ETV Bharat / sports

இந்தியா இன்டர்நேஷனல் பேட்மிண்டன் தொடரில் பங்கேற்கும் 250 வீரர்கள் - india international challenge tournament

இந்தாண்டுக்கான இந்திய இன்டர்நேஷனல் சேலஞ்சு பேட்மிண்டன் தொடரில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 250 வீரர்கள் கலந்துகொள்கின்றனர்.

badminton
author img

By

Published : Nov 20, 2019, 2:59 AM IST

Updated : Nov 20, 2019, 7:07 AM IST

இந்தியா இன்டர்நேஷனல் சேலஞ்சு பேட்மிண்டன் தொடர் ஆண்டுதோறும் இந்தியாவில் நடத்தப்படுகிறது. 2008ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தத் தொடரின் முதல் இரண்டு சீசன்கள் உள்நாட்டு தொடராக நடத்தப்பட்டது. அதன்பின் சர்வதேச தொடராக உருவான இத்தொடரில் இந்தோனேஷியா, தாய்லாந்து, தென் கொரியா உள்ளிட்ட நாடுகள் கலந்துகொண்டன.

இதனிடையே இந்தாண்டுக்கான இந்தியா இன்டர்நேஷனல் சேலஞ்சு பேட்மிண்டன் தொடர் நவம்பர் 20 (நாளை) முதல் 24ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மும்பையிலுள்ள இந்திய கிரிக்கெட் கிளப்பில் இந்தப் போட்டிகள் நடைபெறுகிறது. இதில் மலேசியா, தாய்லாந்து, இந்தோனேஷியா, ரஷ்யா, அமெரிக்கா, பூட்டான், உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 250 பேட்மிண்டன் வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.

இதில் ஒற்றையர், இரட்டையர் பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகிறது. இதன் இறுதிப்போட்டி நவம்பர் 24ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தத் தொடருக்கான மொத்த பரிசுத் தொகையாக 25,000 அமெரிக்க டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ.17 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டிகளை இன்போசிஸ் அறக்கட்டளையுடன் இணைந்து பிரகாஷ் படுகோனே பேட்மிண்டன் அகாடமி நடத்துகிறது.

இந்தியா இன்டர்நேஷனல் சேலஞ்சு பேட்மிண்டன் தொடர் ஆண்டுதோறும் இந்தியாவில் நடத்தப்படுகிறது. 2008ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தத் தொடரின் முதல் இரண்டு சீசன்கள் உள்நாட்டு தொடராக நடத்தப்பட்டது. அதன்பின் சர்வதேச தொடராக உருவான இத்தொடரில் இந்தோனேஷியா, தாய்லாந்து, தென் கொரியா உள்ளிட்ட நாடுகள் கலந்துகொண்டன.

இதனிடையே இந்தாண்டுக்கான இந்தியா இன்டர்நேஷனல் சேலஞ்சு பேட்மிண்டன் தொடர் நவம்பர் 20 (நாளை) முதல் 24ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மும்பையிலுள்ள இந்திய கிரிக்கெட் கிளப்பில் இந்தப் போட்டிகள் நடைபெறுகிறது. இதில் மலேசியா, தாய்லாந்து, இந்தோனேஷியா, ரஷ்யா, அமெரிக்கா, பூட்டான், உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 250 பேட்மிண்டன் வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.

இதில் ஒற்றையர், இரட்டையர் பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகிறது. இதன் இறுதிப்போட்டி நவம்பர் 24ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தத் தொடருக்கான மொத்த பரிசுத் தொகையாக 25,000 அமெரிக்க டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ.17 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டிகளை இன்போசிஸ் அறக்கட்டளையுடன் இணைந்து பிரகாஷ் படுகோனே பேட்மிண்டன் அகாடமி நடத்துகிறது.

Intro:கன்னியாகுமரி: குமரி மாவட்டம் வடசேரி பேருந்து நிலையத்தில் வைத்து டெங்கு காய்ச்சலை தடுக்கும் விதமாக மனித பாதுகாப்பு கழகம் சார்பில் சுமார் 10,000 பேருக்கு நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
Body:கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வரும் நிலையில் பல இடங்களில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. அதற்கான பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் குமரி மாவட்டத்தை சேர்ந்த மனித பாதுகாப்பு கழகம் சார்பில் டெங்கு காய்ச்சலை தடுக்கும் விதமாக குமரி மாவட்ட மக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அதன்படி குமரி மாவட்டம் வடசேரி பேருந்து நிலையத்தில் வைத்து சுமார் 10,000 பேருக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டன. மனித பாதுகாப்பு கழக தலைவர் ஜெயமோகன் நிலவேம்பு கசாயத்தை வழங்கினார். பேருந்து நிலையத்திற்கு வந்த உள்ளூர் மற்றும் வெளியூர் பயணிகள் நிலவேம்பு கசாயத்தை குடித்து பயனடைந்தனர்.Conclusion:
Last Updated : Nov 20, 2019, 7:07 AM IST

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.