ETV Bharat / sitara

'திரையரங்குகள் தயார் நிலையில் உள்ளன’ - திருப்பூர் சுப்பிரமணியம்

திரையரங்குகள் தயார் நிலையில் இருப்பதாகவும், பெரிய படங்கள் வெளியீட்டுக்குத் தயாராக உள்ளதாகவும் திரையரங்கு உரிமையாளர் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணி ஈடிவி பாரத்திற்கு அளித்த பிரத்யேக பேட்டியில் தெரிவித்தார்.

author img

By

Published : Jul 30, 2021, 10:11 PM IST

திருப்பூர் சுப்பிரமணியம்
திருப்பூர் சுப்பிரமணியம்

தமிழ்நாட்டில் இரண்டாவது கட்ட கரோனா பரவல் காரணமாகக் கடந்த ஏப்ரல் மாத இறுதியிலிருந்து திரையரங்குகள் மூடப்பட்டன. இதனால் பெரிய படங்கள் ரிலீஸ் செய்ய முடியாமல் முடங்கியுள்ளன. மற்றொரு பக்கம் சிறிய பட்ஜெட் படங்கள் ஓடிடி தளங்களில் ரிலீஸாகி வருகிறது.

இதனாலேயே ஒன்றிரண்டு இருந்த ஓடிடி தளங்கள் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளன. அதிக எண்ணிக்கையிலான ஓடிடி தளங்களின் வருகையால் சினிமா வியாபாரத்தை இனி ஓடிடி தளங்கள்தான் முடிவு செய்யும் என்ற நிலை உருவாகியுள்ளது.

தயாரிப்பாளர்களும் தங்களது கடன் பிரச்னை, வட்டி கட்ட முடியாதது காரணமாக ஓடிடி தளங்களை நாடும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். இதுகுறித்து திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியத்திடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினோம்.

அப்போது அவர் கூறியதாவது, "திரையரங்குகளுக்கு எப்போதுமே அழிவில்லை. தொழில்நுட்ப மாற்றங்கள் நிகழ்ந்தாலும் திரையரங்குகள் அதற்குத் தகுந்தாற் போல் தன்னை தகவமைத்துக்கொள்ளும்.

மற்ற மாநிலங்களில் இன்று (ஜூலை 30) முதல் திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளன தமிழ்நாடு அரசு விரைவில் திரையரங்குகள் திறக்க அனுமதி அளித்தால், திரையரங்குகளைத் திறக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.

பெரிய படங்கள் ஓடிடி தளத்தை நோக்கிச் சென்றாலும், திரையரங்குகளில் திரையிட அரண்மனை 3, சிவகுமாரின் சபதம் போன்ற படங்கள் தயாராக உள்ளன. மேலும் சமீபத்தில் பேட்டியின் போது தயாரிப்பாளர் சங்கம் குறித்து நான் தவறாக பேசியதாகவும் இதுகுறித்து ஆலோசனைக் கூட்டம் நடத்த இருப்பதாகவும் கேள்விப்பட்டேன்.

நான் தயாரிப்பாளர் சங்கம் குறித்து தவறாக எதுவும் பேசவில்லை. அவர்களின் முடிவைப் பொறுத்து எனது முடிவு இருக்கும்” என்றார்.

இதையும் படிங்க: திருப்பூரில் ப்ரைவசி தியேட்டர் - கரோனா காலத்தில் மக்களுக்காக சிறப்பு ஏற்பாடு

தமிழ்நாட்டில் இரண்டாவது கட்ட கரோனா பரவல் காரணமாகக் கடந்த ஏப்ரல் மாத இறுதியிலிருந்து திரையரங்குகள் மூடப்பட்டன. இதனால் பெரிய படங்கள் ரிலீஸ் செய்ய முடியாமல் முடங்கியுள்ளன. மற்றொரு பக்கம் சிறிய பட்ஜெட் படங்கள் ஓடிடி தளங்களில் ரிலீஸாகி வருகிறது.

இதனாலேயே ஒன்றிரண்டு இருந்த ஓடிடி தளங்கள் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளன. அதிக எண்ணிக்கையிலான ஓடிடி தளங்களின் வருகையால் சினிமா வியாபாரத்தை இனி ஓடிடி தளங்கள்தான் முடிவு செய்யும் என்ற நிலை உருவாகியுள்ளது.

தயாரிப்பாளர்களும் தங்களது கடன் பிரச்னை, வட்டி கட்ட முடியாதது காரணமாக ஓடிடி தளங்களை நாடும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். இதுகுறித்து திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியத்திடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினோம்.

அப்போது அவர் கூறியதாவது, "திரையரங்குகளுக்கு எப்போதுமே அழிவில்லை. தொழில்நுட்ப மாற்றங்கள் நிகழ்ந்தாலும் திரையரங்குகள் அதற்குத் தகுந்தாற் போல் தன்னை தகவமைத்துக்கொள்ளும்.

மற்ற மாநிலங்களில் இன்று (ஜூலை 30) முதல் திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளன தமிழ்நாடு அரசு விரைவில் திரையரங்குகள் திறக்க அனுமதி அளித்தால், திரையரங்குகளைத் திறக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.

பெரிய படங்கள் ஓடிடி தளத்தை நோக்கிச் சென்றாலும், திரையரங்குகளில் திரையிட அரண்மனை 3, சிவகுமாரின் சபதம் போன்ற படங்கள் தயாராக உள்ளன. மேலும் சமீபத்தில் பேட்டியின் போது தயாரிப்பாளர் சங்கம் குறித்து நான் தவறாக பேசியதாகவும் இதுகுறித்து ஆலோசனைக் கூட்டம் நடத்த இருப்பதாகவும் கேள்விப்பட்டேன்.

நான் தயாரிப்பாளர் சங்கம் குறித்து தவறாக எதுவும் பேசவில்லை. அவர்களின் முடிவைப் பொறுத்து எனது முடிவு இருக்கும்” என்றார்.

இதையும் படிங்க: திருப்பூரில் ப்ரைவசி தியேட்டர் - கரோனா காலத்தில் மக்களுக்காக சிறப்பு ஏற்பாடு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.