ETV Bharat / sitara

எதிர்பார்த்த இடத்தை 'ஜாக்பாட்' பிடித்ததா?

author img

By

Published : Aug 4, 2019, 2:02 PM IST

ஜோதிகா, ரேவதி காம்போவில் வெளியான 'ஜாக்பாட்' படம் வெளியாகியுள்ளது. படம் குறித்த கலவை விமர்சனங்கள், அவற்றின் கதாபாத்திரங்கள் குறித்த திரை விமர்சனம் குறித்து பார்க்கலாம்.

jackpot

கல்யாண் இயக்கத்தில் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் ஜோதிகா, ரேவதி, ஆனந்த் பாபு, மன்சூர் அலிகான், யோகிபாபு உள்ளிட்டோர் நடித்த படம் 'ஜாக்பாட்'.

ஜோ-ரேவதி
ஜோ-ரேவதி

திருட்டுத் தொழிலில் ஈடுபட்டு காலம்போன போக்கில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் ஜோதிகா, ரேவதி. அதில் ஒரு கட்டத்தில் இருவரும் சிறைக்குச் செல்கின்றனர். அங்கு சச்சு அறிமுகமாகிறார்; அவர் ஒரு அக்ஷய பாத்திரம் பற்றி கூறவும், அதை எடுக்க ஜோ, ரேவதி பல முறை முயற்சித்தும் எடுக்க முடியாமல் போக அது இறுதியில் அவர்களுக்கு கிடைத்ததா என்பதே கதை.

இதேபோல் படத்தின் உள்கதைகள் இரண்டு உள்ளன. அதில் ஒன்று, ரேவதி மீது ஒருதலைக்காதல் வயப்பட்டு அவருக்காக உதவுகிறார் மொட்டை ராஜேந்திரன். ஆனால் அவரது காதல் கைகூடுமா? மற்றொன்று, தனது இளமை பருவத்தை இழக்கும் யோகிபாபு மீண்டும் அப்பருவத்திற்கு திரும்பினாரா? என்பதே.

ரேவதி-ஜோதிகா
ரேவதி-ஜோதிகா

படத்தில் பல இடங்களில் ஆக்ஷன் காட்சி, சிலம்பம் ஆகியவற்றில் அதிரடி கிளப்பியிருக்கிறார் ஜோதிகா. தேவையற்ற சண்டை காட்சிகளை இயக்குநர் வைத்திருக்கிறாரோ என்ற எண்ணம் ரசிகர்கள் மத்தியில் எழுகிறது. 25 வயதில் செய்ய வேண்டியதை தற்போது செய்திருப்பது சற்று ஆச்சரியத்தை ஏற்படுத்தினாலும் பெண்களின் பாராட்டுகளை பெறுவதை சற்று இழந்துவிட்டாரோ என்ற கேள்வியே எழுகிறது.

ஜோதிகா
ஜோதிகா

இருந்தும்கூட படத்திற்காக சிலம்பம், திருமணத்திற்கு பிறகு சண்டை காட்சிகளில் அசத்தலான நடிப்பு, உழைப்பு என தன்னையே படத்திற்காக மெருகேற்றியிருக்கிறார் ஜோதிகா. ரேவதி, யோகிபாபு, மொட்டை ராஜேந்திரன் நகைச்சுவை காட்சிகள் சிறப்பானதாகவே அமைந்திருக்கிறது. ஆனந்த் பாபுவின் இரண்டு வித்தியாசமான தோற்றம், அவருடை நடிப்பு படத்திற்கு கூடுதல் பலம்.

பின்னணி இசையில் விஜய் சந்திரசேகர் ஆறுதல் அளிக்கிறார். நகைச்சுவை காட்சிகள், மொட்டை ராஜேந்திரனின் காதல் காட்சிகள், சண்டைக் காட்சிகள் என்று வெரைட்டி கொடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஆனந்தகுமார். 'குலேபகாவலி' இயக்கத்திற்கும் 'ஜாக்பாட்டிற்கும்' பெரிய வித்தியாசம் இல்லை.

