ETV Bharat / sports

நான்கு பந்துகளில் கபில் தேவ் செய்த மேஜிக்... லார்ட்ஸ் டெஸ்ட் மெமரீஸ்

author img

By

Published : Jul 30, 2019, 4:44 PM IST

"லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில், நான்கு பந்துகளில் தொடர்ந்து நான்கு சிக்சர்களை அடிக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. ஆனால், நான் அடித்துவிட்டேன்" - கபில்தேவ்

கபில் தேவ் செய்த மாயாஜலம்

ட்விட்டர், ஃபேஸ்புக்கில் கபில் தேவ் குறித்து ஏதேனும் போஸ்ட் பார்த்தால் நம் மனதுக்குள் ஏராளமான மெமரீஸ் ஓடும். கபில்தேவ் கபில்தேவ்தான்யா... அவரை மாதிரி எல்லாம் வர சான்ஸே இல்லை. என்ன தைரியம், என்ன நம்பிக்கை போன்ற சொற்கள் நமக்குள் தோன்றி, லார்ட்ஸில் 1983ஆம் ஆண்டு உலகக்கோப்பையை வென்றது, ரிச்சர்ட்ஸ் அடித்த பந்தை கேட்ச் பிடித்தது போன்று இந்திய அணிக்காக அவர் நிகழ்த்திய பல மாயாஜாலங்கள் நமக்கு தெரியாமலேயே நம் கண் முன் வந்துசெல்லும்.

அப்படி மறக்க முடியாத அளவுக்கு பல நாஸ்டால்ஜியா மொமண்ட்ஸ்களை உருவாக்கிய கபில், 29 வருடங்களுக்கு முன் மீண்டும் அதே லார்ட்ஸில் மற்றொரு ஸ்வீட் மெமரியை வேறு விதத்தில் ரசிகர்களுக்கு தந்துள்ளார். 1990ல், தொடர்ந்து நான்கு பந்துகளில் நான்கு சிக்சர்கள் அடித்து தற்போதைய நவீன் கிரிக்கெட் ஃபார்மெட்டை ஆரம்பித்துவைத்தவர் கபில்தேவ்.

kapil
கபில் தேவ்

1990களில் கிரிக்கெட் என்ற போட்டி இந்தியாவில் தெருக்கள் எங்கும் ஊடுருவ தொடங்கிய காலம் அது. சச்சின் என்ற ஜாம்பவான் இந்திய அணியில் இளம் வீரராக இடம்பிடித்த காலமும் அதுதான். 1990இல் முகமது அசாருதீன் தலைமையிலான இந்திய அணி, மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இங்கிலாந்துக்கு பயணப்பட்டது. முதல் டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் ஜூலை 26ஆம் தேதி தொடங்கியது.

இங்கிலாந்து அணியின் கேப்டன் கிரஹாம் கூச்சிற்கும் இந்த போட்டி மறக்கமுடியாதது. இப்போட்டியில் அவர் தனி மனிதனாக 333 ரன்கள் விளாச, இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 653 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகள் இழந்து டிக்ளேர் செய்தது. கிட்டத்தட்ட 162 ஓவர்கள் (இரண்டு நாட்கள்) முழுவதும் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸை விளையாடியது. 655 ரன்கள், அதுவும் லார்ட்ஸ் மைதானத்தில் இந்த ஸ்கோரை ஓவர் டேக் செய்வது மிகவும் கடினம் என்றாலும் இந்திய அணி மரியாதையான ஸ்கோர் அடிக்குமா என்பதுதான் ரசிகர்களின் அப்போதைய எதிர்பார்ப்பாக இருந்தது.

இந்திய அணியில் ரவி சாஸ்திரி சதம் அடித்தாலும், மற்ற வீரர்கள் இரட்டை இலக்கு ரன்களில் அடுத்தடுத்து தங்களது விக்கெட்டுகளை இழந்தனர். ஒரு கட்டத்தில் இந்திய அணி ஆறு விக்கெட் இழப்புக்கு 348 ரன் எடுத்திருந்தது. அந்த சமயத்தில் எட்டாவது வீரராக களமிறங்கினார் கபில்.

