ETV Bharat / sports

கோப்பையுடன் வந்த மாற்றுத்திறனாளி... உற்சாக வரவேற்பளித்த மக்கள்!

author img

By

Published : Sep 27, 2019, 10:01 PM IST

மதுரை: நேபாள அணிக்கு எதிரான மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் போட்டியில் கோப்பை வென்ற இந்திய அணியில் இடம்பிடித்திருந்த தமிழ்நாட்டு வீரர் சச்சின் சிவாவிற்கு மதுரை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Sachin Siva

மதுரை மாவட்டம் அனுப்பானடி பகுதியைச் சேர்ந்தவர் சச்சின் சிவா. தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணியின் கேப்டனான இவர், இந்திய மாற்றுத்திறனாளிகளுக்கான அணியிலும் இடம்பிடித்திருக்கிறார்.

இந்நிலையில், சமீபத்தில் இந்திய மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணி நேபாள அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில் கலந்துகொண்ட இந்திய அணி 3-0 என்ற கணக்கில் டி20 தொடரைக் கைப்பற்றியது.

இந்த தொடரில் கலந்துகொண்டதன் மூலம் முதன்முதலாக மாற்றுத்திறனாளிகளுக்கான இந்திய கிரிக்கெட் அணியில் கலந்துகொண்ட முதல் தமிழர் என்ற பெருமையை சச்சின் சிவா பெற்றார். இதன் காரணமாக சச்சின் சிவாவிடம் வெற்றிக் கோப்பையை வழங்கி அனுப்பிவைத்தனர். கோப்பையுடன் இன்று சொந்த ஊர் திரும்பிய சச்சின் சிவாவிற்கு மதுரை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த சச்சின் சிவா, 'நேபாளத்தில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் தொடரில், இந்திய அணி 3-0 என்ற கணக்கில் நேபாள அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.

இந்திய மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர் சச்சின் சிவா

தமிழ்நாட்டிலிருந்து தற்போது நான் ஒருவர் மட்டுமே இந்திய மாற்றுதிறனாளிகள் கிரிக்கெட் அணியில் தேர்வாகி உள்ளேன். என்னைப்போல் மற்ற மாற்றுத்திறனாளிகளும் இந்திய அணிக்காக விளையாட வேண்டும். 2020ல் மாற்றுத் திறனாளிகளுக்கான உலகக்கோப்பை போட்டி நடைபெற உள்ளது. அதில் கண்டிப்பாக இடம் பெறுவேன் என்று நம்புகிறேன்’ என்றார்.

இதையும் படிங்க: #CPL2019: இவரா இப்படி...! - ருத்ரதாண்டவமாடிய டுமினி; வியந்த ரசிகர்கள்!

மதுரை மாவட்டம் அனுப்பானடி பகுதியைச் சேர்ந்தவர் சச்சின் சிவா. தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணியின் கேப்டனான இவர், இந்திய மாற்றுத்திறனாளிகளுக்கான அணியிலும் இடம்பிடித்திருக்கிறார்.

இந்நிலையில், சமீபத்தில் இந்திய மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணி நேபாள அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில் கலந்துகொண்ட இந்திய அணி 3-0 என்ற கணக்கில் டி20 தொடரைக் கைப்பற்றியது.

இந்த தொடரில் கலந்துகொண்டதன் மூலம் முதன்முதலாக மாற்றுத்திறனாளிகளுக்கான இந்திய கிரிக்கெட் அணியில் கலந்துகொண்ட முதல் தமிழர் என்ற பெருமையை சச்சின் சிவா பெற்றார். இதன் காரணமாக சச்சின் சிவாவிடம் வெற்றிக் கோப்பையை வழங்கி அனுப்பிவைத்தனர். கோப்பையுடன் இன்று சொந்த ஊர் திரும்பிய சச்சின் சிவாவிற்கு மதுரை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த சச்சின் சிவா, 'நேபாளத்தில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் தொடரில், இந்திய அணி 3-0 என்ற கணக்கில் நேபாள அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.