இரண்டிலும் வெவ்வேறு கதாபாத்திரங்கள் மற்றபடி இரண்டும் ஒப்பிட்டு பார்க்கும் அளவிற்கு ஒரே கதையம்சங்கள்தான் என்று கூறுகிறது ரசிகர்கள் பட்டாளம். படத்திற்கு தேவையற்ற மாஸ் சீன்களை குறைத்திருந்தால் தாய்க்குலங்களின் ஆதரவை சற்று அதிகமாக பெற்றிருப்பார் ஜோதிகா. ரசிகர்களின் மனதில் எதிர்பார்த்த இடத்தை ஜாக்பாட் பிடித்ததா என்றே சிந்திக்கத் தூண்டுகிறது.

ஆனந்த் பாபு
ஆனந்த் பாபு

கல்யாண் இயக்கத்தில் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் ஜோதிகா, ரேவதி, ஆனந்த் பாபு, மன்சூர் அலிகான், யோகிபாபு உள்ளிட்டோர் நடித்த படம் 'ஜாக்பாட்'.

ஜோ-ரேவதி
ஜோ-ரேவதி

திருட்டுத் தொழிலில் ஈடுபட்டு காலம்போன போக்கில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் ஜோதிகா, ரேவதி. அதில் ஒரு கட்டத்தில் இருவரும் சிறைக்குச் செல்கின்றனர். அங்கு சச்சு அறிமுகமாகிறார்; அவர் ஒரு அக்ஷய பாத்திரம் பற்றி கூறவும், அதை எடுக்க ஜோ, ரேவதி பல முறை முயற்சித்தும் எடுக்க முடியாமல் போக அது இறுதியில் அவர்களுக்கு கிடைத்ததா என்பதே கதை.

இதேபோல் படத்தின் உள்கதைகள் இரண்டு உள்ளன. அதில் ஒன்று, ரேவதி மீது ஒருதலைக்காதல் வயப்பட்டு அவருக்காக உதவுகிறார் மொட்டை ராஜேந்திரன். ஆனால் அவரது காதல் கைகூடுமா? மற்றொன்று, தனது இளமை பருவத்தை இழக்கும் யோகிபாபு மீண்டும் அப்பருவத்திற்கு திரும்பினாரா? என்பதே.

ரேவதி-ஜோதிகா
ரேவதி-ஜோதிகா

படத்தில் பல இடங்களில் ஆக்ஷன் காட்சி, சிலம்பம் ஆகியவற்றில் அதிரடி கிளப்பியிருக்கிறார் ஜோதிகா. தேவையற்ற சண்டை காட்சிகளை இயக்குநர் வைத்திருக்கிறாரோ என்ற எண்ணம் ரசிகர்கள் மத்தியில் எழுகிறது. 25 வயதில் செய்ய வேண்டியதை தற்போது செய்திருப்பது சற்று ஆச்சரியத்தை ஏற்படுத்தினாலும் பெண்களின் பாராட்டுகளை பெறுவதை சற்று இழந்துவிட்டாரோ என்ற கேள்வியே எழுகிறது.

ஜோதிகா
ஜோதிகா

இருந்தும்கூட படத்திற்காக சிலம்பம், திருமணத்திற்கு பிறகு சண்டை காட்சிகளில் அசத்தலான நடிப்பு, உழைப்பு என தன்னையே படத்திற்காக மெருகேற்றியிருக்கிறார் ஜோதிகா. ரேவதி, யோகிபாபு, மொட்டை ராஜேந்திரன் நகைச்சுவை காட்சிகள் சிறப்பானதாகவே அமைந்திருக்கிறது. ஆனந்த் பாபுவின் இரண்டு வித்தியாசமான தோற்றம், அவருடை நடிப்பு படத்திற்கு கூடுதல் பலம்.