முகமது அசாருதீனுடன் இவர் ஜோடி சேர்ந்து வழக்கம்போல் அதிரடியாக ஆடத் தொடங்கினார். கபில் தேவின் உதவியால் அசாருதின் சதம் விளாசினார். ஆனால் 121 ரன்களில் அவரும் அவுட் என்பதால் இந்திய அணி 393 ரன்களுக்கு ஏழு விக்கெட் என்ற நிலையில் இருந்தது.

ஃபாலோ ஆனைத் தவிர்க்க வேண்டுமென்றால் இந்திய அணி 61 ரன்கள் எடுக்க வேண்டும். ஆனால், மூன்று விக்கெட்டுகள்தான் கைவசம் உள்ளன. எனவே ரசிகர்களுக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை கபில்தேவ் மட்டும்தான். பொதுவாக, நாம் எப்போதெல்லாம் இந்திய அணி மீது நம்பிக்கையை இழக்கிறோமோ அப்போது, களத்தில் யார் இருந்தாலும் சிறப்பாக ஆடி நம்பிக்கை வரவைப்பார்கள். அசாருதினைத் தொடர்ந்து, வந்த கிரண் மோரேவை, நான் ஸ்ட்ரைக்கில் வைத்து கபில்தேவ் ஸ்ட்ரைக்கில் அதிரடியாக ஆடினார். இதனால், இந்திய அணி இப்போட்டியில் ஃபாலோ ஆன் பெறாது என்ற நம்பிக்கை ரசிகர்களுக்கு தோன்றியது.

இந்திய கிரிக்கெட் அணியை பொறுத்தவரை ரசிகர்களுக்கு திடீரென அபாரமான நம்பிக்கையை கொடுக்கும். ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுக்கொண்டிருக்கும்போது ஏதாவதொரு விக்கெட்டை இழந்து மீண்டும் பிரஷரை ஏற்றும். அந்தவகையில், கபில்தேவ் அதிரடியாக ஆடிக்கொண்டிருக்க அவருக்கு கம்பெனி கொடுத்துக்கொண்டிருந்த கிரண் மோரே தனது விக்கெட்டை இழந்தார். அவரைத் தொடர்ந்து வந்த, சஞ்சீவ் ஷர்மாவும் விக்கெட்டை இழக்க இந்திய அணி 9 விக்கெட்டுகளை இழந்து 430 ரன்களை எடுத்திருந்தது. இதனால் நம்பிக்கை கொண்டிருந்த ரசிகர்கள் மீண்டும் பிரஷருக்குள் சென்றனர்.

Kapil
பந்தை சிக்சருக்கு அனுப்பிய கபில்தேவ்

இப்போது, இந்திய அணி ஃபாலோ ஆனை தவிர்க்க 24 ரன்கள் எடுக்க வேண்டும். 24 ரன்கள்தானே, அதான் கபில் இருக்கிறாரே என்று நினைத்தாலும், கையில் ஒரு விக்கெட் மட்டுமே உள்ளது அதுவும் கடைசி ஆளாக களமிறங்கியவர் நரேந்திர ஹிர்வானி.

பலமுறை இக்கட்டான நிலையில் இருந்து அணியை கரைசேர்த்தவர் கபில், ஆனால் இம்முறை இந்திய அணியின் கடைசி விக்கெட்டும் களத்திற்கு வந்துவிட்டது. எனவே கபிலே நினைத்தாலும் இந்த போட்டியை கரை சேர்க்க முடியுமா முடியாதா என்பது தெரியாது. கதை அவ்வளவுதான், இதற்கு மேல் ஏதாவது நடந்தால் அது மெடிக்கல் மிராக்கிள்தான் என அனைவரும் நினைத்துக்கொண்டிருந்தனர்.

