ETV Bharat / sitara

'அம்மா, கலைஞர் போடாத கேளிக்கை வரியை ஏன் தமிழ்த் திரையுலகின் மீது திணிக்கிறீர்கள்?': டி.ராஜேந்தர் கேள்வி

author img

By

Published : Sep 7, 2020, 6:19 PM IST

'சாதாரண காலங்களிலேயே சினிமா பெரும் பாடு படுகிறது, மேலும் இந்த கரோனா காலத்தில் பெரும் பிரச்னை. திரையரங்குகளை திறப்பதாக இருந்தால் 8% கேளிக்கை வரியை நீக்கிவிடுங்கள். எங்களால் இந்த இடர்களை தாங்க முடியவில்லை. உங்களது ஆட்சிக்காலம் முடியப் போகிறது, எப்போது எங்கள் தமிழ்த் திரையுலகுக்கு பொழுது விடியப் போகிறது. பொறுக்க முடியாது. இனி, பூனைக்கு யாராவது கட்டியே தீர வேண்டும் மணி' எனத் திரையுலகினருக்கு விதிக்கப்பட்டு வரும் கேளிக்கை வரியை ரத்து செய்வது தொடர்பாக டி. ராஜேந்தர் காணொலி மூலம் கூறியுள்ளார்.

T Rajendhar request tn govt. to cancel entertainment tax
டி ராஜேந்தர் கோரிக்கை

சென்னை: தமிழ்நாடு அரசால் திரையுலகினருக்கு விதிக்கப்பட்டு வரும் கேளிக்கை வரியை ரத்து செய்யுமாறு இயக்குநர், நடிகர் டி. ராஜேந்தர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து இயக்குநர், நடிகர் டி.ராஜேந்தர் வெளியிட்டுள்ள காணொலியில் கூறியிருப்பதாவது: 'நான் திரைப்பட இயக்குநர் டி.ராஜேந்தர். இது என் தனிப்பட்ட கருத்து. ஒரு திரைப்படம் பார்க்க ஒரு ரசிகன் 100 ரூபாய்க்கு டிக்கெட் எடுத்தால், மத்திய அரசுக்கு செலுத்த வேண்டியதாக இருக்கிறது, 12 விழுக்காடு ஜிஎஸ்டி. அதைவிடக் கூடுதலாக, தமிழ்நாடு அரசுக்கு செலுத்த வேண்டியதாக இருக்கிறது, 8 விழுக்காடு கேளிக்கை (எஸ்பிடி) வரி.

மத்திய அரசு போட்டுவிட்டது ஜிஎஸ்டி வரி, பின்பு ஏன் மாநில அரசு போடுகிறது கூடுதல் வரி? பெரும்பாலும் இந்தியாவில் உள்ள எந்த பிற மாநிலங்களிலும் போடவில்லை வரி.

மத்திய அரசு சொல்வது ஒரே நாடு, ஒரே வரி. ஆனால் இந்த தமிழ்நாட்டில் மட்டும் ஏன் இரட்டை வரி? இந்தியாவில் தமிழ்நாடு என்ன தனித் தீவா? எங்கள் திரையுலகிற்கு கொடுக்கிறார்களா காவா?

இதே கோடம்பாக்கத்திலிருந்து வந்து தமிழ்நாட்டை ஐந்து முறை ஆண்ட முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி தமிழ்நாடு திரையுலகுக்கு கேளிக்கை வரியை செய்தார், ரத்து. அதே போல் கோடம்பாக்கத்திலிருந்து வந்து தமிழ்நாட்டை மூன்று முறை ஆண்ட முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவும் கேளிக்கை வரியைச் செய்தார், ரத்து.

மக்களுடைய நம்பிக்கை பெற்ற அந்த அம்மா அமைத்து தந்த ஆட்சி, அதைதான் தற்போது வழிநடத்தி வருகிறார்கள். பேச்சுக்கு பேச்சு மூச்சுக்கு மூச்சு அம்மா அரசு என்று சொல்கிறீர்களே, அம்மா போடாத கேளிக்கை வரியை ஏன் தமிழ்த் திரையுலகின் மீது திணிக்கிறீர்கள்?

சாதாரண காலங்களிலேயே சினிமா பெரும்பாடுபடுகிறது; மேலும் இந்த கரோனா காலத்தில் பெரும் பிரச்னை. திரையரங்குகளை திறப்பதாக இருந்தால் 8 % கேளிக்கை வரியை நீக்கிவிடுங்கள்.

