ETV Bharat / sitara

'அமைதியாக இருப்பதை பலவீனமாக நினைக்காதீர்கள்' - சனம் ஷெட்டியை மறைமுகமாக தாக்கிய ஷெரின்!

author img

By

Published : Mar 14, 2020, 6:05 PM IST

நடிகை சனம் ஷெட்டியை மறைமுகமாக தாக்கி ஷெரின் இன்ஸ்டாகிராமாலில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சனம் ஷெட்டியை மறைமுகமாக தாக்கிய ஷெரின்!
சனம் ஷெட்டியை மறைமுகமாக தாக்கிய ஷெரின்!

'துள்ளுவதோ இளமை' படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பிரபலமானவர் நடிகை ஷெரின். இதையடுத்து தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிப் படங்களில் நடித்துள்ளார். பிறகு திரைத் துறையை விட்டு சற்று விலகியிருந்த ஷெரின், பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மீண்டும் படங்களில் நடிக்கத் தயாராக இருக்கிறேன் என்றார். இதற்கிடையில் அந்நிகழ்ச்சியில் தனது சகப் போட்டியாளரான தர்ஷனை இவர் காதலிப்பதாகக் கிசுகிசுக்கப்பட்டது.

இதையடுத்து தர்ஷன் தனக்கு காதலி இருக்கிறார் என்று சொன்னதையடுத்து பிரச்னை சரியானது. பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு இவ்விகாரம் தொடர்பாக தர்ஷனின் காதலியான சனம் ஷெட்டி காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதில் தர்ஷன் தன்னை ஏமாற்றிவிட்டதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். இதற்கு ஷெரின் தான் காரணம் என்று சமூக வலைதளங்கில் கிசுகிசுக்கப்பட்டது.

இந்நிலையில் இது தொடர்பாக நீண்ட நாள்களாக எந்தப் பதிலும் அளிக்காத நிலையில், ஷெரின் தற்போது சனம் ஷெட்டியை மறைமுகமாகத் தாக்கிப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ''என்னை யாராவது தாக்க வேண்டும் என்றால் தாராளமாகச் செய்யலாம், அதற்கு நான் கையெழுத்து போட்டுத் தருகிறேன். என்னை மோசமான பெயர்களால் அழைப்பதை நான் சிரிப்புடன் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் இதில் என் குடும்பத்தை விட்டுவிடுங்கள்.

மற்றவர்கள் மீது முறையாக குறை சொல்ல கற்றுக் கொள்ளுங்கள். நான் அமைதியாக இருப்பதை என்னுடைய பலவீனமாக நினைக்க வேண்டாம். இந்த விவகாரத்தில் நான் இல்லாததால் தான் இத்தனை நாள்களாக எதுவும் பேசாமல் இருக்கிறேன்.

இரண்டு பேர் பிரேக்அப் செய்து கொள்வதை விட, இவ்வுலகில் நிறைய பிரச்னைகள் உள்ளன. எனக்கு ஆதரவாய் நின்ற அனைத்து ஆதரவாளர்களுக்கும் நன்றி. இந்த விவகாரத்தில் இதுவே என்னுடைய கருத்து. மேலும் நான் மீண்டும் இந்த விவகாரம் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிக்க மாட்டேன்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: மாஸ்டர் படக்குழுவுடன் பிறந்தநாள் கொண்டாடிய லோகேஷ் கனகராஜ்!

'துள்ளுவதோ இளமை' படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பிரபலமானவர் நடிகை ஷெரின். இதையடுத்து தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிப் படங்களில் நடித்துள்ளார். பிறகு திரைத் துறையை விட்டு சற்று விலகியிருந்த ஷெரின், பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மீண்டும் படங்களில் நடிக்கத் தயாராக இருக்கிறேன் என்றார். இதற்கிடையில் அந்நிகழ்ச்சியில் தனது சகப் போட்டியாளரான தர்ஷனை இவர் காதலிப்பதாகக் கிசுகிசுக்கப்பட்டது.

இதையடுத்து தர்ஷன் தனக்கு காதலி இருக்கிறார் என்று சொன்னதையடுத்து பிரச்னை சரியானது. பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு இவ்விகாரம் தொடர்பாக தர்ஷனின் காதலியான சனம் ஷெட்டி காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதில் தர்ஷன் தன்னை ஏமாற்றிவிட்டதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். இதற்கு ஷெரின் தான் காரணம் என்று சமூக வலைதளங்கில் கிசுகிசுக்கப்பட்டது.

இந்நிலையில் இது தொடர்பாக நீண்ட நாள்களாக எந்தப் பதிலும் அளிக்காத நிலையில், ஷெரின் தற்போது சனம் ஷெட்டியை மறைமுகமாகத் தாக்கிப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ''என்னை யாராவது தாக்க வேண்டும் என்றால் தாராளமாகச் செய்யலாம், அதற்கு நான் கையெழுத்து போட்டுத் தருகிறேன். என்னை மோசமான பெயர்களால் அழைப்பதை நான் சிரிப்புடன் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் இதில் என் குடும்பத்தை விட்டுவிடுங்கள்.

மற்றவர்கள் மீது முறையாக குறை சொல்ல கற்றுக் கொள்ளுங்கள். நான் அமைதியாக இருப்பதை என்னுடைய பலவீனமாக நினைக்க வேண்டாம். இந்த விவகாரத்தில் நான் இல்லாததால் தான் இத்தனை நாள்களாக எதுவும் பேசாமல் இருக்கிறேன்.

இரண்டு பேர் பிரேக்அப் செய்து கொள்வதை விட, இவ்வுலகில் நிறைய பிரச்னைகள் உள்ளன. எனக்கு ஆதரவாய் நின்ற அனைத்து ஆதரவாளர்களுக்கும் நன்றி. இந்த விவகாரத்தில் இதுவே என்னுடைய கருத்து. மேலும் நான் மீண்டும் இந்த விவகாரம் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிக்க மாட்டேன்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: மாஸ்டர் படக்குழுவுடன் பிறந்தநாள் கொண்டாடிய லோகேஷ் கனகராஜ்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.