ஆட்டத்தின் 114ஆவது ஓவரை, இங்கிலாந்து அணியின் ஆஃப் ஸ்பின்னர் எடி ஹெமிங்ஸ் வீச வந்தார். அவரது ஓவரை கபில்தேவ் எதிர்கொள்ள தயாராக இருந்தார். அந்த ஓவரின் முதலிரண்டு பந்துகளும் டாட் பால்களாகின. அதன்பிறகு, கபில்தேவ் என்ன யூகித்தாரோ தெரியவில்லை. அதற்கு அடுத்து நடந்தது மேஜிக்.

அந்த ஓவரின் மூன்றாவது பந்தை க்ரீஸைவிட்டு வெளியே வந்து பவுலர் தலைமேல் அவர் பந்தை சிக்சருக்கு பறக்கவிட்டார். வழக்கமாக ஒரு சிக்சரை அடித்தாலே அதன் பின் மீண்டும் பெரிய ஷாட் ஆட வேண்டும் என்ற எண்ணம் பேட்ஸ்மேன்களுக்கு தோன்றும். அதே எண்ணம் கபிலுக்கும் தோன்றியது. மீண்டும் ஹெமிங்ஸ் ஓவர் பிட்ச் லெங்த்தில் பந்துவீச, முதல் பந்தை அடித்தது போலவே மீண்டும் கபில் இறங்கி வந்து ஹெம்மிங்ஸ் தலைமேல் சிக்சருக்கு பறக்கவிட்டார். இதனைக் கண்ட ரசிகர்கள் இது ரீப்ளேவா இல்லை புதிய சிக்சா என்று குழம்பும் அளவுக்கு அந்த ஷாட் இருந்தது.

பொதுவாக, இரண்டு சிக்சர்களை வழங்கினாலே பந்துவீச்சாளர்கள் தங்களது லைன் அண்ட் லெங்த்தில் கவனம் செலுத்த தடுமாறுவார்கள். கபில்தேவ் களத்தில் நிற்கிறார் என்றால் சொல்லவா வேண்டும், பின் ஐந்தாவது பந்தை கபில்தேவ் நின்ற இடத்தில் இருந்தே, பவுலர் தலைமேல் சிக்சர் விளாசினார். இப்போது ஆறு ரன்கள் எடுத்தால் ஃபாலோ ஆனில் இருந்து தப்பிக்கும்.

மூன்று சிக்சர்களை அடித்த கபில்தேவ் நான்காவது பந்தையும் சிக்சருக்கு அனுப்புவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. பின்னர், கடைசி பந்தை ஹெம்மிங்ஸ் வீச, கபில் தேவ் 'ஏன்பா போன மூனு பாலையும் எப்படி சிக்ஸ் அடிச்சேனு மறந்துட்டியா இதோ இப்படிதான்' என்பது போல் மீண்டும் நான்காவது முறையாக ஹெம்மிங்ஸ் தலைமேல் பந்தை சிக்சருக்கு அனுப்பி லார்ட்ஸ் மைதானத்தை அளவு பார்த்தார்.only kapil can do this என்ற கமெண்ட்ரி மட்டும்தான் கேட்டது. பின்னர், கபில் தேவ் பெவிலியனை நோக்கி ஃபாலோ ஆனை தவிர்த்துவிட்டோம் என்று கையை தூக்கி காட்டினார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக நான்கு பந்துகளில் நான்கு சிக்சர்கள் அரங்கேறுவதெல்லாம் அதுவே முதல்முறை. அதனை கிரிக்கெட்டின் மெக்காவான லார்ட்ஸில் கபில்தேவ் நிகழ்த்தினார்.

