ETV Bharat / sitara

விழிப்புடன் இருங்கள் - கணவர் கைதுக்குப்பின் ஷில்பா ஷெட்டியின் உருக்கமான பதிவு

ஆபாச பட விவகாரத்தில் தனது கணவர் ராஜ் குந்த்ரா கைது செய்யப்பட்டதையடுத்து, விழிப்புணர்வுடன் இருங்கள் என நடிகை ஷில்பா ஷெட்டி முதன்முதலாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

author img

By

Published : Jul 23, 2021, 2:53 PM IST

Shilpa
Shilpa

மும்பை: நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவரும், தொழிலதிபருமான ராஜ் குந்த்ரா, ஆபாசப் படங்களைத் தயாரித்து, விநியோகித்த வழக்கில் மும்பை காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார்.

ஆபாச படப்பதிவேற்ற விவகாரம் தொடர்பாக நடிகை ஷில்பா ஷெட்டியிடமும் காவலர்கள் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இச்சம்பவம் பாலிவுட் திரையுலகில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது தனது கணவர் கைதுக்குப் பிறகு முதல் முறையாக ஷில்பா ஷெட்டி, தனது இன்ஸ்டாகிராமில், புத்தகத்தின் பக்கத்தைப் பகிர்ந்துள்ளார்.

Shilpa
ஷில்பா ஷெட்டியின் இன்ஸ்டாகிராம் பதிவு

அதில், கோபத்தில் திரும்பிப் பார்க்க வேண்டாம் அல்லது பயத்தில் முன்னோக்கி பார்க்க வேண்டாம். ஆனால், சுற்றி விழிப்புணர்வுடன் இருங்கள். நான் உயிருடன் இருப்பதற்கு நற்பேறு பெற்றவன் என்பதை அறிந்து ஆழ்ந்த மூச்சு விடுகிறேன்.

நான் கடந்த கால சவால்களில் இருந்து தப்பித்தேன். எதிர்காலத்தில் சவால்களில் இருந்து தப்பிப்பேன். இன்று என் வாழ்க்கையை வாழ்வதில் இருந்து என்னை திசை திருப்ப எதுவும் தேவையில்லை' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஆபாச படங்கள் Vs விபச்சாரம்: ராஜ் குந்த்ராவை கலாய்க்கும் இணையவாசிகள்

மும்பை: நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவரும், தொழிலதிபருமான ராஜ் குந்த்ரா, ஆபாசப் படங்களைத் தயாரித்து, விநியோகித்த வழக்கில் மும்பை காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார்.

ஆபாச படப்பதிவேற்ற விவகாரம் தொடர்பாக நடிகை ஷில்பா ஷெட்டியிடமும் காவலர்கள் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இச்சம்பவம் பாலிவுட் திரையுலகில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது தனது கணவர் கைதுக்குப் பிறகு முதல் முறையாக ஷில்பா ஷெட்டி, தனது இன்ஸ்டாகிராமில், புத்தகத்தின் பக்கத்தைப் பகிர்ந்துள்ளார்.

Shilpa
ஷில்பா ஷெட்டியின் இன்ஸ்டாகிராம் பதிவு

அதில், கோபத்தில் திரும்பிப் பார்க்க வேண்டாம் அல்லது பயத்தில் முன்னோக்கி பார்க்க வேண்டாம். ஆனால், சுற்றி விழிப்புணர்வுடன் இருங்கள். நான் உயிருடன் இருப்பதற்கு நற்பேறு பெற்றவன் என்பதை அறிந்து ஆழ்ந்த மூச்சு விடுகிறேன்.

நான் கடந்த கால சவால்களில் இருந்து தப்பித்தேன். எதிர்காலத்தில் சவால்களில் இருந்து தப்பிப்பேன். இன்று என் வாழ்க்கையை வாழ்வதில் இருந்து என்னை திசை திருப்ப எதுவும் தேவையில்லை' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஆபாச படங்கள் Vs விபச்சாரம்: ராஜ் குந்த்ராவை கலாய்க்கும் இணையவாசிகள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.