ETV Bharat / sitara

"திரைச் சங்கங்கள் இருப்பதே பெரிய டென்ஷன்"- கடுகடுத்த இயக்குநர் ஆர்.வி.உதயகுமார்

சென்னை: தண்டகன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட இயக்குநர் ஆர்.வி.உதயகுமார், "திரைச் சங்கங்கள் இருப்பதே பெரிய டென்ஷன் தான்" என்று பேசினார்.

author img

By

Published : Aug 27, 2019, 2:02 PM IST

"திரைச்சங்கங்கள் இருப்பதே பெரிய டென்சன்" ஆர் பி உதயகுமார் பேச்சு

சென்னையில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்ற 'தண்டகன்' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியில் பேசிய அவர் திரைப்படத் துறையை ஒரு வரைமுறை படுத்துவதற்கான யுக்தியைக் கூறினார்.

இதைத் தொடர்ந்து, "ஒரு படம் திரைக்கு வரும் போது அதன் டிக்கெட் விலை 100 ரூபாய் என்றால், அதில் 30 ரூபாய் தயாரிப்பாளருக்கும் 30 ரூபாய் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் 40 ரூபாய் திரையரங்கு உரிமையாளர்களுக்கும் செல்ல வேண்டும். இதுபோன்ற ஒரு கட்டமைப்பை கொண்டு வர நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் ஒன்று படவேண்டும். ஒரு நடிகருக்கு ஒரு கோடி ரூபாய் ஊதியம் என்றால், பத்து லட்சம் ரூபாய் முன்பணம் கொடுக்கப்பட்டு, அதன் பிறகு படத்தில் வரும் வசூலில் இருந்து 90 லட்சம் ரூபாயை அந்த நடிகரிடத்தில் ஒப்படைப்பதற்கு நடிகர்களும் ஒத்து வர வேண்டும். இந்த முறையை கடைப்பிடிப்பதாலேயே, ஆங்கிலப் படங்கள் குறைந்த பணத்தைப் போட்டு நிறைந்த லாபத்தை பெறுகின்றன.

"திரைச்சங்கங்கள் இருப்பதே பெரிய டென்சன்" ஆர் பி உதயகுமார் பேச்சு

திரை உலகில் ஏராளமான சங்கங்கள் இருந்தும் அவை செயல்படாமலும் குழப்பங்கள் நிறைந்தும் காணப்படுகிறது. அவையே நடிகர்களுக்கான பெரிய டென்ஷனாக இருக்கிறது. மிகப்பிரபலமான நடிகர்கள், தான் நடித்த படம் நன்றாக ஓடினால் போதும் என்ற எண்ணத்தை தவிர்த்தால் மட்டுமே தமிழ்த் திரை உலகம் சரிப்படும்" என்றும் இயக்குநர் ஆர்.வி. உதயகுமார் பேசினார்.

சென்னையில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்ற 'தண்டகன்' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியில் பேசிய அவர் திரைப்படத் துறையை ஒரு வரைமுறை படுத்துவதற்கான யுக்தியைக் கூறினார்.

இதைத் தொடர்ந்து, "ஒரு படம் திரைக்கு வரும் போது அதன் டிக்கெட் விலை 100 ரூபாய் என்றால், அதில் 30 ரூபாய் தயாரிப்பாளருக்கும் 30 ரூபாய் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் 40 ரூபாய் திரையரங்கு உரிமையாளர்களுக்கும் செல்ல வேண்டும். இதுபோன்ற ஒரு கட்டமைப்பை கொண்டு வர நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் ஒன்று படவேண்டும். ஒரு நடிகருக்கு ஒரு கோடி ரூபாய் ஊதியம் என்றால், பத்து லட்சம் ரூபாய் முன்பணம் கொடுக்கப்பட்டு, அதன் பிறகு படத்தில் வரும் வசூலில் இருந்து 90 லட்சம் ரூபாயை அந்த நடிகரிடத்தில் ஒப்படைப்பதற்கு நடிகர்களும் ஒத்து வர வேண்டும். இந்த முறையை கடைப்பிடிப்பதாலேயே, ஆங்கிலப் படங்கள் குறைந்த பணத்தைப் போட்டு நிறைந்த லாபத்தை பெறுகின்றன.