இந்திய அணி ஃபாலோ ஆனைத்தான் தவிர்த்தது, ஆனால் கபில் தேவின் இன்னிங்ஸ் இந்திய அணி வெற்றிபெற்றதற்கு சமமாக இருந்தது. இதைத்தொடர்ந்து, மறுமுனையில் இருந்த நரேந்திர ஹிர்வானி அடுத்த ஓவரிலேயே டக் அவுட் ஆனார். இறுதியில் கபில் தேவ் 75 பந்துகளில் 77 ரன்கள் அடித்து நாட் அவுட் பேட்ஸ்மேனாக பெவிலியனுக்கு கெத்தாக சென்றார்.

இவரது ஆட்டத்தைக் கண்டு மீண்டும் லார்ட்ஸ் வியப்படைந்தது. இந்த நிகழ்வு ஜூலை 30, 1990ல் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தாலும், ’ஜெயிக்கிறமோ, தோற்குறமோ ஆனா சண்டை செய்யனும்’ என்பதை கபில்தேவ் அன்று உலகுக்கு உணர்த்தினார்.

டெஸ்ட், ஒருநாள் என ஃபார்மெட்தான் மாறுமே தவிர, கபில்தேவின் கேம் மாறாது. சேவாக்கிற்கு முன்னரே, ரசிகர்களை டெஸ்ட் கிரிக்கெட் போட்டியையும் ஆர்வமாக பார்க்கச் செய்தவர் அவர். மாடர்ன் கிரிக்கெட்டில் யார் வேண்டுமானாலும் அதிரடியாக ஆடலாம், தொடர்ச்சியாக சிக்சர்கள் அடிக்கலாம் ஆனால், சிக்சர்களையே பெரும் வியப்பாக பார்க்கும் காலக்கட்டத்தில் அதுவும் டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக நான்கு சிக்சர்கள் அடிப்பது எல்லாம் கபில்தேவால் மட்டுமே முடியும்.

கபில் தேவ்

''நான்கு பந்துகளில் நான்கு சிக்சர்கள் அடிப்பேன் என்று நான் நினைக்கவில்லை, ஆனால் அடித்துவிட்டேன். என்னை போன்ற நபர் இதுபோன்ற செயல்தான் செய்வார்கள்" - கபில் தேவ்

ட்விட்டர், ஃபேஸ்புக்கில் கபில் தேவ் குறித்து ஏதேனும் போஸ்ட் பார்த்தால் நம் மனதுக்குள் ஏராளமான மெமரீஸ் ஓடும். கபில்தேவ் கபில்தேவ்தான்யா... அவரை மாதிரி எல்லாம் வர சான்ஸே இல்லை. என்ன தைரியம், என்ன நம்பிக்கை போன்ற சொற்கள் நமக்குள் தோன்றி, லார்ட்ஸில் 1983ஆம் ஆண்டு உலகக்கோப்பையை வென்றது, ரிச்சர்ட்ஸ் அடித்த பந்தை கேட்ச் பிடித்தது போன்று இந்திய அணிக்காக அவர் நிகழ்த்திய பல மாயாஜாலங்கள் நமக்கு தெரியாமலேயே நம் கண் முன் வந்துசெல்லும்.

அப்படி மறக்க முடியாத அளவுக்கு பல நாஸ்டால்ஜியா மொமண்ட்ஸ்களை உருவாக்கிய கபில், 29 வருடங்களுக்கு முன் மீண்டும் அதே லார்ட்ஸில் மற்றொரு ஸ்வீட் மெமரியை வேறு விதத்தில் ரசிகர்களுக்கு தந்துள்ளார். 1990ல், தொடர்ந்து நான்கு பந்துகளில் நான்கு சிக்சர்கள் அடித்து தற்போதைய நவீன் கிரிக்கெட் ஃபார்மெட்டை ஆரம்பித்துவைத்தவர் கபில்தேவ்.

kapil
கபில் தேவ்

1990களில் கிரிக்கெட் என்ற போட்டி இந்தியாவில் தெருக்கள் எங்கும் ஊடுருவ தொடங்கிய காலம் அது. சச்சின் என்ற ஜாம்பவான் இந்திய அணியில் இளம் வீரராக இடம்பிடித்த காலமும் அதுதான். 1990இல் முகமது அசாருதீன் தலைமையிலான இந்திய அணி, மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இங்கிலாந்துக்கு பயணப்பட்டது. முதல் டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் ஜூலை 26ஆம் தேதி தொடங்கியது.

