ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய அணி நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பைத் தொடரில் விளையாடிவருகிறது. இத்தொடரில் முன்னதாக நடைபெற்ற இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ஒன்றில் இந்திய அணியும், மற்றொன்றில் ஆஸ்திரேலிய அணியும் வென்றுள்ளன.
இதற்கிடையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி வருகிற ஜனவரி 7ஆம் தேதி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.
முன்னதாக ஆஸ்திரேலியா அணியுடனான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் ரோஹித் சர்மா சேர்க்கப்பட்டிருந்தார். பின்னர் கடந்த மாதம் ஆஸ்திரேலியாவிற்குச் சென்ற ரோஹித் சர்மா, கரோனா பாதுகாப்பு நடவடிக்கை காரணமாக மெல்போர்னில் 14 நாள்கள் தனிப்படுத்தப்பட்டிருந்தார்.
இந்நிலையில் நேற்றுடன் ரோஹித்தின் தனிமைப்படுத்துதல் காலம் நிறைவடைந்ததையடுத்து, அவர் இந்திய அணியுடன் இணைந்தார். நீண்ட நாள்களுக்குப் பிறகு அணியில் இணைந்த ரோஹித் சர்மாவை சக வீரர்கள் உற்சாகத்துடன் வரவேற்கும் காணொலியை பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
-
Look who's joined the squad in Melbourne 😀
— BCCI (@BCCI) December 30, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
A warm welcome for @ImRo45 as he joins the team 🤗#TeamIndia #AUSvIND pic.twitter.com/uw49uPkDvR
">Look who's joined the squad in Melbourne 😀
— BCCI (@BCCI) December 30, 2020
A warm welcome for @ImRo45 as he joins the team 🤗#TeamIndia #AUSvIND pic.twitter.com/uw49uPkDvRLook who's joined the squad in Melbourne 😀
— BCCI (@BCCI) December 30, 2020
A warm welcome for @ImRo45 as he joins the team 🤗#TeamIndia #AUSvIND pic.twitter.com/uw49uPkDvR
இது குறித்து பிசிசிஐ வெளியிட்ட ட்விட்டர் பதிவில், "மெல்போர்னில் இந்திய அணியில் யார் இணைந்துள்ளார் என்று பாருங்கள்... அணியில் இணைந்த ரோஹித் சர்மாவிற்கு சகவீரர்களின் அன்பான வரவேற்பு இது" என்று பதிவிட்டுள்ளது.
இதையும் படிங்க:இந்தியன் வெல்ஸ் டென்னிஸ் தொடர் ஒத்திவைப்பு