதைய இந்திய அணி அதற்கு எதிர்மாறாக எதிரணிகளுக்கு அதற்கான வாய்ப்புகளை வழங்காமல் சவால் அளிக்கும் வகையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்று அவர் தெரிவித்தார்.

டெங்கு பாதிப்புக்கு பின்னர் களம் திரும்பிய தொடக்க வீரர் சுப்மான் கில்லின் ஆட்டத் திறன் மீது அனைத்து இந்தியர்களுக்கும் அச்சம் மற்றும் சந்தேகம் இருந்த நிலையில், தனது தனித்துவமான ஆட்டத் திறன் மூலம் அவர் அதற்கு பதிலளித்து உள்ளார் என்றும் சுனில் வால்சன் தெரிவித்தார்.

ஹர்திக் பாண்ட்யா திடீர் காயம் காரணமாக அணியில் இருந்து விலகியது, ஏமாற்றம் அளிக்கும் வகையில் இருந்தாலும் இந்திய பந்துவீச்சாளர்கள் பந்துவீச்சு மெச்சத்தக்க வகையில் உள்ளது என்று அவர் தெரிவித்தார். நியூசிலாந்து ஆல் ரவுண்டர் ரச்சின் ரவீந்திராவின் விளையாட்டு சிறப்பாக உள்ளதாகவும், பந்துவீச்சு, பேட்டிங் என இரண்டு முறையிலும் அவர் ஜொலிப்பது, விரைவில் துபாயில் நடக்க உள்ள ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் பிரதிபலிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

கடந்த நெதர்லாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் விராட் கோலியின் சிறப்பான பந்துவீச்சு இந்திய அணியின் பந்துவீச்சு வரிசையில் 6வது இடத்திற்கு அவர் பொருத்தமாக இருப்பார் என்பதை நிருபிப்பதாகவும், ரோகித் சர்மா மற்றும் விராட் கோலியின் ஆட்டத்திறன்களை பார்க்கையில் அடுத்த சில ஆண்டுகளுக்கு அவர்களது பங்களிப்பு இந்திய அணிக்கு இன்றியமையாததாக இருக்கும் என்பது மகிழ்ச்சியை அளிப்பதாகவும் அவர் கூறினார்.

எந்தவித இடையூறுகளும் இன்றி இந்திய அணி வரும் நவம்பர் 19ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் வென்று தனது மூன்றாவது உலகக் கோப்பையை கைப்பற்றும் என்று சுனில் வால்சன் தெரிவித்தார்.

இதையும் படிங்க : "உலக கோப்பையை இந்திய அணி நிச்சயம் வெல்லும்" - முகமது அசாருதீன் பிரத்யேக பேட்டி!

ஐதராபாத் : உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடி வரும் தற்போதைய இந்திய அணி 1970களில் இருந்த வெஸ்ட் இண்டீஸ் அணியை காட்டிலும் வலிமை மிக்கதாக உள்ளது என முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் வால்சன் தெரிவித்தார்.

13வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கி நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, இந்தியா, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இலங்கை, நெதர்லாந்து உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றன.

லீக் சுற்று ஆட்டங்கள் நிறைவு பெற்ற நிலையில், அதில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, அஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் வெற்றி பெற்று அரைஇறுதி சுற்றுக்கு தகுதி பெற்றன. முதலாவது அரைஇறுதி ஆட்டத்தில் இந்திய அணி, வரும் 15ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது.

இந்திய அணி உலக கோப்பை வெல்ல வேண்டும் என்பது பல கோடிக்கணக்கான மக்களின் கனவாக உள்ளது. இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரரும், 1983 ஆம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடிய இந்திய அணியில் அங்கம் வகித்தவருமான சுனில் வால்சன் ஈ.டிவி பாரத் செய்தி நிறுவனத்திற்கு பிரத்யேக பேட்டி அளித்து உள்ளார்.