இங்கிலாந்து அணியின் கேப்டன் கிரஹாம் கூச்சிற்கும் இந்த போட்டி மறக்கமுடியாதது. இப்போட்டியில் அவர் தனி மனிதனாக 333 ரன்கள் விளாச, இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 653 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகள் இழந்து டிக்ளேர் செய்தது. கிட்டத்தட்ட 162 ஓவர்கள் (இரண்டு நாட்கள்) முழுவதும் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸை விளையாடியது. 655 ரன்கள், அதுவும் லார்ட்ஸ் மைதானத்தில் இந்த ஸ்கோரை ஓவர் டேக் செய்வது மிகவும் கடினம் என்றாலும் இந்திய அணி மரியாதையான ஸ்கோர் அடிக்குமா என்பதுதான் ரசிகர்களின் அப்போதைய எதிர்பார்ப்பாக இருந்தது.

இந்திய அணியில் ரவி சாஸ்திரி சதம் அடித்தாலும், மற்ற வீரர்கள் இரட்டை இலக்கு ரன்களில் அடுத்தடுத்து தங்களது விக்கெட்டுகளை இழந்தனர். ஒரு கட்டத்தில் இந்திய அணி ஆறு விக்கெட் இழப்புக்கு 348 ரன் எடுத்திருந்தது. அந்த சமயத்தில் எட்டாவது வீரராக களமிறங்கினார் கபில்.

முகமது அசாருதீனுடன் இவர் ஜோடி சேர்ந்து வழக்கம்போல் அதிரடியாக ஆடத் தொடங்கினார். கபில் தேவின் உதவியால் அசாருதின் சதம் விளாசினார். ஆனால் 121 ரன்களில் அவரும் அவுட் என்பதால் இந்திய அணி 393 ரன்களுக்கு ஏழு விக்கெட் என்ற நிலையில் இருந்தது.

ஃபாலோ ஆனைத் தவிர்க்க வேண்டுமென்றால் இந்திய அணி 61 ரன்கள் எடுக்க வேண்டும். ஆனால், மூன்று விக்கெட்டுகள்தான் கைவசம் உள்ளன. எனவே ரசிகர்களுக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை கபில்தேவ் மட்டும்தான். பொதுவாக, நாம் எப்போதெல்லாம் இந்திய அணி மீது நம்பிக்கையை இழக்கிறோமோ அப்போது, களத்தில் யார் இருந்தாலும் சிறப்பாக ஆடி நம்பிக்கை வரவைப்பார்கள். அசாருதினைத் தொடர்ந்து, வந்த கிரண் மோரேவை, நான் ஸ்ட்ரைக்கில் வைத்து கபில்தேவ் ஸ்ட்ரைக்கில் அதிரடியாக ஆடினார். இதனால், இந்திய அணி இப்போட்டியில் ஃபாலோ ஆன் பெறாது என்ற நம்பிக்கை ரசிகர்களுக்கு தோன்றியது.

இந்திய கிரிக்கெட் அணியை பொறுத்தவரை ரசிகர்களுக்கு திடீரென அபாரமான நம்பிக்கையை கொடுக்கும். ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுக்கொண்டிருக்கும்போது ஏதாவதொரு விக்கெட்டை இழந்து மீண்டும் பிரஷரை ஏற்றும். அந்தவகையில், கபில்தேவ் அதிரடியாக ஆடிக்கொண்டிருக்க அவருக்கு கம்பெனி கொடுத்துக்கொண்டிருந்த கிரண் மோரே தனது விக்கெட்டை இழந்தார். அவரைத் தொடர்ந்து வந்த, சஞ்சீவ் ஷர்மாவும் விக்கெட்டை இழக்க இந்திய அணி 9 விக்கெட்டுகளை இழந்து 430 ரன்களை எடுத்திருந்தது. இதனால் நம்பிக்கை கொண்டிருந்த ரசிகர்கள் மீண்டும் பிரஷருக்குள் சென்றனர்.

