ETV Bharat / sitara

பிரபல சின்னத்திரை நடிகை விஷம் அருந்தி தற்கொலை முயற்சி

author img

By

Published : Jan 16, 2020, 12:50 PM IST

குடும்பத் தகராறில் மனமுடைந்த பிரபல சின்னத்திரை நடிகை ஜெயஸ்ரீ விஷம் அருந்தி தற்கொலை முயற்சி செய்துள்ளார்.

Jayashree
Jayashree

பிரபல தனியார் தொலைக்காட்சியில் சீரியல் நடிகையாக இருப்பவர் ஜெயஸ்ரீ(32). இவர் ஏற்கெனவே திருமணம் ஆகி ஒரு பெண் குழந்தையுடன் வசித்து வந்தார். முதல் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரைப் பிரிந்த ஜெயஸ்ரீ, சீரியல் நடிகர் ஈஸ்வர் ரகுநாதன் என்பவரை கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார்.

இந்த நிலையில், சமீபத்தில் தனது கணவர் ஈஸ்வர் ரகுநாதன் மீது வரதட்சணை புகார் அளித்திருந்த ஜெயஸ்ரீ, தனது சொத்து ஆவணங்களைத் திருடிய ஈஸ்வர் அவற்றை சூதாடித் தோற்று லட்சக்கணக்கில் வட்டிக்கு கடன் வாங்கியதாகவும், அதுகுறித்து தான் கேட்ட போது மேலும் பணம் கேட்டு அடித்து துன்புறுத்தியதாகவும் பரபரப்பு புகார் அளித்திருந்தார்.

மேலும், தனது கணவருக்கு வேறொரு சீரியல் நடிகையுடன் தொடர்பு இருப்பதாகவும் கூறியிருந்தார்.

Jayashree
நடிகை ஜெயஸ்ரீ - நடிகர் ஈஸ்வர் ரகுநாதன்

இந்நிலையில் சமீபத்தில் தனது கணவர் தன்னை அடித்துத் துன்புறுத்துவதாகவும் காவல் துறையில் புகார் அளித்திருந்த நிலையில், ஈஸ்வர் ரகுநாதன் கைது செய்யப்பட்டு, பின் பிணையில் விடுதலை ஆனார்.

இந்த நிலையில், குடும்பத் தகராறு ஏற்பட்டதை அடுத்து, மனமுடைந்த ஜெயஸ்ரீ விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். முன்னதாக, அதிக அளவு தூக்க மாத்திரைகளைச் சாப்பிட்டுவிட்டு, தனது நண்பர் ஒருவரைத் தொடர்புகொண்டு பேசிய ஜெயஸ்ரீ தற்கொலை செய்யப் போவதாகக் கூறியிருக்கிறார்.

இதனால் அதிர்ச்சியடைந்து ஜெயஸ்ரீ வீட்டிற்குச் சென்ற அந்த நண்பர் நீலாங்கரையிலுள்ள ஒரு மருத்துவமனையில் அவரை அனுமதித்துள்ளார். தற்போது, மருத்துவமனையில் ஜெயஸ்ரீக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க...

மக்கள் செல்வனுக்கு இன்று 42ஆவது பிறந்தநாள்!

பிரபல தனியார் தொலைக்காட்சியில் சீரியல் நடிகையாக இருப்பவர் ஜெயஸ்ரீ(32). இவர் ஏற்கெனவே திருமணம் ஆகி ஒரு பெண் குழந்தையுடன் வசித்து வந்தார். முதல் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரைப் பிரிந்த ஜெயஸ்ரீ, சீரியல் நடிகர் ஈஸ்வர் ரகுநாதன் என்பவரை கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார்.

இந்த நிலையில், சமீபத்தில் தனது கணவர் ஈஸ்வர் ரகுநாதன் மீது வரதட்சணை புகார் அளித்திருந்த ஜெயஸ்ரீ, தனது சொத்து ஆவணங்களைத் திருடிய ஈஸ்வர் அவற்றை சூதாடித் தோற்று லட்சக்கணக்கில் வட்டிக்கு கடன் வாங்கியதாகவும், அதுகுறித்து தான் கேட்ட போது மேலும் பணம் கேட்டு அடித்து துன்புறுத்தியதாகவும் பரபரப்பு புகார் அளித்திருந்தார்.

