ETV Bharat / sports

ஐபிஎல் தொடர் நடக்கவில்லை என்றால் தோனியின் எதிர்காலம் என்ன?

author img

By

Published : Mar 13, 2020, 7:26 PM IST

இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் ரத்து செய்யப்பட்டால் இந்திய அணிக்குள் தோனி மீண்டும் வருவது, என்றுமே முடியாத ஒன்றாக மாறிவிடும்.

uncertainty-over-ipl-2020-puts-ms-dhonis-future-in-jeopardy
uncertainty-over-ipl-2020-puts-ms-dhonis-future-in-jeopardy

இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் மார்ச் 29ஆம் தேதி தொடங்கவிருந்த நிலையில், கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக ஏப்ரல் 15ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் தொடருக்காக மற்ற அணிகளை விடவும் முன்னதாக சிஎஸ்கே அணியினர் பயிற்சியைத் தொடங்கியுள்ளனர்.

சிஎஸ்கே அணி
சிஎஸ்கே அணி

கிரிக்கெட்டிலிருந்து 8 மாதங்கள் விலகியிருந்த தோனி, ஐபிஎல் தொடருக்கு தயாராகும் வகையில் சென்னை சேப்பாக்கத்தில் பயிற்சியைத் தொடங்கியிருந்தார். இதனால் ஐபிஎல் தொடர் மூலம் மீண்டும் இந்திய அணியில் தோனி இடம்பிடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. அதேபோல் அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, தேர்வுக்குழுவினர் என அனைவரும் ஐபிஎல் தொடரில் தோனியின் செயல்பாடுகளை வைத்தே இந்திய அணிக்கு தேர்வு செய்வது குறித்து பரீசிலிக்கப்படும் என்றனர்.

உலகக்கோப்பைத் தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் தோனி
உலகக்கோப்பைத் தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் தோனி

இதனால் மற்ற வீரர்களைவிடவும் தோனிக்கு ஐபிஎல் தொடர் மிகவும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இதனால்தான் மார்ச் 1ஆம் தேதியே சென்னைக்கு வந்து பயிற்சியைத் தொடங்கினார் தோனி. ஆனால் யாரும் எதிர்பாராவிதமாக உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதல் பன்மடங்கு அதிகரித்துள்ளது.

இதனால் பல விளையாட்டுப் போட்டிகள் ரத்து செய்யப்பட்டன. ஐபிஎல் போட்டிகள் ரத்து செய்யப்படுமா என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஏப்ரல் 15ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அப்போதும் கொரோனா வைரஸ் தாக்கம் குறையாதபட்சத்தில் என்ன முடிவு எடுக்கப்படும் என தெரியவில்லை.

பயிற்சியில் தோனி
பயிற்சியில் தோனி

ஒருவேளை ஐபிஎல் தொடர் ரத்து செய்யப்பட்டால் தோனி எவ்வாறு மீண்டும் அணிக்குள் வருவார், தோனியின் எதிர்காலம் ஆகியவைப் பற்றி அவரது ரசிகர்களிடையே கவலை ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஒலிம்பிக் போட்டிகளை ஒத்திவைக்க ட்ரம்ப் அறிவுறுத்தல்!

இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் மார்ச் 29ஆம் தேதி தொடங்கவிருந்த நிலையில், கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக ஏப்ரல் 15ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் தொடருக்காக மற்ற அணிகளை விடவும் முன்னதாக சிஎஸ்கே அணியினர் பயிற்சியைத் தொடங்கியுள்ளனர்.

சிஎஸ்கே அணி
சிஎஸ்கே அணி

கிரிக்கெட்டிலிருந்து 8 மாதங்கள் விலகியிருந்த தோனி, ஐபிஎல் தொடருக்கு தயாராகும் வகையில் சென்னை சேப்பாக்கத்தில் பயிற்சியைத் தொடங்கியிருந்தார். இதனால் ஐபிஎல் தொடர் மூலம் மீண்டும் இந்திய அணியில் தோனி இடம்பிடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. அதேபோல் அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, தேர்வுக்குழுவினர் என அனைவரும் ஐபிஎல் தொடரில் தோனியின் செயல்பாடுகளை வைத்தே இந்திய அணிக்கு தேர்வு செய்வது குறித்து பரீசிலிக்கப்படும் என்றனர்.

உலகக்கோப்பைத் தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் தோனி
உலகக்கோப்பைத் தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் தோனி

இதனால் மற்ற வீரர்களைவிடவும் தோனிக்கு ஐபிஎல் தொடர் மிகவும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இதனால்தான் மார்ச் 1ஆம் தேதியே சென்னைக்கு வந்து பயிற்சியைத் தொடங்கினார் தோனி. ஆனால் யாரும் எதிர்பாராவிதமாக உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதல் பன்மடங்கு அதிகரித்துள்ளது.

இதனால் பல விளையாட்டுப் போட்டிகள் ரத்து செய்யப்பட்டன. ஐபிஎல் போட்டிகள் ரத்து செய்யப்படுமா என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஏப்ரல் 15ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அப்போதும் கொரோனா வைரஸ் தாக்கம் குறையாதபட்சத்தில் என்ன முடிவு எடுக்கப்படும் என தெரியவில்லை.

பயிற்சியில் தோனி
பயிற்சியில் தோனி

ஒருவேளை ஐபிஎல் தொடர் ரத்து செய்யப்பட்டால் தோனி எவ்வாறு மீண்டும் அணிக்குள் வருவார், தோனியின் எதிர்காலம் ஆகியவைப் பற்றி அவரது ரசிகர்களிடையே கவலை ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஒலிம்பிக் போட்டிகளை ஒத்திவைக்க ட்ரம்ப் அறிவுறுத்தல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.