Kapil
பந்தை சிக்சருக்கு அனுப்பிய கபில்தேவ்

இப்போது, இந்திய அணி ஃபாலோ ஆனை தவிர்க்க 24 ரன்கள் எடுக்க வேண்டும். 24 ரன்கள்தானே, அதான் கபில் இருக்கிறாரே என்று நினைத்தாலும், கையில் ஒரு விக்கெட் மட்டுமே உள்ளது அதுவும் கடைசி ஆளாக களமிறங்கியவர் நரேந்திர ஹிர்வானி.

பலமுறை இக்கட்டான நிலையில் இருந்து அணியை கரைசேர்த்தவர் கபில், ஆனால் இம்முறை இந்திய அணியின் கடைசி விக்கெட்டும் களத்திற்கு வந்துவிட்டது. எனவே கபிலே நினைத்தாலும் இந்த போட்டியை கரை சேர்க்க முடியுமா முடியாதா என்பது தெரியாது. கதை அவ்வளவுதான், இதற்கு மேல் ஏதாவது நடந்தால் அது மெடிக்கல் மிராக்கிள்தான் என அனைவரும் நினைத்துக்கொண்டிருந்தனர்.

ஆட்டத்தின் 114ஆவது ஓவரை, இங்கிலாந்து அணியின் ஆஃப் ஸ்பின்னர் எடி ஹெமிங்ஸ் வீச வந்தார். அவரது ஓவரை கபில்தேவ் எதிர்கொள்ள தயாராக இருந்தார். அந்த ஓவரின் முதலிரண்டு பந்துகளும் டாட் பால்களாகின. அதன்பிறகு, கபில்தேவ் என்ன யூகித்தாரோ தெரியவில்லை. அதற்கு அடுத்து நடந்தது மேஜிக்.

அந்த ஓவரின் மூன்றாவது பந்தை க்ரீஸைவிட்டு வெளியே வந்து பவுலர் தலைமேல் அவர் பந்தை சிக்சருக்கு பறக்கவிட்டார். வழக்கமாக ஒரு சிக்சரை அடித்தாலே அதன் பின் மீண்டும் பெரிய ஷாட் ஆட வேண்டும் என்ற எண்ணம் பேட்ஸ்மேன்களுக்கு தோன்றும். அதே எண்ணம் கபிலுக்கும் தோன்றியது. மீண்டும் ஹெமிங்ஸ் ஓவர் பிட்ச் லெங்த்தில் பந்துவீச, முதல் பந்தை அடித்தது போலவே மீண்டும் கபில் இறங்கி வந்து ஹெம்மிங்ஸ் தலைமேல் சிக்சருக்கு பறக்கவிட்டார். இதனைக் கண்ட ரசிகர்கள் இது ரீப்ளேவா இல்லை புதிய சிக்சா என்று குழம்பும் அளவுக்கு அந்த ஷாட் இருந்தது.

பொதுவாக, இரண்டு சிக்சர்களை வழங்கினாலே பந்துவீச்சாளர்கள் தங்களது லைன் அண்ட் லெங்த்தில் கவனம் செலுத்த தடுமாறுவார்கள். கபில்தேவ் களத்தில் நிற்கிறார் என்றால் சொல்லவா வேண்டும், பின் ஐந்தாவது பந்தை கபில்தேவ் நின்ற இடத்தில் இருந்தே, பவுலர் தலைமேல் சிக்சர் விளாசினார். இப்போது ஆறு ரன்கள் எடுத்தால் ஃபாலோ ஆனில் இருந்து தப்பிக்கும்.

