ETV Bharat / sports

#KoreaOpen: முதல் சுற்றிலேயே வெளியேறினார் இந்திய வீரர் பிரனீத்!

author img

By

Published : Sep 25, 2019, 12:09 PM IST

கொரியா: கொரிய ஓபன் பேட்மிண்டன் தொடரின் முதல் சுற்றில் இந்தியாவின் நட்சத்திர வீரர் சாய் பிரனீத் முதல் சுற்றிலேயே வெளியேறினார்.

saipraneeth

கொரிய ஓபன் பேட்மிண்டன் தொடர் தென் கொரிய நாட்டில் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு எலிமினேஷன் சுற்றில் இந்தியாவின் நட்சத்திர வீரர் சாய் பிரனீத்தும் உலகின் நான்காம் நிலை வீரரான டென்மார்க்கின் ஆண்டெர்ஸ் அண்டன்சனை(Anders ANTONSEN) எதிர்கொண்டார்.

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் ஆண்டெர்ஸ் அதிரடியாக விளையாடி முதல் செட் கணக்கை 21-09 என்ற புள்ளிகள் அடிப்படையின் பிரனீத்திடமிருந்து கைப்பற்றினார். அதனைத் தொடர்ந்து இரண்டாவது செட் கணக்கையும் 11-07 என ஆண்டெர்ஸ் கைப்பற்றினார்.

இதன் மூலம் டென்மார்க்கின் அண்டெர்ஸ் அண்டன்சன் 21-09, 11-07 என்ற செட் கணக்கில் இந்தியாவின் சாய் பிரனீத்தை வீழ்த்தினார். இத்தோல்வியின் மூலம் சாய் பிரனீத் கொரிய ஓபன் பேட்மிண்டன் தொடரின் முதல் சுற்றிலேயே வெளியேறி அதிர்ச்சியளித்துள்ளார்.

இதையும் படிங்க:பி.வி.சிந்துவின் பயிற்சியாளர் ராஜினாமா! - பிரிவை நினைத்து உருகிய சிந்து!

கொரிய ஓபன் பேட்மிண்டன் தொடர் தென் கொரிய நாட்டில் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு எலிமினேஷன் சுற்றில் இந்தியாவின் நட்சத்திர வீரர் சாய் பிரனீத்தும் உலகின் நான்காம் நிலை வீரரான டென்மார்க்கின் ஆண்டெர்ஸ் அண்டன்சனை(Anders ANTONSEN) எதிர்கொண்டார்.

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் ஆண்டெர்ஸ் அதிரடியாக விளையாடி முதல் செட் கணக்கை 21-09 என்ற புள்ளிகள் அடிப்படையின் பிரனீத்திடமிருந்து கைப்பற்றினார். அதனைத் தொடர்ந்து இரண்டாவது செட் கணக்கையும் 11-07 என ஆண்டெர்ஸ் கைப்பற்றினார்.

இதன் மூலம் டென்மார்க்கின் அண்டெர்ஸ் அண்டன்சன் 21-09, 11-07 என்ற செட் கணக்கில் இந்தியாவின் சாய் பிரனீத்தை வீழ்த்தினார். இத்தோல்வியின் மூலம் சாய் பிரனீத் கொரிய ஓபன் பேட்மிண்டன் தொடரின் முதல் சுற்றிலேயே வெளியேறி அதிர்ச்சியளித்துள்ளார்.

இதையும் படிங்க:பி.வி.சிந்துவின் பயிற்சியாளர் ராஜினாமா! - பிரிவை நினைத்து உருகிய சிந்து!

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.