ETV Bharat / sports

”கிரிக்கெட் வாழ்க்கையில் நிலைக்காதவர்கள் தான் தோனியை விமர்சிக்கிறார்கள்”- முன்னாள் பிசிசிஐ செயலாளர் பதிலடி

author img

By

Published : Jul 20, 2019, 11:00 AM IST

Updated : Jul 20, 2019, 11:45 AM IST

இந்தூர்: “எப்போது ஓய்வு குறித்து அறிவிக்க வேண்டுமென தோனிக்குத் தெரியும்”, என்று முன்னாள் பிசிசிஐ செயலாளர் ஜட்கலே கூறியுள்ளார்.

ஜட்கலே -தோனி

உலகக்கோப்பைத் தொடர் முடிந்ததிலிருந்து தோனி, ஓய்வு முடிவு குறித்து எப்போது அறிவிப்பார் என பலரும் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இது குறித்து கருத்துக் கூறிய முன்னாள் அணி தேர்வாளர் சஞ்சய் ஜட்கலே, ”தோனி சிறிதும் சுயநலமில்லாமல் இந்திய அணிக்கு ஆடிய மிகச்சிறந்த வீரர். என்னைப் பொறுத்தவரையில் தற்போது உள்ள இந்திய அணியில் விக்கெட் கீப்பர், பேட்ஸ்மேனாக தோனியின் இடத்தை நிரப்ப எந்த வீரரும் இல்லை.”

தோனி
தோனி

வெஸ்ட் இண்டீஸ் உடனான தொடரில் தோனியைத் தேர்ந்தெடுப்பார்களா? மாட்டார்களா? அதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டதற்குப் பதிலளித்த ஜட்கலே,

எப்போது ஓய்வு முடிவை அறிவிக்க வேண்டுமென தோனிக்குத் தெரியும். இருந்தாலும் சச்சினின் ஓய்வு முடிவு குறித்து அவரிடம் கேட்டு பிசிசிஐ முடிவு எடுத்தது போல தோனியின் முடிவு என்னவென்று தேர்வாளர்கள் அவரிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும். மேலும் தேர்வாளர்கள் வருங்காலத்தில் தோனியிடம் அவர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் எனவும் தெளிவாகக் கூற வேண்டும் என்றார்.

மெதுவாக ஆடுகிறார் எனப் பலரும் தோனியை விமர்சிப்பதைக் குறித்தும் இளம் வீரர் ரிஷப் பண்ட் குறித்தும் கேட்டதற்கு பதிலளித்த அவர்,

தோனி
தோனி

”தோனி அணியின் தேவையறிந்து உலகக்கோப்பைத் தொடரில் ஆடினார். நியூசிலாந்து அணியுடனான அரையிறுதி ஆட்டத்தில் அதே போல் தான் ஆடினார். ஆனால் , முக்கியமான நேரத்தில் துர்தஷ்டவசமாக ஆட்டமிழந்துவிட்டார். 38 வயதான அவரால் எப்போதும் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாது.

தோனி
தோனி

கிரிக்கெட் வாழ்க்கையில் நிலைக்க முடியாதவர்கள் தான் தோனியை விமர்சிக்கிறார்கள். தோனியின் முக்கியம் குறித்து உண்மையான வீரர்களுக்கு மட்டுமே தெரியும்.”

”உலகக்கோப்பைக்கு முன் பண்ட்டை தோனியுடன் ஆட வைத்து அவரிடம் நிறைய கற்றுக் கொள்ள வைத்திருக்க வேண்டும். அது பண்ட்டின் எதிர்காலத்திற்கும் உதவியிருக்கும்.” , எனக் கூறியுள்ளார்.

உலகக்கோப்பைத் தொடர் முடிந்ததிலிருந்து தோனி, ஓய்வு முடிவு குறித்து எப்போது அறிவிப்பார் என பலரும் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இது குறித்து கருத்துக் கூறிய முன்னாள் அணி தேர்வாளர் சஞ்சய் ஜட்கலே, ”தோனி சிறிதும் சுயநலமில்லாமல் இந்திய அணிக்கு ஆடிய மிகச்சிறந்த வீரர். என்னைப் பொறுத்தவரையில் தற்போது உள்ள இந்திய அணியில் விக்கெட் கீப்பர், பேட்ஸ்மேனாக தோனியின் இடத்தை நிரப்ப எந்த வீரரும் இல்லை.”

தோனி
தோனி

வெஸ்ட் இண்டீஸ் உடனான தொடரில் தோனியைத் தேர்ந்தெடுப்பார்களா? மாட்டார்களா? அதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டதற்குப் பதிலளித்த ஜட்கலே,

எப்போது ஓய்வு முடிவை அறிவிக்க வேண்டுமென தோனிக்குத் தெரியும். இருந்தாலும் சச்சினின் ஓய்வு முடிவு குறித்து அவரிடம் கேட்டு பிசிசிஐ முடிவு எடுத்தது போல தோனியின் முடிவு என்னவென்று தேர்வாளர்கள் அவரிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும். மேலும் தேர்வாளர்கள் வருங்காலத்தில் தோனியிடம் அவர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் எனவும் தெளிவாகக் கூற வேண்டும் என்றார்.

மெதுவாக ஆடுகிறார் எனப் பலரும் தோனியை விமர்சிப்பதைக் குறித்தும் இளம் வீரர் ரிஷப் பண்ட் குறித்தும் கேட்டதற்கு பதிலளித்த அவர்,

தோனி
தோனி

”தோனி அணியின் தேவையறிந்து உலகக்கோப்பைத் தொடரில் ஆடினார். நியூசிலாந்து அணியுடனான அரையிறுதி ஆட்டத்தில் அதே போல் தான் ஆடினார். ஆனால் , முக்கியமான நேரத்தில் துர்தஷ்டவசமாக ஆட்டமிழந்துவிட்டார். 38 வயதான அவரால் எப்போதும் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாது.

தோனி
தோனி

கிரிக்கெட் வாழ்க்கையில் நிலைக்க முடியாதவர்கள் தான் தோனியை விமர்சிக்கிறார்கள். தோனியின் முக்கியம் குறித்து உண்மையான வீரர்களுக்கு மட்டுமே தெரியும்.”

”உலகக்கோப்பைக்கு முன் பண்ட்டை தோனியுடன் ஆட வைத்து அவரிடம் நிறைய கற்றுக் கொள்ள வைத்திருக்க வேண்டும். அது பண்ட்டின் எதிர்காலத்திற்கும் உதவியிருக்கும்.” , எனக் கூறியுள்ளார்.

Intro:Body:Conclusion:
Last Updated : Jul 20, 2019, 11:45 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.