மூன்று சிக்சர்களை அடித்த கபில்தேவ் நான்காவது பந்தையும் சிக்சருக்கு அனுப்புவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. பின்னர், கடைசி பந்தை ஹெம்மிங்ஸ் வீச, கபில் தேவ் 'ஏன்பா போன மூனு பாலையும் எப்படி சிக்ஸ் அடிச்சேனு மறந்துட்டியா இதோ இப்படிதான்' என்பது போல் மீண்டும் நான்காவது முறையாக ஹெம்மிங்ஸ் தலைமேல் பந்தை சிக்சருக்கு அனுப்பி லார்ட்ஸ் மைதானத்தை அளவு பார்த்தார்.only kapil can do this என்ற கமெண்ட்ரி மட்டும்தான் கேட்டது. பின்னர், கபில் தேவ் பெவிலியனை நோக்கி ஃபாலோ ஆனை தவிர்த்துவிட்டோம் என்று கையை தூக்கி காட்டினார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக நான்கு பந்துகளில் நான்கு சிக்சர்கள் அரங்கேறுவதெல்லாம் அதுவே முதல்முறை. அதனை கிரிக்கெட்டின் மெக்காவான லார்ட்ஸில் கபில்தேவ் நிகழ்த்தினார்.

இந்திய அணி ஃபாலோ ஆனைத்தான் தவிர்த்தது, ஆனால் கபில் தேவின் இன்னிங்ஸ் இந்திய அணி வெற்றிபெற்றதற்கு சமமாக இருந்தது. இதைத்தொடர்ந்து, மறுமுனையில் இருந்த நரேந்திர ஹிர்வானி அடுத்த ஓவரிலேயே டக் அவுட் ஆனார். இறுதியில் கபில் தேவ் 75 பந்துகளில் 77 ரன்கள் அடித்து நாட் அவுட் பேட்ஸ்மேனாக பெவிலியனுக்கு கெத்தாக சென்றார்.

இவரது ஆட்டத்தைக் கண்டு மீண்டும் லார்ட்ஸ் வியப்படைந்தது. இந்த நிகழ்வு ஜூலை 30, 1990ல் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தாலும், ’ஜெயிக்கிறமோ, தோற்குறமோ ஆனா சண்டை செய்யனும்’ என்பதை கபில்தேவ் அன்று உலகுக்கு உணர்த்தினார்.

டெஸ்ட், ஒருநாள் என ஃபார்மெட்தான் மாறுமே தவிர, கபில்தேவின் கேம் மாறாது. சேவாக்கிற்கு முன்னரே, ரசிகர்களை டெஸ்ட் கிரிக்கெட் போட்டியையும் ஆர்வமாக பார்க்கச் செய்தவர் அவர். மாடர்ன் கிரிக்கெட்டில் யார் வேண்டுமானாலும் அதிரடியாக ஆடலாம், தொடர்ச்சியாக சிக்சர்கள் அடிக்கலாம் ஆனால், சிக்சர்களையே பெரும் வியப்பாக பார்க்கும் காலக்கட்டத்தில் அதுவும் டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக நான்கு சிக்சர்கள் அடிப்பது எல்லாம் கபில்தேவால் மட்டுமே முடியும்.

கபில் தேவ்

''நான்கு பந்துகளில் நான்கு சிக்சர்கள் அடிப்பேன் என்று நான் நினைக்கவில்லை, ஆனால் அடித்துவிட்டேன். என்னை போன்ற நபர் இதுபோன்ற செயல்தான் செய்வார்கள்" - கபில் தேவ்

Intro:Body:

On this day kapil 4 sixes avoids follow on



நான்கு பந்துகளில் கபில் செய்த மாயாஜாலம் - ஓவல் டெஸ்ட் மெமரி


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.