மேலும், தனது கணவருக்கு வேறொரு சீரியல் நடிகையுடன் தொடர்பு இருப்பதாகவும் கூறியிருந்தார்.

Jayashree
நடிகை ஜெயஸ்ரீ - நடிகர் ஈஸ்வர் ரகுநாதன்

இந்நிலையில் சமீபத்தில் தனது கணவர் தன்னை அடித்துத் துன்புறுத்துவதாகவும் காவல் துறையில் புகார் அளித்திருந்த நிலையில், ஈஸ்வர் ரகுநாதன் கைது செய்யப்பட்டு, பின் பிணையில் விடுதலை ஆனார்.

இந்த நிலையில், குடும்பத் தகராறு ஏற்பட்டதை அடுத்து, மனமுடைந்த ஜெயஸ்ரீ விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். முன்னதாக, அதிக அளவு தூக்க மாத்திரைகளைச் சாப்பிட்டுவிட்டு, தனது நண்பர் ஒருவரைத் தொடர்புகொண்டு பேசிய ஜெயஸ்ரீ தற்கொலை செய்யப் போவதாகக் கூறியிருக்கிறார்.

இதனால் அதிர்ச்சியடைந்து ஜெயஸ்ரீ வீட்டிற்குச் சென்ற அந்த நண்பர் நீலாங்கரையிலுள்ள ஒரு மருத்துவமனையில் அவரை அனுமதித்துள்ளார். தற்போது, மருத்துவமனையில் ஜெயஸ்ரீக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க...

மக்கள் செல்வனுக்கு இன்று 42ஆவது பிறந்தநாள்!

Intro:Body:
ச.சிந்தலைபெருமாள், செய்தியாளர்
சென்னை -16.01.20

குடும்பத் தகறாறில் மனமுடைந்த சின்னத்திரை நடிகை விசம் அருந்தி தற்கொலை முயற்சி; தனியார் மருத்துவமனையில் அனுமதி...

பிரபல தனியார் தொலைக்காட்சியில் சீரியல் நடிகையாக இருப்பவர் ஜெயஸ்ரீ (வயது 32). இவர் ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு பெண் குழந்தையுடன் வசித்து வந்தார். முதல் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவர் விட்டு சென்று விட்டார். இந்நிலையில் ஈஸ்வர் ரகுநாதன் என்பவரை கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஜெயஸ்ரீ திருமணம் செய்து கொண்டு சென்னை அடையாறு எல்பி ரோட்டில் உள்ள தி எம்ப்ரஸ் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார்கள்.

ஏற்கனவே, இவருடைய இரண்டாவது கணவர் 12க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்து வருபவர் ஈஸ்வர் ரகுநாதன் (வயது 34). ஈஸ்வர் கடந்த சில மாதங்களாக ஜெயஸ்ரீயின் சொத்து ஆவணங்களை திருடி அவற்றை சூதாடி தோற்று வெளியில் லட்சக்கணக்கில் வட்டிக்கு கடன் வாங்கியதாகவும், அதுகுறித்து தான் கேட்ட போது மேலும் பணம் கேட்டு அடித்து துன்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த சனிக்கிழமை ஈஸ்வரன் ஜெயஸ்ரீயை அடித்து துன்புறுத்தியதில் ஜெயஸ்ரீ அடையார் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஜெய்ஸ்ரீ தாக்கப்பட்டது தொடர்பான புகாரில்
வழக்குப் பதிவு செய்யப்பட்டு
ஈஸ்வர் ரகுநாதனை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். பின்னர் ஜாமீனில் விடுதலை ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தற்போது நடிகை ஜெயஸ்ரீ குடும்பத்தில் ஏற்பட்ட தகராறாரால் மனமுடைந்து விஷமருந்து குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுப்பட்டுள்ளார். தற்போது ஜெயஸ்ரீ நீலாங்கரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்..

tn_che_02_television_actress_suicide_attempt_script_7204894Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.