அவர், 1970களில் இருந்த வெஸ்ட் இண்டீஸ் அணிகளை காட்டிலும் தற்போதைய இந்திய அணி வலிமைமிக்கதாக உள்ளது என்று தெரிவித்தார். மேலும், இந்தியாவைப் பற்றி யார் சொல்ல வேண்டும் என்றும் வீரர்கள் அருமையாக செய்ல்பட்டு வருவதாகவும் ஆட்டம் மற்றும் செயல்திறன் அபாரமாக உள்ளது என்றும் தெரிவித்தார்.

1975 மற்றும் 1979 உலக கோப்பை கிரிக்கெட் தொடரை வென்ற சர் கிளைவ் லாயிட் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியை காட்டிலும் தற்போதையை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி வலிமைமிக்கதாக உள்ளது என்று தெரிவித்தார். இந்திய வீரர்களின் ஆட்டத்திறன் மற்ற வீரர்களுடன் ஒப்பிடுகையில் அவர்களை வேறுபடுத்தி காட்டுவதாகவும், பலம் வாய்ந்த ஆஸ்திரேலியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் அவர்களது உச்சகட்ட காலகட்டத்தில் கூட போராடித் தான் வெற்றிகளை பெற்ற நிலையில், இந்திய வீரர்கள் சிறப்பாக விளையாடி வருகிறார்கள் என்று தெரிவித்தார்.

உச்சகட்டத்தில் இருந்த போதும் கூட வெஸ்ட் இண்டீஸ் அணி பல ஆட்டங்களில் நூலிழையில் வெற்றியை சந்தித்த நிலையில், தற்போதைய இந்திய அணி அதற்கு எதிர்மாறாக எதிரணிகளுக்கு அதற்கான வாய்ப்புகளை வழங்காமல் சவால் அளிக்கும் வகையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்று அவர் தெரிவித்தார்.

டெங்கு பாதிப்புக்கு பின்னர் களம் திரும்பிய தொடக்க வீரர் சுப்மான் கில்லின் ஆட்டத் திறன் மீது அனைத்து இந்தியர்களுக்கும் அச்சம் மற்றும் சந்தேகம் இருந்த நிலையில், தனது தனித்துவமான ஆட்டத் திறன் மூலம் அவர் அதற்கு பதிலளித்து உள்ளார் என்றும் சுனில் வால்சன் தெரிவித்தார்.

ஹர்திக் பாண்ட்யா திடீர் காயம் காரணமாக அணியில் இருந்து விலகியது, ஏமாற்றம் அளிக்கும் வகையில் இருந்தாலும் இந்திய பந்துவீச்சாளர்கள் பந்துவீச்சு மெச்சத்தக்க வகையில் உள்ளது என்று அவர் தெரிவித்தார். நியூசிலாந்து ஆல் ரவுண்டர் ரச்சின் ரவீந்திராவின் விளையாட்டு சிறப்பாக உள்ளதாகவும், பந்துவீச்சு, பேட்டிங் என இரண்டு முறையிலும் அவர் ஜொலிப்பது, விரைவில் துபாயில் நடக்க உள்ள ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் பிரதிபலிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

கடந்த நெதர்லாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் விராட் கோலியின் சிறப்பான பந்துவீச்சு இந்திய அணியின் பந்துவீச்சு வரிசையில் 6வது இடத்திற்கு அவர் பொருத்தமாக இருப்பார் என்பதை நிருபிப்பதாகவும், ரோகித் சர்மா மற்றும் விராட் கோலியின் ஆட்டத்திறன்களை பார்க்கையில் அடுத்த சில ஆண்டுகளுக்கு அவர்களது பங்களிப்பு இந்திய அணிக்கு இன்றியமையாததாக இருக்கும் என்பது மகிழ்ச்சியை அளிப்பதாகவும் அவர் கூறினார்.

எந்தவித இடையூறுகளும் இன்றி இந்திய அணி வரும் நவம்பர் 19ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் வென்று தனது மூன்றாவது உலகக் கோப்பையை கைப்பற்றும் என்று சுனில் வால்சன் தெரிவித்தார்.

இதையும் படிங்க : "உலக கோப்பையை இந்திய அணி நிச்சயம் வெல்லும்" - முகமது அசாருதீன் பிரத்யேக பேட்டி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.