ETV Bharat / sports

கரோனா வைரஸ்: ரூ. 52 லட்சம் நிதியுதவி அளித்த சின்ன தல! - சுரேஷ் ரெய்னா ரூ. 52 லட்சம் நிதியுதவி

கரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் விதமாக இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா ரூ. 52 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்.

raina-donates-52-lakh-rupees-to-fight-covid-19
raina-donates-52-lakh-rupees-to-fight-covid-19
author img

By

Published : Mar 28, 2020, 8:57 PM IST

இந்தியாவில் கோவிட் -19 வைரஸ் தொற்று படிப்படியாக அதிகரித்துவருகிறது. நாட்டில் இதுவரை 918 பேருக்கு கோவிட்-19 வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 19 பேர் உயிரிழந்தனர். இதைக் கட்டுப்படுத்த ஏப்ரல் 14ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் வீட்டிலேயே அடைந்துள்ளனர்.

ஊரடங்கு உத்தரவால் அடித்தட்டு மக்கள், தினக்கூலிகள், சிறு, குறு தொழிலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர்களும் பெரிதாத பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உதவும் வகையில் மத்திய, மாநில அரசுகள், தன்னார்வ அமைப்புகள் ஈடுபட்டுவருகின்றன.

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா கோவிட் -19 வைரஸுக்கு நிவாரண நிதியாக ரூ. 52 லட்சம் வழங்கியுள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "கோவிட் -19 வைரஸைக் கட்டுப்படுத்தும் விதமாக நான் பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ. 31 லட்சமும், உத்தர பிரதேச அரசின் நிவாரண நிதிக்கு ரூ. 21 லட்சமும் நிதியுதவி வழங்கியுள்ளேன்.

உங்களால் முடிந்த உதவியை நீங்களும் செய்யுங்கள். நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து உதவினால்தான் இந்த வைரஸைக் கட்டுப்படுத்த முடியும்" என பதிவிட்டுள்ளார். முன்னதாக, இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் ரூ. 50 லட்சம் நிதியுதவி வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ‘உங்களை நினைத்து வெட்கப்படுகிறேன்’- தோனி மனைவி ஆவேசம்!

இந்தியாவில் கோவிட் -19 வைரஸ் தொற்று படிப்படியாக அதிகரித்துவருகிறது. நாட்டில் இதுவரை 918 பேருக்கு கோவிட்-19 வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 19 பேர் உயிரிழந்தனர். இதைக் கட்டுப்படுத்த ஏப்ரல் 14ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் வீட்டிலேயே அடைந்துள்ளனர்.

ஊரடங்கு உத்தரவால் அடித்தட்டு மக்கள், தினக்கூலிகள், சிறு, குறு தொழிலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர்களும் பெரிதாத பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உதவும் வகையில் மத்திய, மாநில அரசுகள், தன்னார்வ அமைப்புகள் ஈடுபட்டுவருகின்றன.

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா கோவிட் -19 வைரஸுக்கு நிவாரண நிதியாக ரூ. 52 லட்சம் வழங்கியுள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "கோவிட் -19 வைரஸைக் கட்டுப்படுத்தும் விதமாக நான் பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ. 31 லட்சமும், உத்தர பிரதேச அரசின் நிவாரண நிதிக்கு ரூ. 21 லட்சமும் நிதியுதவி வழங்கியுள்ளேன்.

உங்களால் முடிந்த உதவியை நீங்களும் செய்யுங்கள். நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து உதவினால்தான் இந்த வைரஸைக் கட்டுப்படுத்த முடியும்" என பதிவிட்டுள்ளார். முன்னதாக, இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் ரூ. 50 லட்சம் நிதியுதவி வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ‘உங்களை நினைத்து வெட்கப்படுகிறேன்’- தோனி மனைவி ஆவேசம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.