ETV Bharat / sitara

புகையிலை பொருட்களை மறைத்து வைத்திருந்தவர் கைது

திண்டிவனம் அருகே வீட்டில் புகையிலை பொருட்களை மறைத்து வைத்திருந்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

author img

By

Published : Oct 4, 2020, 7:12 PM IST

புகையிலை வைத்திருந்தவர் கைது
புகையிலை வைத்திருந்தவர் கைது

விழுப்புரம்: திண்டிவனம் அருகேயுள்ள ரோஷணை பாட்டை பகுதியை சேர்ந்தவர் ஜாபர் சாதிக் (39). இவர் தனது வீட்டில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் வைத்திருப்பதாக ரோஷணை காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது.

அதன் பேரில் திண்டிவனம் உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் கணேசன் உத்தரவின் பேரில் ரோஷணை உதவி ஆய்வாளர் முருகன் தலைமையிலான காவலர்கள் இன்று (அக்.04) அந்த வீட்டில் சோதனை நடத்தினர்.

சோதனையில் ரூ.42 ஆயிரம் மதிப்பிலான 56 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்ததோடு, சாதிக்கை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விழுப்புரம்: திண்டிவனம் அருகேயுள்ள ரோஷணை பாட்டை பகுதியை சேர்ந்தவர் ஜாபர் சாதிக் (39). இவர் தனது வீட்டில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் வைத்திருப்பதாக ரோஷணை காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது.

அதன் பேரில் திண்டிவனம் உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் கணேசன் உத்தரவின் பேரில் ரோஷணை உதவி ஆய்வாளர் முருகன் தலைமையிலான காவலர்கள் இன்று (அக்.04) அந்த வீட்டில் சோதனை நடத்தினர்.

சோதனையில் ரூ.42 ஆயிரம் மதிப்பிலான 56 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்ததோடு, சாதிக்கை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.