சமந்தா - நாக சைதன்யா இருவரும் 2017ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்துகொண்டனர். திருமண வாழ்க்கையில் கிசுகிசுக்கப்புகள் ஏதுமின்றி வாழ்க்கை நடத்திவந்த நிலையில், கடந்த சில வாரங்களாக இருவரும் பிரிந்து வாழ்ந்துவருவதாக தகவல்கள் வெளியாகின. அதன்படியே செப்.2ஆம் தேதி இருவரும் பிரிவதாக அறிவித்தனர்.
இந்த நிலையில் கங்கனா ராணாவத், "இந்த அறிவிப்புக்கு பாலிவுட்டின் விவாகரத்து நிபுணர் என அறியப்படும் உச்ச நட்சத்திரம் ஒருவர்தான் காரணம். அவரை சந்தித்த பின்னரே நாக சைதன்யா இந்த முடிவை எடுத்துள்ளார்" எனப் பதிவிட்டுள்ளார். 'லால் சிங் சட்டா' படத்தில் ஆமீர்கானுடன் நாக சைதன்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இது ஒருபுறமிருக்க நடிகர் சித்தார்த் தனது ட்விட்டர் பக்கத்தில், "ஏமாற்றுபவர்கள் ஒருபோதும், முன்னேற மாட்டார்கள் என்று எனது பள்ளி ஆசிரியர் சொல்லிக் கொடுத்துள்ளார்" எனக் குறிப்பிட்டிருந்தார். இதற்கு சமந்தா ரசிகர் ஒருவர் "ஒரு முற்போக்கான நபராகவும், பெண்ணியவாதியாகவும் நீங்கள் எவ்வளவு காலம் முகமூடி அணிந்திருப்பீர்கள்? சமந்தா மட்டுமில்லை, யாரும் உங்களுடன் இருக்கமுடியாது” எனக் குறிப்பிட்டுள்ளார். சமந்தா, சித்தார்த் இருவரும் காதலித்துவந்ததாக சில ஆண்டுகளுக்கு முன்பு தகவல்கள் பரவிவந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 11 வருட காதல்... ஐந்தாண்டு இல்லறம்: முடிவுக்கு வந்த உறவு