ETV Bharat / sports

2020 டி20 உலகக்கோப்பை தொடரின் தலைவிதி ஜூன் 10இல் தெரியவரும்!

author img

By

Published : May 29, 2020, 1:11 PM IST

இந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவில் நடத்த திட்டமிடப்பட்ட டி20 உலகக்கோப்பை தொடர் குறித்த முடிவு ஜூன் 10ஆம் தேதிதான் தெரியவரும் என ஐசிசி தெரிவித்துள்ளது.

ICC defers decision on T20 World Cup 2020 till June 10
ICC defers decision on T20 World Cup 2020 till June 10

ஆஸ்திரேலியா, இந்தியா, இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் (நடப்பு சாம்பியன்) உள்ளிட்ட 16 ஆடவர் அணிகளுக்கான டி20 உலகக்கோப்பை தொடர் வரும் ஆக்டோபர் 18 முதல் நவம்பர் 15 வரை ஆஸ்திரேலியாவில் நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது. இந்த நிலையில், கரோனா வைரஸ் காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக பல்வேறு விளையாட்டு போட்டிகளும் தள்ளிவைக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக, மார்ச் 29ஆம் தேதி தொடங்கவிருந்த ஐபிஎல் தொடர் தேதி குறிப்பிடபடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதேபோல் டோக்கியோவில் வரும் ஜூலை 24ஆம் தேதி நடைபெறவிருந்த ஒலிம்பிக் போட்டி அடுத்த ஆண்டிற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கரோனா வைரஸ் அச்சுறுத்தலால் டி20 உலகக்கோப்பை தொடர் திட்டமிட்டப்படி நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இதனிடையே, இந்த தொடர் 2022ஆம் அண்டிற்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக சில தகல்கள் வெளியாகின. இந்நிலையில், இது தொடர்பாக நேற்று ஐசிசி தலைவர் ஷஷாங்க் மனோகர் தலைமையில் மற்ற நாட்டு வாரியங்களுடன் வீடியோ கான்ஃபிரன்ஸ் மூலம் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில், தற்போதைய சூழலைக் கண்காணித்த டி20 உலகக்கோப்பை தொடர் திட்டமிட்டப்படி நடைபெறுமா? நடைபெறாதா என்பது குறித்து வரும் ஜூன் 10ஆம் தேதி நடைபெறவுள்ள அடுத்த ஐசிசியின் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, டி20 உலகக்கோப்பை தள்ளிவைக்கபட்டால் அக்டோபர், நவம்பர் மாதங்களில் ஐபிஎல் டி20 தொடர் நடைபெற வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக தகவல் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தோனியின் டீம் மீட்டிங் இரண்டு நிமிடங்கள்தான்...!

ஆஸ்திரேலியா, இந்தியா, இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் (நடப்பு சாம்பியன்) உள்ளிட்ட 16 ஆடவர் அணிகளுக்கான டி20 உலகக்கோப்பை தொடர் வரும் ஆக்டோபர் 18 முதல் நவம்பர் 15 வரை ஆஸ்திரேலியாவில் நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது. இந்த நிலையில், கரோனா வைரஸ் காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக பல்வேறு விளையாட்டு போட்டிகளும் தள்ளிவைக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக, மார்ச் 29ஆம் தேதி தொடங்கவிருந்த ஐபிஎல் தொடர் தேதி குறிப்பிடபடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதேபோல் டோக்கியோவில் வரும் ஜூலை 24ஆம் தேதி நடைபெறவிருந்த ஒலிம்பிக் போட்டி அடுத்த ஆண்டிற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கரோனா வைரஸ் அச்சுறுத்தலால் டி20 உலகக்கோப்பை தொடர் திட்டமிட்டப்படி நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இதனிடையே, இந்த தொடர் 2022ஆம் அண்டிற்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக சில தகல்கள் வெளியாகின. இந்நிலையில், இது தொடர்பாக நேற்று ஐசிசி தலைவர் ஷஷாங்க் மனோகர் தலைமையில் மற்ற நாட்டு வாரியங்களுடன் வீடியோ கான்ஃபிரன்ஸ் மூலம் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில், தற்போதைய சூழலைக் கண்காணித்த டி20 உலகக்கோப்பை தொடர் திட்டமிட்டப்படி நடைபெறுமா? நடைபெறாதா என்பது குறித்து வரும் ஜூன் 10ஆம் தேதி நடைபெறவுள்ள அடுத்த ஐசிசியின் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, டி20 உலகக்கோப்பை தள்ளிவைக்கபட்டால் அக்டோபர், நவம்பர் மாதங்களில் ஐபிஎல் டி20 தொடர் நடைபெற வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக தகவல் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தோனியின் டீம் மீட்டிங் இரண்டு நிமிடங்கள்தான்...!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.