ETV Bharat / sports

தோனிக்கு கடமைப்பட்டுள்ளேன் - வாட்சன்

author img

By

Published : Apr 12, 2020, 1:21 PM IST

கடந்த ஐபிஎல் சீசனில் கேப்டன் தோனி, பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் ஆகியோர் என் மீது நம்பிக்கை வைத்து விளையாட வாய்ப்பு தந்ததால் அவர்களுக்கு என்றும் கடமைப்பட்டுள்ளேன் என சிஎஸ்கே வீரர் ஷேன் வாட்சன் தெரிவித்துள்ளார்.

Dhoni and Fleming never doubted me, kept faith in me: Shane Watson
Dhoni and Fleming never doubted me, kept faith in me: Shane Watson

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டரான ஷேன் வாட்சன் ஐபிஎல் தொடரில் 2018ஆம் ஆண்டிலிருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிவருகிறார். சூதாட்ட விவகாரத்திற்கு பிறகு சென்னை அணி 2018இல் கோப்பையுடன் கம்பேக் தந்ததற்கு வாட்சனின் பங்களிப்பும் முக்கிய காரணம்.

ஹைதராபாத் அணிக்கு எதிரான இறுதி போட்டியில் அவர் 57 பந்துகளில் 117 ரன்கள் விளாசி இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்திலிருந்தார். 2018 ஐபிஎல் சீசன் அமைந்ததை போல, வாட்சனுக்கு கடந்த சீசன் அமையவில்லை.

கடந்த சீசனில் பேட்டிங்கில் சொதப்பிய அவர், மும்பை அணிக்கு எதிரான இறுதி போட்டியில் தனி ஒரு ஆளாக நின்று சிறப்பாக விளையாடினார். தனது இடது காலில் ரத்தம் வந்ததைகூட பொருட்படுத்தாமல் அவர் 59 பந்துகளில் 80 ரன்கள் விளாசி அணிக்காக போராடினார். இறுதியில் சிஎஸ்கே அணி ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இந்நிலையில், கடந்த ஐபிஎல் சீசனில், சொதப்பிய போதும் கேப்டன் தோனி, பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் ஆகியோர் தன் மீது நம்பிக்கை வைத்து விளையாட வாய்ப்பு தந்ததால் அவர்களுக்கு என்றும் கடமைப்பட்டுள்ளேன் என ஷேன் வாட்சன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

வாட்சன்
வாட்சன்

இது குறித்து சிஎஸ்கே அணியின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேரலையில் பேசிய அவர், "10 போட்டிகளில் ரன்கள் அடிக்காவிட்டாலும் சிஎஸ்கே அணியில் வாய்ப்பு வழங்கப்படும். ஆனால் மற்ற அணிகளில் அப்படி இல்லை. இதுதான் சிஎஸ்கேவுற்கும் மற்ற அணிகளுக்கும் இருக்கும் வித்தியாசம்.

கடந்த ஐபிஎல் சீசனில் என்னால் சரியாக பேட்டிங் செய்ய முடியாததால் இரண்டு போட்டிகளுக்கு பிறகு என்னை அணியிலிருந்து நீக்கிவிடுவார்கள் என நினைத்தேன். ஆனால் அவர்கள் அப்படி செய்யாமல் எனக்கு தொடர்ந்து வாய்ப்பு தந்தார்கள். அதனால், நான் மீண்டும் ஃபார்முக்கு திரும்பிய பிறகு எனக்கு வாய்ப்பு அளித்ததற்காக நான் கேப்டன் தோனிக்கும், பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங்கிற்கும் நன்றி தெரிவித்தேன்.

அப்போது உங்களது ஆட்டத்திறன் மீது எங்களுக்கு எப்போதும் சந்தேகம் வந்ததில்லை என அவர்கள் என்னிடம் கூறினர். அவர்களது ஆதரவு எனக்கு பெரிய உத்வேகத்தை தந்தது. அதனால் அவர்கள் இருவருக்கும் நான் என்றும் கடமைப்பட்டுள்ளேன்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: 'சச்சினை அவுட் செய்வது மிகவும் கடினம்; அவரே தவறு செய்து அவுட்டானால் தான் உண்டு' - கிளார்
க்

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டரான ஷேன் வாட்சன் ஐபிஎல் தொடரில் 2018ஆம் ஆண்டிலிருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிவருகிறார். சூதாட்ட விவகாரத்திற்கு பிறகு சென்னை அணி 2018இல் கோப்பையுடன் கம்பேக் தந்ததற்கு வாட்சனின் பங்களிப்பும் முக்கிய காரணம்.

ஹைதராபாத் அணிக்கு எதிரான இறுதி போட்டியில் அவர் 57 பந்துகளில் 117 ரன்கள் விளாசி இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்திலிருந்தார். 2018 ஐபிஎல் சீசன் அமைந்ததை போல, வாட்சனுக்கு கடந்த சீசன் அமையவில்லை.

கடந்த சீசனில் பேட்டிங்கில் சொதப்பிய அவர், மும்பை அணிக்கு எதிரான இறுதி போட்டியில் தனி ஒரு ஆளாக நின்று சிறப்பாக விளையாடினார். தனது இடது காலில் ரத்தம் வந்ததைகூட பொருட்படுத்தாமல் அவர் 59 பந்துகளில் 80 ரன்கள் விளாசி அணிக்காக போராடினார். இறுதியில் சிஎஸ்கே அணி ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இந்நிலையில், கடந்த ஐபிஎல் சீசனில், சொதப்பிய போதும் கேப்டன் தோனி, பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் ஆகியோர் தன் மீது நம்பிக்கை வைத்து விளையாட வாய்ப்பு தந்ததால் அவர்களுக்கு என்றும் கடமைப்பட்டுள்ளேன் என ஷேன் வாட்சன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

வாட்சன்
வாட்சன்

இது குறித்து சிஎஸ்கே அணியின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேரலையில் பேசிய அவர், "10 போட்டிகளில் ரன்கள் அடிக்காவிட்டாலும் சிஎஸ்கே அணியில் வாய்ப்பு வழங்கப்படும். ஆனால் மற்ற அணிகளில் அப்படி இல்லை. இதுதான் சிஎஸ்கேவுற்கும் மற்ற அணிகளுக்கும் இருக்கும் வித்தியாசம்.

கடந்த ஐபிஎல் சீசனில் என்னால் சரியாக பேட்டிங் செய்ய முடியாததால் இரண்டு போட்டிகளுக்கு பிறகு என்னை அணியிலிருந்து நீக்கிவிடுவார்கள் என நினைத்தேன். ஆனால் அவர்கள் அப்படி செய்யாமல் எனக்கு தொடர்ந்து வாய்ப்பு தந்தார்கள். அதனால், நான் மீண்டும் ஃபார்முக்கு திரும்பிய பிறகு எனக்கு வாய்ப்பு அளித்ததற்காக நான் கேப்டன் தோனிக்கும், பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங்கிற்கும் நன்றி தெரிவித்தேன்.

அப்போது உங்களது ஆட்டத்திறன் மீது எங்களுக்கு எப்போதும் சந்தேகம் வந்ததில்லை என அவர்கள் என்னிடம் கூறினர். அவர்களது ஆதரவு எனக்கு பெரிய உத்வேகத்தை தந்தது. அதனால் அவர்கள் இருவருக்கும் நான் என்றும் கடமைப்பட்டுள்ளேன்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: 'சச்சினை அவுட் செய்வது மிகவும் கடினம்; அவரே தவறு செய்து அவுட்டானால் தான் உண்டு' - கிளார்
க்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.