சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். அவரது இறப்பிற்கு ரசிகர்கள், திரை பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அனைவரது மனதிலும் நீங்கா இடம்பெற்றுள்ள பாடும் நிலா மறைந்தது சொல்லொணாத் துயரை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் காணொலி வாயிலாக எஸ்பிபிக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
![rajinikanth tweet](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/8933908_raji.jpg)
அதில், "இன்று எல்லோருக்கும் ரொம்ப சோகமான நாள். கடைசி நிமிடம் வரை உயிருக்காகப் போராடிய எஸ்.பி. பாலசுப்பிரமணியம் நம்மை விட்டுப்பிரிந்தார். அவருடைய பிரிவு மிகுந்த வேதனையையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது. ரொம்ப நல்ல மனிதர், சிறியவர், பெரியவர் என்ற பாகுபாடு பார்க்காத நேசமானவர்.