கேளிக்கை வரியை ரத்து செய்ய டி.ராஜேந்தர் கோரிக்கை

எங்களால் இந்த இடர்களைத் தாங்க முடியவில்லை. உங்களது ஆட்சி காலம் முடியப் போகிறது. எப்போது எங்கள் தமிழ்த் திரையுலகிற்கு பொழுது விடியப் போகிறது. பொறுக்க முடியாது இனி, பூனைக்கு யாராவது கட்டியே தீர வேண்டும், மணி.

இது கோடம்பாக்கத்து தாக்கத்தின் குரல், கோட்டையில் இருப்பவர்கள் இதை சாதாரணமாகப் போட வேண்டாம் எடை. இந்த வேதனைக்கெல்லாம் விரைவில் காலம் கூறும் விடை' இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் மீது புகாரளித்த 'கோமாளி' பட நடிகை

சென்னை: தமிழ்நாடு அரசால் திரையுலகினருக்கு விதிக்கப்பட்டு வரும் கேளிக்கை வரியை ரத்து செய்யுமாறு இயக்குநர், நடிகர் டி. ராஜேந்தர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து இயக்குநர், நடிகர் டி.ராஜேந்தர் வெளியிட்டுள்ள காணொலியில் கூறியிருப்பதாவது: 'நான் திரைப்பட இயக்குநர் டி.ராஜேந்தர். இது என் தனிப்பட்ட கருத்து. ஒரு திரைப்படம் பார்க்க ஒரு ரசிகன் 100 ரூபாய்க்கு டிக்கெட் எடுத்தால், மத்திய அரசுக்கு செலுத்த வேண்டியதாக இருக்கிறது, 12 விழுக்காடு ஜிஎஸ்டி. அதைவிடக் கூடுதலாக, தமிழ்நாடு அரசுக்கு செலுத்த வேண்டியதாக இருக்கிறது, 8 விழுக்காடு கேளிக்கை (எஸ்பிடி) வரி.

மத்திய அரசு போட்டுவிட்டது ஜிஎஸ்டி வரி, பின்பு ஏன் மாநில அரசு போடுகிறது கூடுதல் வரி? பெரும்பாலும் இந்தியாவில் உள்ள எந்த பிற மாநிலங்களிலும் போடவில்லை வரி.

மத்திய அரசு சொல்வது ஒரே நாடு, ஒரே வரி. ஆனால் இந்த தமிழ்நாட்டில் மட்டும் ஏன் இரட்டை வரி? இந்தியாவில் தமிழ்நாடு என்ன தனித் தீவா? எங்கள் திரையுலகிற்கு கொடுக்கிறார்களா காவா?

இதே கோடம்பாக்கத்திலிருந்து வந்து தமிழ்நாட்டை ஐந்து முறை ஆண்ட முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி தமிழ்நாடு திரையுலகுக்கு கேளிக்கை வரியை செய்தார், ரத்து. அதே போல் கோடம்பாக்கத்திலிருந்து வந்து தமிழ்நாட்டை மூன்று முறை ஆண்ட முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவும் கேளிக்கை வரியைச் செய்தார், ரத்து.

மக்களுடைய நம்பிக்கை பெற்ற அந்த அம்மா அமைத்து தந்த ஆட்சி, அதைதான் தற்போது வழிநடத்தி வருகிறார்கள். பேச்சுக்கு பேச்சு மூச்சுக்கு மூச்சு அம்மா அரசு என்று சொல்கிறீர்களே, அம்மா போடாத கேளிக்கை வரியை ஏன் தமிழ்த் திரையுலகின் மீது திணிக்கிறீர்கள்?

சாதாரண காலங்களிலேயே சினிமா பெரும்பாடுபடுகிறது; மேலும் இந்த கரோனா காலத்தில் பெரும் பிரச்னை. திரையரங்குகளை திறப்பதாக இருந்தால் 8 % கேளிக்கை வரியை நீக்கிவிடுங்கள்.

கேளிக்கை வரியை ரத்து செய்ய டி.ராஜேந்தர் கோரிக்கை

எங்களால் இந்த இடர்களைத் தாங்க முடியவில்லை. உங்களது ஆட்சி காலம் முடியப் போகிறது. எப்போது எங்கள் தமிழ்த் திரையுலகிற்கு பொழுது விடியப் போகிறது. பொறுக்க முடியாது இனி, பூனைக்கு யாராவது கட்டியே தீர வேண்டும், மணி.

இது கோடம்பாக்கத்து தாக்கத்தின் குரல், கோட்டையில் இருப்பவர்கள் இதை சாதாரணமாகப் போட வேண்டாம் எடை. இந்த வேதனைக்கெல்லாம் விரைவில் காலம் கூறும் விடை' இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் மீது புகாரளித்த 'கோமாளி' பட நடிகை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.