"திரைச்சங்கங்கள் இருப்பதே பெரிய டென்சன்" ஆர் பி உதயகுமார் பேச்சு

திரை உலகில் ஏராளமான சங்கங்கள் இருந்தும் அவை செயல்படாமலும் குழப்பங்கள் நிறைந்தும் காணப்படுகிறது. அவையே நடிகர்களுக்கான பெரிய டென்ஷனாக இருக்கிறது. மிகப்பிரபலமான நடிகர்கள், தான் நடித்த படம் நன்றாக ஓடினால் போதும் என்ற எண்ணத்தை தவிர்த்தால் மட்டுமே தமிழ்த் திரை உலகம் சரிப்படும்" என்றும் இயக்குநர் ஆர்.வி. உதயகுமார் பேசினார்.

Intro:பெரிய நடிகர்கள் தாங்கள் நடித்த படங்கள் மட்டுமே ஓடினால் போதும் என்ற மனப்போக்கு உள்ளது இது மாறினால் மட்டுமே திரை உலகம் காப்பாற்றப்படும் ஆர் பி உதயகுமார் பேச்சுBody:தண்டகன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட இயக்குனர் ஆர் வி உதயகுமார் இவ்வாறு தெரிவித்தார் இதுகுறித்து மேலும் அவர் தெரிவிக்கையில்,


திரைப்படத் துறையை ஒரு வரைமுறை படுத்த வேண்டும். ஒரு படம் ரிலீசாகி தியேட்டருக்கு வந்தால் டிக்கெட் 100 ரூபாய் என்றால் அதில் 30 ரூபாய் தயாரிப்பாளர் கணக்குக்கு செல்ல வேண்டும். 30 ரூபாய் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு செல்லவேண்டும். 40 ரூபாய் திரையரங்கு உரிமையாளர்களுக்கு செல்ல வேண்டும். இதுபோன்ற ஒரு கட்டமைப்பை கொண்டு வந்தால் தான் சினிமா உலகத்தை காப்பாற்ற முடியும். இதற்கு நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் ஒன்று படவேண்டும் .ஒரு நடிகருக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் என்றால் பத்து லட்ச ரூபாய் முன்பு கொடுக்கப்பட்டு அதன் பிறகு படத்தில் வரும் வசூலில் இருந்து 90 லட்சம் ரூபாய் கொடுக்கலாம். இதற்கு நடிகர்கள் ஒத்து வர வேண்டும் இது ஏதோ நான் புதிதாக கண்டுபிடித்த திட்டமல்ல மற்ற நாடுகளில் கடைப்பிடிக்கும் முறைதான். ஆங்கில படங்கள் வெற்றிகரமான வசூலில் இருப்பதற்கு காரணம் அவர்கள் குறைந்த பணத்தை போட்டு நிறைந்த லாபத்தை எடுக்கிறார்கள் இங்கு நிறைந்த பணத்தை போட்டு லாபம் எடுப்பதில்லை. திரை உலகின் மிகப்பெரிய டென்சன் என்றால் சங்கங்கள் தான். ஏராளமான சங்கங்கள் இங்கு உள்ளன ஆனால் இவைகள் எப்படி செயல்படுகின்ற என்பதுதான் கேள்வியாக உள்ளது. மிகவும் குழப்பங்கள் மட்டுமே நிறைந்துள்ளது.

Conclusion:மிகப்பெரிய நடிகர்கள் மற்றவர்கள் எப்படி வேண்டுமானாலும் போகட்டும் நாம் நடித்த படம் நன்றாக ஓட வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. இது மாற வேண்டும். இது மாறினால் மட்டுமே தமிழ் திரை உலகம் உருப்படும்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.