பின்னணி இசையில் விஜய் சந்திரசேகர் ஆறுதல் அளிக்கிறார். நகைச்சுவை காட்சிகள், மொட்டை ராஜேந்திரனின் காதல் காட்சிகள், சண்டைக் காட்சிகள் என்று வெரைட்டி கொடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஆனந்தகுமார். 'குலேபகாவலி' இயக்கத்திற்கும் 'ஜாக்பாட்டிற்கும்' பெரிய வித்தியாசம் இல்லை.

இரண்டிலும் வெவ்வேறு கதாபாத்திரங்கள் மற்றபடி இரண்டும் ஒப்பிட்டு பார்க்கும் அளவிற்கு ஒரே கதையம்சங்கள்தான் என்று கூறுகிறது ரசிகர்கள் பட்டாளம். படத்திற்கு தேவையற்ற மாஸ் சீன்களை குறைத்திருந்தால் தாய்க்குலங்களின் ஆதரவை சற்று அதிகமாக பெற்றிருப்பார் ஜோதிகா. ரசிகர்களின் மனதில் எதிர்பார்த்த இடத்தை ஜாக்பாட் பிடித்ததா என்றே சிந்திக்கத் தூண்டுகிறது.

ஆனந்த் பாபு
ஆனந்த் பாபு
Intro:ஜாக்பாட் பட விமர்சனம்Body:தயாரிப்பு - 2டி என்டர்டெயின்மென்ட்
இயக்கம். - கல்யாண்
இசை - விஷால் சந்திரசேகர்
ஒளிப்பதிவு - R.S. ஆனந்தகுமார் MFI,

படத்தொகுப்பு - விஜய் வேலுகுட்டி,


நடிப்பு - ஜோதிகா, ரேவதி, ஆனந்தராஜ், மன்சூர் அலிகான், யோகி பாபு மொட்டை ராஜேந்திரன் மற்றும் பலர்

கதை

திருட்டுத் தொழிலில் ஈடுபட்டு வாழ்க்கை நடத்தும் அக்‌ஷயா (ஜோதிகா), மற்றும் மாஸா(ரேவதி). இருவரும் விதமான ஏமாற்று வேலைகளில் ஈடுபட்டு மனம்போன போக்கில் வாழ்க்கை நடத்தும் பேர்வழிகள். இருவரும் செய்த தவறால் ஜெயிலுக்குப் போக அங்கே இட்லி விற்கும் ஒரு அம்மா (சச்சு) மூலம் அவருக்குக் கிடைத்த அக்‌ஷய பாத்திரம் குறித்தும் அது எங்கே இருக்கிறது என்னும் விபரம் குறித்தும் தெரிந்துகொள்கிறார்கள். ஆனால் அந்த பாத்திரம் ஏற்கனவே இவர்கள் ஏமாற்றிய மானஸ்தன்(ஆனந்தராஜ்) வீட்டுக் கொட்டகையில் சிக்கலான இடத்தில் இருக்கிறது . அக்ஷய பாத்திரத்தை எடுக்க பல்வேறு முயற்சிகளை எடுக்கின்றனர் அவை அனைத்தும் சொதப்பல் முடிகிறது. இதற்கிடையில் இளமையான தனது அழகிய உருவத்தை இறந்து மீண்டும் இளமையைப் பெற போராடுகிறார் ராகுல் ( யோகிபாபு). மாஷாவை ஒருதலையாக தீவிரமாக காதலிக்கிறார் மொட்ட ராஜேந்திரன் அதற்காக மாஷா செய்யும் திருட்டு தொழிலுக்கு உடந்தையாக இருக்கிறார். அக்ஷய பாத்திரத்தை ஜோதிகா அண்ட் கோ எடுத்தார்களா? தனது இளமைப் பருவத்திற்கு யோகி பாபு திரும்பினாரா? நான் கடவுள் ராஜேந்திரனின் ஒருதலை காதல் கைகூடியதா? ... என்பதை கூறுவதே மீதிக்கதை

