ETV Bharat / sports

உலகக்கோப்பை பேட் & சில நினைவுப்பொருள்களை ஏலத்தில் விற்கும் கே.எல்.ராகுல்! - விழிப்புணர்வு அறக்கட்டளை

இந்திய அணியின் நட்சத்திர வீரர் கே.எல். ராகுல், தனது பிராண்ட் கல்லியுடன் (Gully) சேர்ந்து, தனது 2019 உலகக் கோப்பை பேட் உள்பட தனது சில கிரிக்கெட் உபகரணங்களை ஏலத்திற்கு நன்கொடையாக வழங்கியுள்ளார். ஏலத்தில் இருந்து கிடைக்கும் தொகை அனைத்தும் 'விழிப்புணர்வு அறக்கட்டளைக்கு' (Aware Foundation) வழங்குவதாக கூறியுள்ளார்.

KL Rahul donates 2019 WC bat & other memorabilia for auction
KL Rahul donates 2019 WC bat & other memorabilia for auction
author img

By

Published : Apr 20, 2020, 4:46 PM IST

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராக வலம் வருவபர் கே.எல்.ராகுல். இவர் சமீபத்தில் தனது 28ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். அப்போது இந்திய அணியின் ரெய்னா, அஸ்வின், சஹால், மயங்க் அகர்வால், சகா, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி என பல்வேறு பிரபலங்கள் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

இதனையடுத்து கே.எல். ராகுல் கூறுகையில், ”இது எனது வாழ்வில் மிகவும் சிறப்பான தினம். அதனால் நானும், எனது கல்லியும் இணைந்து இந்நாளை இன்னும் சிறப்பாக மாற்ற நினைத்தோம். அதனால் நான் எனது கிரிக்கெட் உபகரணங்கள் (மட்டைகள், கால் தடுப்புகள் (Pads), கிளவுஸ், ஹெல்மட், ஜெர்சிகள்), 2019ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரின் போது பயன்படுத்திய பேட் உள்ளிட்டவைகளை ஏலத்தில் விற்க நன்கொடையாக அளித்துள்ளேன்.

மேலும், இப்பொருள்களை விற்பதினால் கிடைக்கும் அனைத்து தொகையையும் விழிப்புணர்வு அறக்கட்டளைக்கு வழங்கவுள்ளேன். இதன் மூலம் ஏழைக் குழந்தைகளை இந்த அறக்கட்டளை கவனித்துக்கொள்ளும். எனது இந்த சிறப்பான நாளில் இதனை செய்துள்ளது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது” என்று தெரிவித்தார்.

இதற்கு முன்னதாக கே.எல்.ராகுல், சில விலங்குகள் காப்பகத்திற்கு நிதியுதவியும், கடந்த ஆண்டு கேன்சர் பாதிக்கப்பட்ட சிறுமியின் மருத்துவ செலவையும் ஏற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:'ஆஸ்திரேலிய வீரர்கள் தங்களது சம்பளத்தை விட்டுக்கொடுக்க தயார்' - ஹசில்வுட்!

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராக வலம் வருவபர் கே.எல்.ராகுல். இவர் சமீபத்தில் தனது 28ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். அப்போது இந்திய அணியின் ரெய்னா, அஸ்வின், சஹால், மயங்க் அகர்வால், சகா, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி என பல்வேறு பிரபலங்கள் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

இதனையடுத்து கே.எல். ராகுல் கூறுகையில், ”இது எனது வாழ்வில் மிகவும் சிறப்பான தினம். அதனால் நானும், எனது கல்லியும் இணைந்து இந்நாளை இன்னும் சிறப்பாக மாற்ற நினைத்தோம். அதனால் நான் எனது கிரிக்கெட் உபகரணங்கள் (மட்டைகள், கால் தடுப்புகள் (Pads), கிளவுஸ், ஹெல்மட், ஜெர்சிகள்), 2019ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரின் போது பயன்படுத்திய பேட் உள்ளிட்டவைகளை ஏலத்தில் விற்க நன்கொடையாக அளித்துள்ளேன்.

மேலும், இப்பொருள்களை விற்பதினால் கிடைக்கும் அனைத்து தொகையையும் விழிப்புணர்வு அறக்கட்டளைக்கு வழங்கவுள்ளேன். இதன் மூலம் ஏழைக் குழந்தைகளை இந்த அறக்கட்டளை கவனித்துக்கொள்ளும். எனது இந்த சிறப்பான நாளில் இதனை செய்துள்ளது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது” என்று தெரிவித்தார்.

இதற்கு முன்னதாக கே.எல்.ராகுல், சில விலங்குகள் காப்பகத்திற்கு நிதியுதவியும், கடந்த ஆண்டு கேன்சர் பாதிக்கப்பட்ட சிறுமியின் மருத்துவ செலவையும் ஏற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:'ஆஸ்திரேலிய வீரர்கள் தங்களது சம்பளத்தை விட்டுக்கொடுக்க தயார்' - ஹசில்வுட்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.