இந்திய மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர் சச்சின் சிவா

தமிழ்நாட்டிலிருந்து தற்போது நான் ஒருவர் மட்டுமே இந்திய மாற்றுதிறனாளிகள் கிரிக்கெட் அணியில் தேர்வாகி உள்ளேன். என்னைப்போல் மற்ற மாற்றுத்திறனாளிகளும் இந்திய அணிக்காக விளையாட வேண்டும். 2020ல் மாற்றுத் திறனாளிகளுக்கான உலகக்கோப்பை போட்டி நடைபெற உள்ளது. அதில் கண்டிப்பாக இடம் பெறுவேன் என்று நம்புகிறேன்’ என்றார்.

இதையும் படிங்க: #CPL2019: இவரா இப்படி...! - ருத்ரதாண்டவமாடிய டுமினி; வியந்த ரசிகர்கள்!

Intro:மாற்றுத்திறனாளிகளுக்கான இந்திய கிரிக்கெட் போட்டியில் கலந்துகொண்டு வெற்றியுடன் திரும்பிய தமிழக வீரர் சச்சின் சிவாவிற்கு மதுரை விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது*Body:*நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் தனியார் அமைப்புகளின் உதவியுடன் நேபாளம் வரை சென்று மாற்றுத்திறனாளிகளுக்கான இந்திய கிரிக்கெட் போட்டியில் கலந்துகொண்டு வெற்றியுடன் திரும்பிய தமிழக வீரர் சச்சின் சிவாவிற்கு மதுரை விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது*

மதுரை மாவட்டம் அனுப்பானடி சேர்ந்த சச்சின் சிவா என்பவர் மாற்றுத்திறனாளிகளுக்கான தமிழ்நாடு கிரிக்கெட் போட்டியின் தலைவராகவும், இந்திய மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டியின் விளையாட்டு வீரராகவும் உள்ளார்.

இந்திய மாற்றுத்திறனாளிகளுக்கான T20 கிரிக்கெட் போட்டி நேபாளத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு 3 - 0 என்ற கணக்கில் 3- டி20 கிரிக்கெட் போட்டியிலும் இந்திய மாற்றுத்திறனாளிக்கான கிரிக்கெட் அணி வெற்றி பெற்றது முதன்முதலாக மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த சச்சின் சிவா என்பவர் கலந்து கொண்டார் முதன்முதலாக இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடிய காரணத்தினால் தனது சொந்த ஊரில் கோப்பையை காண்பிப்பதற்காக அவருக்கு கோப்பை வழங்கப்பட்டு இன்று மதுரை வந்தடைந்தார்.

_பின் செய்தியாளர்களைச் சந்தித்த சச்சின் சிவா கூறும்போது_

நேபாளில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டியில் 3 - 0 என்ற கணக்கில் இந்திய மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் அணி வெற்றி பெற்றுள்ளது அது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது

முதல்முறையாக இந்திய அணிக்காக விளையாடிய காரணத்தினால் வாங்கிய கோப்பையை அனைவரிடமும் காட்டுவதற்காக தற்போது இங்கு கொண்டு வந்துள்ளேன்.

இதற்கு உறுதுணையாக இருந்த அனைவரிடமும் இந்த கோப்பையை காண்பித்து பகிர்ந்து கொள்வது மிகவும் சந்தோஷம் அளிக்கிறது.

இதற்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் முக்கியமாக நடிகர் சிவகார்த்திகேயன் அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழகத்தில் தற்போது நான் ஒருவர் மட்டுமே தேர்வாகி உள்ளேன் இதுபோல் பல பேர் தேர்வாக வேண்டும்

இன்னும் 2 மாதங்களில் ஸ்ரீலங்காவில் நடைபெறவிருக்கின்ற போட்டியில் பங்கேற்க உள்ளேன். இந்த முறை நன்றாக விளையாடிய காரணத்தினால் எனக்கு அதில் இடம் கிடைக்கும் என்று நம்புகிறேன்.

அதற்கடுத்து 2020ல் ஏப்ரலில் மாற்றுத் திறனாளிகளுக்கான உலகக்கோப்பை போட்டி நடைபெற உள்ளது. அதில் கண்டிப்பாக இடம் பெறுவேன் என்று நம்புகிறேன்.

இந்திய அரசிடம் இருந்து எந்த ஒரு உதவியும் கிடைக்கவில்லை கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று நம்புகிறேன்.

சென்ற முறை உலகக் கோப்பை வென்று உள்ளோம் ஆனால் இதுவரை சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை.

இந்திய அரசு, பிசிசிஐ அனைவரும் ஆதரவு தருவார்கள் என்று நம்புகிறோம் என கூறினார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.