ஜோதிகா கொடுத்த காசுக்கு மேலேயே நடிப்பார் இதில் சொந்தக் காசு வேற சொல்லவா வேண்டும் மாஸ் காட்டுகிறார். அந்தரத்தில் பறக்கிறார், வில்லன்களை பந்தாடுகிறார், ஹீரோயிஸம் காட்டி சிலம்பம் சுற்றுகிறார். ஜோதிகா 25 வயதில் நடிக்க வேண்டிய படம் இப்போது நடித்து தனக்கிருந்த குறைந்தபட்ச தாய்க்குலங்களின் ஆதரவையும் குறைத்துகொள்கிறாரோ என்றே தோன்றுகிறது

ரேவதி காமெடி, ராஜேந்திரனின் காதில் பூ சுற்றி காமெடி சூறாவளியாக வலம் வருகிறார். இவருக்குள் இத்தனை எனர்ஜிய என ஆச்சரியத்தை ஏற்படுத்தினாலும். ஜோதிகா ரேவதி இருவரின் நடிப்பு ஓவர் டோஸ் தான். இருவரும் என்ன முயற்சிக்கிறீர்கள் எனக் கேட்க தோன்றுகிறது.


படத்தில் மிகப்பெரிய ஆறுதல் ஆனந்த் ராஜ் தான். டபுள் ஆக்‌ஷனில் புது கெட்டப்பில் வந்து அரங்கத்தை அதிர வைக்கிறார். மொட்ட ராஜேந்திரன், யோகி பாபு வழக்கமான காமெடி காட்சிகளுக்கு பயன்பட்டிருக்கிறார்கள். ஆனால் யோகி பாபுவின் உருவத்தை இவ்வளவு கேலி செய்திருப்பதுதான் நெருடல். சமுத்திரகனி ஆச்சர்யமாக சமூக கருத்து கூறாமல் கொடுத்த வேலையை மட்டும் செய்துவிட்டு காணாமல் போகிறார்.

ரவா தோசை , ஆனியன் ரவா தோசை என ஒரே மாவில் வித்யாசம் காட்டுவது போல் இயக்குநர் கல்யாண் 'குலேபகாவலி' தோசையில் கொஞ்சம் ஆனியன் சேர்த்துவிட்டார் போல . பிரபுதேவாவிற்கு பதில் ஜோதிகா அவ்வளவே. ஆனால் அங்கேயாவது லாஜிக் கொஞ்சமாவது இருந்தது. இங்கே மிஸ்ஸிங்.

ஜோதிகாவை தெலுங்கு மசாலா பட ஹீரோ போல் சித்தரித்து அதீத ஆக்‌ஷன் காட்சிகளால் நம்மை காண்டாக்கி போதும் சாமி விட்டுடுங்க என கதற விடுகிறார்கள் .

விஜய் சந்திரசேகர் பின்னணி இசை ஆறுதல் ஆனால் பாடல்கள் படத்தின் நீளத்திற்கே பயன்பட்டிருக்கின்றன. சண்டை, மற்றும் பீரியட் காட்சிகள், என மாறி மாறி கலர்ஃபுல் கலக்கியுள்ளார் ஒளிப்பதிவாளர் ஆர்.எஸ்.ஆனந்தகுமார். படத்தின் பாராட்டிற்குரிய விஷயம் தயாரிப்புத் தரப்பான 2டி என்டெர்டெயின்மென்ட்தான். காசை வாரி இறைத்திருக்கிறார் சூர்யா. ஆனால் அத்தனையும் கடலில் கறைத்த பெருங்காயம் .



Conclusion:நீண்ட ஆக்‌ஷன் காட்சிகள், தேவையற்ற மாஸ் சீன்கள், சரியாக வெட்டி ஒட்டப்படாத தொடர்பற்ற காட்சிகள் என 'ஜாக்பாட்' ரசிகர்ளின் மனங்களை கொள்ளையடிக்க தவறியிருக்கிறது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.