சென்னை: ரஜினியின் அடுத்த படத்தை தேசிங் பெரியசாமி இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் தேசிங் பெரியசாமி. துல்கர் சல்மான், ரிது வர்மா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்த இத்திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது. தற்போது ரஜினியின் அடுத்த படத்தை தேசிங் பெரியசாமி இயக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
திரைத்துறையில் ரஜினி ரசிகர்கள் பலர் இருந்தாலும், நாடி நரம்பு ரத்தம் சதையெல்லாம் ரஜினி வெறி ஊறிப்போன ரசிகர்கள் சிலரே. ‘பேட்ட’ தந்த கார்த்திக் சுப்பராஜ் அந்த ரகத்தை சேர்ந்தவர்; அதேபோல்தான் தேசிங் பெரியசாமி. இவர் எந்த அளவுக்கு ரஜினி ரசிகர் என்றால், ரஜினியால்தான் நான் திரையுலகில் இருக்கிறேன் என முதல் படத்திலேயே கார்ட் போட்டு நன்றி தெரிவிக்கும் அளவுக்கு ரசிகர்.
இவர் தற்போது ரஜினியின் அடுத்த படத்தை இயக்குகிறார் என தகவல் வெளியானது ரஜினி ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.